பொரலஸ்கமுவ, விக்ரமரத்ன பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விபத்தையடுத்து கைது
செய்யப்பட்ட பெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொரலஸ்கமுவ, விக்ரமரத்ன பகுதியில் கார் ஒன்றும் ஜீப் ரக வாகனம் ஒன்றும் மோதியதில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண் வைத்தியர் வாகனத்தை செலுத்தும் போது மது போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்ததுடன், வைத்திய அறிக்கையில் அவர் மது அருநத்தியிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மது போதையில் வாகனம் செலுத்தி பொலிஸ் பரிசோதகரை மோதி கொன்ற பெண் வைத்தியருக்கு மீண்டும் சிறைவாசம்.
Reviewed by Madawala News
on
October 09, 2018
Rating: