சட்ட விரோதமான முறையில் தங்க நகைகளை எடுத்து வர முற்பட்ட வெளிநாட்டு விமான சேவை ஒன்றில் கடமையாற்றும் இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (11) காலை 10 மணியளவில் டோஹாவில் இருந்து வருகை தந்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 664 என்ற விமானத்தின் மூலம் குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 21,500,000 ரூபா பெறுமதியான 4 கிலோ 43 கிராம் எடையுடைய தங்க வளையல்கள் 423 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான சேவையில் வேலை செய்யும் நபர் 2 கோடி பெறுமதியான தங்க நகைகளை கொண்டுவந்து சிக்கினார்.
Reviewed by Madawala News
on
March 11, 2019
Rating: