2025 ஆண்டு வரையில் நாட்டை முன்னடத்தி செல்ல வேண்டியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி தெரிவித்துள்ளது.
குருநாகல் பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது குறித்த முன்னணியின் தலைவர் சாந்த பண்டார இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த தேர்தலின் போது அதிக சக்தியை பெற்றுக்கொண்டிருப்பதாகவும் ஆனால் அதன் மூலம் அக்கட்சி நாட்டின் தேசிய சக்தியாக முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் தோல்வியடைந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
2025 ஆண்டு வரையில் நாட்டை முன்னடத்தி செல்ல வேண்டியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே...
Reviewed by Madawala News
on
September 11, 2018
Rating: