மட்டக்களப்பு முகத்துவாரம் வெளிச்சவீட்டு பகுதியில் வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற பிரான்ஸ்
நாட்டு பெண் ஒருவர் மீது பாலியல் சேட்டை விடுத்த 17 வயது சிறுவன் ஒருவரை நேற்று (17) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
சுற்றுலா வந்த குறித்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் கடந்த வியாழக்கிழமை வெளிச்ச வீட்டு பகுதியில் துவச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தபோது குறித்த சிறுவன் அவர் மீது பாலியல் சேட்டை விடுத்ததாக அந்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளதையடுத்து குறித்த சிறுவனை நேற்று மாலை பொலிசார் கைது செய்தனர்.
இச்சம்பத்திவத்தில் கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சிறுவன் மீது பொலிசில் முறைப்பாடு செய்த பிரான்ஸ் பெண். #மட்டக்களப்பு.
Reviewed by Madawala News
on
March 17, 2018
Rating: