மடவளை பஸார் பாடசாலை வீதி, ( அஸ்மி அவர்களின் வீட்டின் பின்பக்கம்) சப்பக்கல் பிரதேசத்தில்
இன்றுகாலை நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கபட்டுள்ளார்.
சுமார் 64 வயது மதிக்கத்த ஹரீஸ் நானா என அழைக்கப்படும் நபரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை இவரின் மனைவி ஜனாஸா வீடொன்றுக்கு சென்று இருந்த நிலையில் இரு மகன்களும் வேலைக்கு சென்றுள்ளனர்.
ஒரு மகன் வேலையில் இருந்து திரும்பி வந்த போது தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து தாய் மற்றும் தம்பிக்கு விடயத்தை அறிவித்துள்ளார்.
போலீசார் காலத்துக்கு விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் சுகயீனம் காரணமாக பல நாட்களாக வீட்டை விட்டு வெளியில் வராமல் வீட்டினுள் இருந்து வந்தார் என தெரிய வருகிறது.
மடவளை பஸார் பாடசாலை வீதியில் ஹரீஸ் என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு.
Reviewed by Madawala News
on
June 14, 2018
Rating: