(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் புதிய பொறுப்பு வைத்திய அதிகாரியாக மருதமுனையைச்
சேர்ந்த டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி இன்று(28-12-2018)தனது கடமையைப் பொறுப்பெற்றார்.
இவர் 1971.01.01ஆம் திகதி மருதமுனையில் பிறந்தார்.மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் உயர்தரம் வரை கற்று மருத்தவத்துறைக்குத் தெரிவாகி கொழும்;பு களணி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்தார்.
அதன் பின் 2000.04.01ஆம் திகதி டொக்டராக முதல் நியமனம் பெற்று மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையேற்று 2003ஆம் ஆண்டுவரை அங்கு கடமையாற்றினார்.அதைத் தொடர்ந்து 2003ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டுவரை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் கடமையாற்றினார்.
பின்னர் 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டுவரை ஓம்மான் நாட்டின் இரணுவ வைத்திய சாலையில் கடமையாற்றினார்.அங்கிருந்து வருகைதந்து மீண்டும் மருதமுனை வைத்திய சாலையில் கடமையாற்றிய நிலையிலேயே இவர் மருதமுனை பிதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையைப் பொறுப்பெற்றுள்ளார்.
இவர் மருதமுனையைச் சேர்ந்த அப்துல் றகுமான் ஆயிஷா தம்பதியின் புதல்வராவார்.
மருதமுனை பிதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டொக்டர் ஏ.எல்.எம்.மிஹ்ழார் சாய்ந்தமருது வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக இன்று(28-12-2018)தனது கடமையைப் பொறுப்பெற்றார்.
மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் புதிய பொறுப்பு வைத்திய அதிகாரியாக டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி நியமனம்.
Reviewed by Madawala News
on
December 28, 2018
Rating: