வீடியோ இணைப்பு... பாதையை விட்டு விலகி வீட்டுற்குள் நுழைந்த கண்டைனர் லாரி... இருவர் பலி


ஜா-எல, வெலிகம்பிட்டிய பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.


கொழும்பில் இருந்து நீர்கொழும்பு திசை நோக்கி அதிவேகமாக பயணித்த கொள்கலன் ஒன்று பாதையை விட்டு விலகி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் விபத்துக்குள்ளான கொள்கலன் வீடொன்றின் தாப்பையை உடைத்துக் கொண்டு வீட்டுற்குள் நுழைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பாதையோரமாக இருந்த 32 வயதுடைய ஒருவரும் கொள்கலனின் உதவியாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்கலனின் உதவியாளர் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன், சாரதி றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோ செய்தி.
https://www.youtube.com/watch?v=KVSWHGU_pAg
வீடியோ இணைப்பு... பாதையை விட்டு விலகி வீட்டுற்குள் நுழைந்த கண்டைனர் லாரி... இருவர் பலி வீடியோ இணைப்பு...  பாதையை விட்டு விலகி  வீட்டுற்குள் நுழைந்த கண்டைனர் லாரி... இருவர் பலி Reviewed by Madawala News on January 05, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.