அவர்களுக்கு அசாத் சாலியின் மயிரையும் அசைக்க முடியாது..



தன் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர இருப்பவர்களால்  
அசாத் சாலியின்  மயிரையும் பிடுங்க முடியாது என மேல் மாகாண ஆளுனர் அஸாத் சாலி குறிப்பிட்டார்.

கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்கவை சந்தித்த அவர் கொழும்பு நகர் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் தன் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர இருப்பவர்களால்  அசாத் சாலியின்  மயிரையும் பிடுங்க முடியாது என குறிப்பிட்டார்.

மேலும் திருடர்கள் சிலரே தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர உள்ளதாக கூறிய அவர் நடக்காத விடயத்தை பேசி வேலை இல்லை என குறிப்பிட்டார்.

அசாத் சாலி என்பவர் 1982 இல் அரசியலுக்கு வந்து 1991  இல் தேர்தலில் போட்டியிடுவதாகவும் இதுவரை காலமும் தன் மீது எவரும் விரல் நீட்டி குற்றம் கூறவில்லை என குறிப்பிட்டார்.
அவர்களுக்கு அசாத் சாலியின் மயிரையும் அசைக்க முடியாது.. அவர்களுக்கு அசாத் சாலியின்  மயிரையும் அசைக்க முடியாது.. Reviewed by Madawala News on January 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.