பயணியிடம் இருந்து 18 இலட்ச தங்கம் மீட்பு.


18 இலட்ச  ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க
சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கோலாலம்பூரில் இருந்து இலங்கைக்கு வந்த UL 319 விமானத்தில் வருகை தந்த 28 வயதுடைய நபரே நேற்று (12) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 290.25 கிராம் நிறையுடைய 9 துண்டு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



இவை சுமார் 1,886,625 ரூபா பெறுமதி உடையவை எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் அவரது பைகள், உள்ளாடை மற்றும் காலணிகளில் மறைத்தே தங்கத்தை இலங்கைக்குள் கடத்த முற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பயணியிடம் இருந்து 18 இலட்ச தங்கம் மீட்பு. பயணியிடம் இருந்து 18 இலட்ச தங்கம் மீட்பு. Reviewed by Madawala News on July 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.