இப்பொழுதுள்ள அரசியல்வாதிகள் அனைவரும் தயவு செய்து வீடுகளுக்குச் செல்லுங்கள். புதியவர்களிடம் நாட்டை கையளியுங்கள்.
இலங்கையிலுள்ள தற்போதைய அரசியல்வாதிகள் ஓய்வுப் பெற வேண்டுமென்றும், அவர்களுக்குப்
பதிலாகப் புதியவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமென, பேராயர் கர்தினால் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் மிலானோ நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதிகமாகவே இலங்கை வெளிநாடுகளில் கடனைப் பெற்றுள்ளது. அதேப்போல் இப்போது இருக்கும் அனைவரும் தயவு செய்து வீடுகளுக்குச் செல்லுங்கள். புதியவர்களிடம் நாட்டை கையளியுங்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் இன்னும் எமக்குத் தெரியாது. யார் இதன் பின்னணியில் உள்ளனர். நடந்ததை வெளியே கூறாமல் மறைப்பவர்கள் யார்? ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என மக்களுக்குத் தெரியும். மக்கள் தான் நீதிபதிகள். அவர்கள் நீதிபதியின் கதிரையின் அமரும் நாள் சீக்கிரமாகவே வரும் என்று தெரிவித்துள்ளார்.“
அத்துடன் இதன்போது மக்கள் உரிய தீர்ப்பை வழங்கி, இவர்களின் நாடகத்தையம் நிறைவு செய்ய வேண்டும் என்றும் பேராயர் கர்தினால் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இப்பொழுதுள்ள அரசியல்வாதிகள் அனைவரும் தயவு செய்து வீடுகளுக்குச் செல்லுங்கள். புதியவர்களிடம் நாட்டை கையளியுங்கள்.
Reviewed by Madawala News
on
June 25, 2019
Rating: