வீட்டுக்குள் ஏற்பட்ட மோதலில் அம்பலாந்தோட்டை பகலபெரகம பிரதேசத்தில் மகன் தந்தையை
கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பூச்சாடி ஒன்றினால் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த தந்தை ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார்.
அம்பலாந்தோட்டை பகலபெரகம பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
தந்தை கொலை செய்யப்பட்டுள்ளதுடன், தாயையும் தாக்கி, தாயின் முடியை வெட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
35 வயதுடைய சந்தேக நபரான மகன் தற்போது தலைமறைவாகியுள்ளதுடன், சந்தேக நபரை தேடி அம்பலந்தொட காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பதிவான வீடியோ
வீடியோ இணைப்பு... தந்தையை பூச்சாடியால் அடித்து கொன்ற மகன்.
Reviewed by Madawala News
on
January 12, 2019
Rating: