மலேசியாவில் நடைபெற்ற 40 வயதின் மேல், உலகளாவிய உயரம் பாய்தல் போட்டியில் இலங்கையை சேர்ந்த ஆசிரியர் ஹுமாயூன் தங்கப் பதக்கம் வென்றார்.



35th Malasiya International open Masters Athletics Championships 2023

மலேசியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வயதின் மேல், உலகளாவிய உயரம் பாய்தல் போட்டியில் புத்தளம் ஷாஹிரா தேசிய பாடசாலையின் ஆசிரியர் MFM Humayoon முதலிடமும்,

ஆசிரியர் MFM துபைல் அவர்கள் உலகளாவிய 200மீட்டர் ஓட்டபோட்டியில் இரண்டாமிடமும் பெற்று ஊருக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்திருக்கின்றார்கள்
ஆசிரியர் ஹுமாயூன் மாற்றும் துபைல் ஆகியோர் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் ஆசிரியள் மற்றும் இருவருமே சகோகதர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

35th Malasiya International open Masters Athletics Championships 2023

M.F.M.Humayoon
High Jump
Gold Medal

M.F.M.Thufail
200m
Silver Medal

INTERNATIONAL OPEN MASTERS ATHLETICS
2023

M F.M.HUMAYOON
GOLD MEDAL
1st Place

M. F. M. Humayoon ஆசிரியர் சாஹிரா ஈன்றெடுத்த சிறந்ததொரு உடற்கல்வி ஆசிரியர் ஆவார். விளையாட்டுத் துறையில் குறிப்பாக சாஹிரா கல்லூரியின் உதைப்பந்தாட்டத் துறையில் தனக்கென தனியான இடத்தை பிடித்தவர். சாஹிரா கல்லூரியின் புகழும் பெருமிதமும் தேசிய மட்டத்தில் உதைப்பந்தாட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அவர் மலேசியாவில் பெற்றுக் கொண்ட வெற்றி அவரது தனிப்பட்ட வெற்றிக்கப்பால் இன்று சர்வதேச அரங்கில் சாஹிராவின் வெற்றியாக புத்தளத்தின் வெற்றியாக அவர் பார்க்கிறார்.
ما شاء الله الحمد لله
வாழ்த்துக்கள். Congratulations
மலேசியாவில் நடைபெற்ற 40 வயதின் மேல், உலகளாவிய உயரம் பாய்தல் போட்டியில் இலங்கையை சேர்ந்த ஆசிரியர் ஹுமாயூன் தங்கப் பதக்கம் வென்றார். மலேசியாவில் நடைபெற்ற 40 வயதின் மேல், உலகளாவிய உயரம் பாய்தல் போட்டியில்  இலங்கையை சேர்ந்த ஆசிரியர் ஹுமாயூன் தங்கப் பதக்கம் வென்றார். Reviewed by Madawala News on September 17, 2023 Rating: 5

VIDEO : எதிர்வரும் உலக கிண்ண தொடரில் சம்பியனாகும் வாய்ப்பு, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு உள்ளது. இலங்கை மற்றும் தென் ஆபிரிக்காவும் சிறப்பாக விளையாடுகின்றன.



இந்தியாவில் அடுத்த மாதம் 50 ஓவர் உலக கிண்ண தொடர் இடம்பெறவுள்ளது.


இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.



இந்த தொடரின் ஆரம்ப போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோதவுள்ளன.



இந்திய அணி தனது ஆரம்ப போட்டியில் அவுஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது.



உலக கிண்ண தொடருக்கு இன்னும் சுமார் 20 நாட்களே உள்ள நிலையில் பல முன்னாள் வீரர்கள் உலக கிண்ண தொடரில் சம்பியன் பட்டம் வெல்லும் அணி, அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் உள்ளிட்டவை குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.



இந்த உலக கிண்ண தொடரில் சம்பியன் பட்டம் வெல்ல தகுதியுள்ள இரு அணிகள் எவை என்பவை குறித்து இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,



இந்திய அணி இந்த உலக கிண்ண தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக கருதுகிறேன். ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர்கள் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதோடு தற்போது இடம்பெற்று வரும் ஆசிய கிண்ண தொடரிலும் இந்திய அணியினர் சிறப்பாக செயல்பட்டு வருவதால் உலக கிண்ண தொடரிலும் சாதிக்க அதிக வாய்ப்புள்ளது.



தற்போதுள்ள இந்திய அணி அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் என சரியான கலவையில் அமைந்துள்ளதால் சொந்த மைதானத்தில் கிண்ணத்தை கைப்பற்ற இந்திய அணிக்கு அதிக வாய்ப்புள்ளது.



இந்திய அணியை அடுத்து இங்கிலாந்து அணிக்கு அதிகப்படியான வாய்ப்பு இருக்கிறது.



ஏனென்றால் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியினர் தொடர்ச்சியான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.



சமீபத்திய தொடர்களில் கூட மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வரும் வேளையில் இந்தியாவில் நடக்கும் இந்த உலக கிண்ண தொடரிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சம்பியன் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என ஆசிய கிண்ணத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதும் இலங்கை அணியும்,
ஒரு நாள் போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை காட்டும் தென்னாபிரிக் அணியும் உலகக் கிண்ணத்தில் சிறப்பாக பிரகாசிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
VIDEO :
VIDEO : எதிர்வரும் உலக கிண்ண தொடரில் சம்பியனாகும் வாய்ப்பு, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு உள்ளது. இலங்கை மற்றும் தென் ஆபிரிக்காவும் சிறப்பாக விளையாடுகின்றன. VIDEO : எதிர்வரும் உலக கிண்ண தொடரில் சம்பியனாகும் வாய்ப்பு, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு உள்ளது. இலங்கை மற்றும் தென் ஆபிரிக்காவும் சிறப்பாக விளையாடுகின்றன. Reviewed by Madawala News on September 16, 2023 Rating: 5

இலங்கைக்கு சென்ற தனது மனைவியும் மகனும் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பவில்லை என நபர் ஒருவர் முறைப்பாடு.



இலங்கைக்கு வந்த தனது மனைவியும் மகனும் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பவில்லை என ஜப்பானிய தந்தை ஒருவர் இலங்கை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையை சேர்ந்த தனது மனைவியும் மகனும் ஜப்பானில் வசித்து வருவதாகவும் அவர்கள் கடந்த ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கு வந்த நிலையில் தற்போது வரையில் அவர்கள் நாடு திரும்பவில்லை என தந்தை முறைப்பாடளித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட ஜப்பானியரால் மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு அனுப்பப்பட்டுள்ளதுடன் இந்த முறைப்பாடு சுற்றுலா பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் இருவரும் ஒகஸ்ட் 22 ஆம் திகதி ஜப்பானுக்கு திரும்ப வேண்டியவர்கள் எனவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பில் சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கைக்கு சென்ற தனது மனைவியும் மகனும் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பவில்லை என நபர் ஒருவர் முறைப்பாடு. இலங்கைக்கு சென்ற தனது மனைவியும் மகனும் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பவில்லை என நபர் ஒருவர் முறைப்பாடு. Reviewed by Madawala News on September 16, 2023 Rating: 5

காதலுக்கு பெற்றோர் மறுப்பு - காதலியின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய காதலன், 5 பேர் காயம் #இலங்கை



காதலுக்கு மறுப்பு - காதலியின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய காதலன், 5 பேர் காயம் #இலங்கை

யாழ்ப்பாணம், தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதோடு வீட்டு உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.


குறித்த தாக்குதலில் ஐந்து பேர் காயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


உடும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் உள்ள யுவதியை காதலித்ததாகவும் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறிய போது பெற்றோர் மறுத்திருந்த நிலையில் குறித்த இளைஞன் தனது குழுவினருடன் வந்து இன்று அதிகாலை வீட்டினை தாக்கி சேதப்படுத்தி வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


-யாழ். நிருபர் பிரதீபன்-
காதலுக்கு பெற்றோர் மறுப்பு - காதலியின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய காதலன், 5 பேர் காயம் #இலங்கை காதலுக்கு பெற்றோர் மறுப்பு - காதலியின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய காதலன், 5 பேர் காயம் #இலங்கை Reviewed by Madawala News on September 16, 2023 Rating: 5

பணம் அச்சிடுவதற்கு அரசாங்கத்துக்கு இருந்த வாய்ப்பு கடுமையாக தடைப்பட்டது.



புதிய மத்திய வங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டதினூடாக பண அச்சிடல் செய்வதற்கு அரசாங்கத்துக்கு இருந்த வாய்ப்பு கடுமையாக தடைப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.



இந்தச் சட்டத்தினூடாக மத்திய வங்கியை மேலும், சுயாதீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



புதிய மத்திய வங்கி சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கி தொடர்ந்து சுதந்திரமாக இருக்கும் என்பதே இதன் சிறப்பு அம்சமாகும். பண அச்சிடல் என்பது கடந்த காலங்களில் பேசுபொருளாக இருந்தது. புதிய மத்திய வங்கிச் சட்டத்தின்படி, பணத்தை அச்சிடுமாறு மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுப்பதற்கு அரசாங்கத்துக்கு இருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



இதேவேளை, இந்த சட்டத்தின் மூலம் திறைசேரி செயலாளர் மத்திய வங்கியின் நிர்வாக சபையில் பங்குபற்றுவதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்
பணம் அச்சிடுவதற்கு அரசாங்கத்துக்கு இருந்த வாய்ப்பு கடுமையாக தடைப்பட்டது. பணம் அச்சிடுவதற்கு அரசாங்கத்துக்கு இருந்த வாய்ப்பு கடுமையாக தடைப்பட்டது. Reviewed by Madawala News on September 16, 2023 Rating: 5

ஜம்மியதுல் உலமாவிற்கு விஜயம் செய்த ஜூலி சங்



2023.09.14ஆம் திகதி, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தரப்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகளுக்கும் அந்நாட்டு தூதுவர் ஜூலி சங் இற்குமிடையில் சிநேகபூர்வ சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொள்கைகள், குறிக்கோள்கள்; சமூகம் தொடர்பிலான பணிகள்; தேசியம் மற்றும் சர்வதேசம் சார்ந்த முன்னெடுப்புக்கள், நல்லுறவுகள் பற்றிய அறிமுகங்கள் இந்த சந்திப்பின்போது அமெரிக்க தூதுவருக்கு வழங்கப்பட்டன.


குறித்த நிகழ்வில் ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி கடந்த காலங்களில் சமூகம் மற்றும் தேசியம் சார்ந்து ஜம்இய்யா எவ்வாறான பணிகளை, செயற்பாடுகளை செய்திருக்கிறது என்பது பற்றிய தெளிவுகளை வழங்கியதோடு கலந்துகொண்டிருந்த நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் தெளிவுகளை வழங்கினர். 


இந்த சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அகில ஜம்இய்யத்துல் உலமா சமூகம் தொடர்பில் மேற்கொள்ளும் முன்னெடுப்புக்கள், பணிகளை தான் மதிப்பதாக தெரிவித்ததோடு மனித நேயப்பணி, நல்லிணக்கம் ஆகியவற்றிற்காக ஒன்றாக செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். 


இந்நிகழ்வில் அமெரிக்க தூதரகம் சார்பில் அந்நாட்டு தூதுவர் ஜூலி சங் மற்றும் அவரது பிரதிநிதிகளான நஸ்ரின் மரிக்கார், ரூபி வூட்சைட் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் தலைவர் அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச்செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் கலாநிதி அஹ்மத் அஸ்வர், உபதலைவர்களுள் ஒருவரான அஷ்ஷைக் ஏ.எம்.எம். கலீல் ஆகியோர் கலந்துகொண்டதுடன் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அஷ்ஷைக் எம்.எம்.எம். முர்ஷித், அஷ்ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், அஷ்ஷைக் எஸ்.எல். நவ்பர், அஷ்ஷைக் எம்.எப்.எம். பாழில், அஷ்ஷைக் எம்.ரிபாஹ் ஹஸன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஜம்மியதுல் உலமாவிற்கு விஜயம் செய்த ஜூலி சங் ஜம்மியதுல் உலமாவிற்கு விஜயம் செய்த ஜூலி சங் Reviewed by Madawala News on September 15, 2023 Rating: 5

நான் ஏன் பேத்தி பார்த்திமா ஹீமாவை விஷ ஊசி செலுத்தி கொலை செய்தேன் - பாட்டி நாகபூசணி பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலம் #இலங்கை



  பு.கஜிந்தன்

பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேத்திக்கு விஷ ஊசி செலுத்தி நானே கொலை செய்தேன். கொலை செய்த பின்னர் நானும் உயிர்மாய்த்துக்கொள்ள ஊசியை செலுத்திக்கொண்டேன் என, 12 வயது சிறுமியின் பாட்டி,பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். 


யாழ் . திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விடுதி அறையில் இருந்து 12 வயது சிறுமி சடலமாகவும் 55 வயதான பெண்ணொருவர் சுயநினைவற்ற நிலையிலும்  செவ்வாய்க்கிழமை (12) மீட்கப்பட்டனர். 


சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட பெண், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் பின் உடல்நலம் தேறிய நிலையில் அவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர், 


 பொலிஸ் விசாரணையின் போது,


தனது பெயர் நாகபூசணி (வயது 55) எனவும் தான் ஒரு மருத்துவ தாதியாக கடமையாற்றியவர் எனவும் கூறியுள்ளார். அத்துடன் தனது பேத்தியின் பெயர் பார்த்திமா ஹீமா (வயது 12) என தெரிவித்துள்ளார். 


" நான் மருத்துவ தாதியாக பணியாற்றியுள்ளேன். எனது மகள் முஸ்லிம் இளைஞன் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டாள்.  அவர்களுக்கு பிறந்த குழந்தைதான் பார்த்திமா ஹீமா (வயது 12)   அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். அதன் போது அவர்களது பிள்ளை என்னுடன் வளர்ந்து வந்தேன்.


சில காலத்தில் இருவரும் வெவ்வேறு திருமணம் செய்து   வாழ சென்று விட்டனர். பேத்தி என்னுடன் வளர்த்து வந்தார். இந்நிலையில் , பேத்தியின் தகப்பன், தனது பிள்ளையை தன்னுடன் , அனுப்புங்கள் , நான் வளர்க்கிறேன் என கூறி எனது பேத்தியை அழைத்து சென்று விட்டார். 


பேத்தி என்னை விட்டு பிரிந்ததும், அவளின் பிரிவு துயரம், அவளின் எதிர்காலம் எப்படி இருக்க போகுதோ என்ற கவலையும் எனக்கு ஏற்பட்டது. அதனால் நான் சில மாதங்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்தேன், 


கடந்த சில தினங்களுக்கு முன்னர் , திருகோணமலைக்கு சென்று , எனது பேத்தியின் தந்தையிடம் , சில நாட்கள் பேத்தி என்னுடன் இருக்கட்டும், வீட்டுக்கு கூட்டி போய் சில நாட்களில் மீண்டும் அழைத்து வந்து விடுகிறேன் என கூறி பேத்தியை அழைத்துக்கொண்டு, யாழ்ப்பாணம் வந்தேன். 


யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் பேத்திக்கு மருத்துவம் செய்ய வந்துள்ளோம் என கூறி அந்த மருத்துவ மனைக்கு அருகில் உள்ள தங்குமிடத்தில் அறையை வாடகைக்கு பெற்று, தங்கி இருந்தோம். 


அப்போது, பேத்தியின் எதிர்காலம் எப்படி இருக்க போகுதோ என்ற கவலையில் பேத்தியை கொலை செய்து விட்டு , நானும் உயிரை மாய்த்துக்கொள்வோம் என முடிவெடுத்தேன். 


அறையில் பேத்தியை விட்டு விட்டு , அருகில் உள்ள மருந்தகத்திற்கு சென்று தூக்க மாத்திரை உள்ளிட்ட மாத்திரைகளையும் ஊசியையும் (சிறிஞ்) வாங்கினேன். என்னிடம் மருத்துவ தாதி என்பதற்கான அடையாள அட்டை இருந்தமையால் , அதனை காட்டி மருந்துகளை வாங்கினேன். 


அறைக்கு வந்து பேத்திக்கு தூக்க மாத்திரைகளை போட கொடுத்து , அவள் தூங்கிய பின்னர் மருந்துகளை கலந்து ஊசி மூலம் அவளின் உடலில் செலுத்தினேன். 


பின்னர் நானும் அதனை எனக்கு செலுத்திக்கொண்டேன். ஊசி ஏற்றியதில் அவள் இறந்து விட்டாள் , நான் காப்பாற்றப்பட்டு விட்டேன்" என தெரிவித்துள்ளார். 


அதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளின் பின்னர் உயிரிழந்த சிறுமியின் பாட்டியை   யாழ்.நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (14) பொலிஸார்  முற்படுத்திய போது , அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 


அதேவேளை , " எங்கள் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை. எங்களை வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டாம்" என சிறுமியின் பாட்டி பொலிஸாருக்கு எழுதிய கடிதமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

நான் ஏன் பேத்தி பார்த்திமா ஹீமாவை விஷ ஊசி செலுத்தி கொலை செய்தேன் - பாட்டி நாகபூசணி பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலம் #இலங்கை நான் ஏன் பேத்தி பார்த்திமா ஹீமாவை  விஷ ஊசி செலுத்தி  கொலை செய்தேன் - பாட்டி நாகபூசணி பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலம் #இலங்கை Reviewed by Madawala News on September 15, 2023 Rating: 5

NOLIMIT ONLINE வழங்கும் Free Delivery சலுகை .



