அமைச்சர் சஜித் பிரேமதாசவால் அல்-அக்பர் முஸ்லிம் மகா வித்தியாலத்திற்கு பஸ் வண்டி அன்பளிப்பு.


- முனீரா அபூபக்கர் -
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அம்பலாந்தோட்டை அல்-அக்பர் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு சென்ற திங்கட்கிழமை (18) பாடசாலையின் பயன்பாட்டிற்காக பஸ் வண்டி ஒன்றினை அன்பளிப்புச் செய்தார்.


அமைச்சரினால்; 38 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள சகல வசதிகளையும் கொண்ட பஸ் வண்டி ஒன்று வழங்கப்பட்டது.  அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இதுவரை 15 பஸ் வண்டிகள் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் சேர்த்து இது 16 ஆக உயர்ந்துள்ளது.


இந்த நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.என்.எம். நௌஷாட் தலைமையில நடைபெற்றது.

இந்நிகழ்வில் மீன்பிடி, நீரியல் வளத்துறை இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி, பிரதேசத அரசியல்வாதிகளும் கல்வி அதிகாரிகளும் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.








அமைச்சர் சஜித் பிரேமதாசவால் அல்-அக்பர் முஸ்லிம் மகா வித்தியாலத்திற்கு பஸ் வண்டி அன்பளிப்பு. அமைச்சர் சஜித் பிரேமதாசவால்  அல்-அக்பர் முஸ்லிம் மகா வித்தியாலத்திற்கு பஸ் வண்டி அன்பளிப்பு. Reviewed by Madawala News on February 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.