கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில், சிறுத்தையொன்றை படுகொலைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டில்,
அப்பகுதியைச் சேர்ந்த இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரும் உதயநகரை சேர்ந்தவர்கள் என்றனர்.
சிறுத்தை படுகொலை விவகாரம்.. இருவர் கைது.
Reviewed by Madawala News
on
June 24, 2018
Rating: