நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை, நாவலப்பிட்டி பிரதான வீதியில் நேற்று மாலை
இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனுமதிப் பத்திரமின்றி பசு மாடுகள் இரண்டை கொண்டுசென்ற லொறி ஒன்றும், அப்பகுதியினூடே பயணித்த வான் ஒன்றும் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
லொறியின் சாரதி மதுபோதையில் இருந்ததாகவும், பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் எதிரே வந்த வானுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மாடுகளையும், லொறியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், லொறியின் சாரதியையும் உதவியாளரையும் கைது செய்துள்ளனர்.
அத்துடன், குறித்த விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்டவர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மதுபோதையில் வாகனத்தை செலுத்தி, சட்டவிரோத மாடுகளை கொண்டு சென்றவருக்கு ஏற்பட்ட நிலை.
Reviewed by Madawala News
on
April 26, 2018
Rating: