சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பேசும் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றவரே ஜனாதிபதியாக வேண்டும்.


தமிழ் மொழியில் தெளிவு பெற்ற ஒருவரே, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படல் வேண்டும்
என, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் கூறியுள்ள அவர்,

தற்போது, நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை இழந்தே செயற்பட்டு வருவதாகவும் இந்தச் சூழ்நிலைக்கு அமைய, ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்தமை, சட்டவிரோதமானது என்று, நீதிமன்றமே உறுதிப்படுத்தியுள்ளமையால், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, அவர் வலியுறுத்தியுள்ளார்

அத்தோடு, சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள்  பேசும் தமிழ் மொழி  தொடர்பில், தெளிவு பெற்ற ஒருவரே, ஜனாதிபதியாக பதவிக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார். 
சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பேசும் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றவரே ஜனாதிபதியாக வேண்டும். சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள்  பேசும் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றவரே ஜனாதிபதியாக வேண்டும். Reviewed by Madawala News on January 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.