பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு... ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள
மனு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு மாலை 5 மணிக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கபட்ட நிலையில் சற்றுமுன் அது தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
டிசம்பர் 7 ஆம் திகதி வரை குறித்த இடைக்கால தடை உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் டிசம்பர் 4, 5, 6 திகதிகளில் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரதம நிதியரசர் நலின் பெரேரா தலைமையில் நீதியரசர்களான பிரசன்ன ஜனவர்தன மற்றும் ப்ரியந்த ஜயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இடைக்காலத்தடையுத்தரவு இன்று மாலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு... ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Reviewed by Madawala News
on
November 13, 2018
Rating: