லக்ஸ்டோ மீடியா நேற்வேர்க் ஶ்ரீ லங்கா, அகில இன நல்லுறவு ஒன்றியம் இலங்கை தமிழ் எழுத்தாளர்
சங்கத்தோடு இணைந்து ஏற்பாடு செய்த திறமைக்கான தேடல் விருது வழங்கும் நிகழ்வு நேற்று கலைஞரும் அறிவிப்பாளருமான மருதூர் ஏ.எல்.அன்சார் தலைமையில் கல்முனை சாஹிறா கல்லூரி காரியப்பர் மண்பத்தில் இடம் பெற்றது.
இதன்போது இறக்காமம் அய்மன் கலைமன்றத்தின் தலைவரும் ருடே சிலோன் ஊடக வலையமைப்பினுடைய பணிப்பாளருமான தேசாபிமானி எஸ்.எம்.சன்சீர் அவர்களுக்கு தேசமானிய தேச கீர்த்தி பட்டம் பிரத அதிதியக கலந்து கொண்ட மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.ரி. நவாஸ் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது இந்நிகழ்'வில் கௌரவ அதிதிகளாக சட்டம் ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களும் அதிதிகளாக மாவட்டக் கலாச்சார உத்தியோகத்தர் ரி.என்.ரின்சான், கலாச்சார உத்தியோத்தர் ஏ.எச்.அம்ஜத், டொப் குயின் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எச்,எம்.றஜாயி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
லக்ஸ்டோ மீடியா நேற்வேர்க் ஶ்ரீ லங்கா, அகில இன நல்லுறவு ஒன்றியம் இணைந்து திறமைக்கான தேடல் விருது .
Reviewed by Madawala News
on
January 13, 2019
Rating: