போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரணத் தண்டனை நிறைவேற்ற வேண்டிய நாள் தனக்கு
தெரியுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில், உள்நாட்டு வெளிநாட்டு ஊடகப் பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றத்துக்காக சிறையில் இருப்பவர்கள், சிறையில் இருந்துகொண்டு தொடர்ச்சியான அச் செயற்பாட்டை முன்னெடுப்பார்களாயின், அவர்களுக்கு மரணத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
1976 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை நாட்டில் மரணத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரணத் தண்டனை நிறைவேற்ற வேண்டிய நாள் தனக்கு தெரியும்.
Reviewed by Madawala News
on
March 06, 2019
Rating: