ரணிலை காப்பாற்றுவது முஸ்லிம் MP க்களின் தலையாய கடமை..!

பிரதமர் ரணில் அவர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு செய்தசேவைகளுக்காக, அவருக்கு ஆதரவாக வாக்களிப்பது
நமது முஸ்லிம் தலைவர்களின் கடமையாகும்.

பிரதமர் ரணில் அவர்கள் மூலம் தீர்க்கப்பட்ட எங்களின் பிரச்சினைகளின் வரிசைப் பட்டியல் இதோ 

#தம்புள்ள பள்ளிவாசலுக்கு தீர்வை பெற்றுத் தந்தது?

#அளுத்கமை பிரச்சினைக்கு விசாரணை நடத்தி நீதியை பெற்றுத்தந்தது?

#கிராண்பாஸ் பள்ளிவாசலுக்கு தீர்வை பெற்றுத்தந்தது?

#தெகிவளை பாத்தியா பள்ளிவாசலை கட்டுவதற்கு அனுமதி எடுத்து தந்தது?

#இனவாதத்துக்கு துணைபோகின்ற ஞானசாரா அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தது?

#மாயக்கல்லில் வைத்த சிலையை ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அகற்றித் தந்தது?

#வர்த்தமானிமூலம் மரிச்சிக்கட்டி மக்களின் காணிகள் பறிபோனபோது, ரிசாட் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அதனை மீட்டுத் தந்தது?

#பொத்திவில் மக்களின் பயிர் செய்கை காணிகளை வனபிரதேசமாக அறிவிக்கப்பட்டதை பிரதமர் ரணில் அவர்களுக்கு நமது தலைவர்கள் எத்திவைத்தபோது அதனை உடனடியாக தீர்த்தது?

#நுரைச்சோலை வீட்டுத்திட்டத்துக்கு தீர்வை பெற்றுத் தந்ததற்கு?

#கிந்தோட்டை பிரச்சினை ஏற்பட்டபோது பிரதமர் என்றவகையில் உடனடியாக செயல்பட்டு முஸ்லிம்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாமல் தடுத்ததற்கு?

#அதனையும் மீறி நடந்த அசம்பாவிதங்களுக்கு அரசபடைகளில் உள்ள சிலபேர் காரணம் என்று அறிந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்கு?

#அம்பாரையில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து பிணையில் வரமுடியாத சட்டத்தில் அவர்களை கைதுசெய்ய வைத்ததற்கு?

#ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக பிரதமர் அம்பாரைக்கு வந்து பாதிக்கப்பட்ட இடங்களையும், பள்ளிவாசலையும் பார்வையிட்டதற்கு?

#அதே நேரம் அம்பாரைக்கு வரக்கூடாது என்றவர்களின் கட்டளையை நிராகரித்து மிகத்தைரியமாக அம்பாரைக்கு சென்று பாதிக்கப்பட்ட பள்ளிவாசளை பார்வையிட்டதற்கு?

#கண்டி திகன பகுதிகளில் ஏற்படப் போகும் பதட்டநிலையறிந்து ஹக்கீமும், ரிசாட் அவர்களும் பிரதமர் ரணில் அவர்களுக்கு அறிவித்தவுடன் உடனடியாக செயல்பட்டு கலவரத்தை ஒருசில மணித்தியாலங்களுக்குள் அடக்கியதற்கு?

#அதனையும் மீறி நடந்த ஒரு சில சம்பவங்களுக்கு வருத்தம் தெறிவித்தது மட்டுமல்ல, உடனடி நிவாரணம் வழங்கி அந்த மக்களைக் காப்பாற்றியதற்கு?

#அந்த கலவரத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக சந்தேகித்து சில பொலிசாருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தற்கு?

இப்படிப்பட்ட இன்னும் எவ்வளவோ சேவைகளைச் செய்த பிரதமர் ரணில் அவர்களுக்கு எதிராகவரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக நமது தலைவர்களும், அவர்களை பின்பற்றும் உறுப்பினர்களும் எப்படி வாக்களிக்காமல் இருக்கமுடியும்?

ஆகவே நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி பட்டங்களுக்கு அடிமைப்பட்டிருந்தாலும், உரிமை விடயத்தில் அவர்கள் எதனையும் இழக்கத்தயார் நிலையில்தான் இருக்கின்றார்கள்.இருந்தாலும் முஸ்லிம் சமூகத்துக்கு இவ்வளவு சேவைகளையும் செய்த பிரதமர் ரணில் அவர்களை இந்தநேரத்தில் காப்பாற்றுவது அவர்களின் கடமையல்லவா?

எம்.எம்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
ரணிலை காப்பாற்றுவது முஸ்லிம் MP க்களின் தலையாய கடமை..!  ரணிலை  காப்பாற்றுவது முஸ்லிம் MP க்களின் தலையாய கடமை..! Reviewed by Madawala News on March 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.