NOLIMIT ONLINE வழங்கும் Free Delivery சலுகை
ரூபாய் 3000 இற்கு மேற்பட்ட அணைத்து கொள்வனவுகளுக்கும்.

செப்டம்பர் 16ம் ,17ம் திகதிகளில்.

உங்கள் Wardrobeஐ புத்தம் புது design, கண்கவர்,ஆடை அணிகலன்களால்  update செய்ய தகுந்த தருனம்

நோலிமிட் காட்சியறைகளில் exchange பண்ண கூடிய வசதி | நாடளாவிய டிலிவரி வசதி | koko மற்றும் mintpay தவணை கொடுப்பனவு வசதி 

*நிபந்தனைக்களுக்குட்பட்டது.
NOLIMIT ONLINE வழங்கும் Free Delivery சலுகை . NOLIMIT ONLINE   வழங்கும்    Free Delivery சலுகை . Reviewed by Madawala News on September 15, 2023 Rating: 5

ரவூப் ஹக்கீம் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம் - உருவ பொம்மைகள் எரிப்பு.



பாறுக் ஷிஹான் & ஹுதா உமர் -

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது எனவும், தலைவர் அஷ்ரபின் நினைவு தினத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது எனவும் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசளுக்கு முன்னால் ஜும்மா தொழுகையை தொடர்ந்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  



நாளை (16) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரபின் 23 வது நினைவு நாள் சாய்ந்தமருதில் தேசிய நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது என்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


பொதுசேவை ஆணைக்குழு முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரஸின் கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளருமான ஏ.எல்.எம். சலீம், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், கடந்த உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்கள், ஏனைய கட்சிகளின் முக்கியஸ்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள் உட்பட பொதுமக்களின் ஒரு பகுதியினர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட பிரமுகர்கள் எதிராக கோசம் எழுப்பினர். 



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர்களின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.


சாய்ந்தமருது பொலிஸார் வீதி போக்குவரத்தை சீர்செய்துடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். கோஷமெழுப்பிய போராட்டகாரர்கள் சிறிது நேரத்தின் பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர்



ரவூப் ஹக்கீம் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம் - உருவ பொம்மைகள் எரிப்பு. ரவூப் ஹக்கீம் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம் - உருவ பொம்மைகள் எரிப்பு. Reviewed by Madawala News on September 15, 2023 Rating: 5

காலி வீதியை மறிக்கும் வகையில் அடிதடி - நான்கு பெண்களும் எட்டு ஆண்களும் கைது.



காலி வீதியை மறிக்கும் வகையில் தகராறில் ஈடுபட்ட 12 பேர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.



கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பெண்களும் எட்டு ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.



வட்டிப் பணப் பரிவர்த்தனையே தகராறுக்குக் காரணம் எனக் கூறிய பொலிஸார், இரு தரப்பிலும் தாக்கப்பட்டதில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.



உறவினர்களுக்கிடையில் இந்த முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவர்களும் கொறலவெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்
காலி வீதியை மறிக்கும் வகையில் அடிதடி - நான்கு பெண்களும் எட்டு ஆண்களும் கைது. காலி வீதியை மறிக்கும் வகையில் அடிதடி - நான்கு பெண்களும் எட்டு ஆண்களும் கைது. Reviewed by Madawala News on September 15, 2023 Rating: 5

அடுத்த வருடம் நாட்டில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறையும் - மீண்டும் விலை அதிகரிப்பு ஏற்படாது ; விவசாய அமைச்சர்



எதிர்காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறையும்; முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படாது – கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர


அடுத்த வருடம் முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் வீழ்ச்சி அடையும் எனவும், மீண்டும் விலை அதிகரிப்பு ஏற்படாது எனவும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதன்படி, அடுத்த வருடம் முதல் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர,

“கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியில் நம்நாடு தன்னிறைவு பெற்றிருந்தாலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட கொவிட் நோய்த் தொற்று நிலைமையும், பொருளாதார நெருக்கடி காரணமாகவும் மற்றும் கால்நடைத் தீவன உற்பத்தி குறைந்ததன் விளைவாகவும் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி குறைந்தது.

சுமார் 3,420,000 புதிய கோழிக் குஞ்சுகள் தற்போது கோழிப் பண்ணைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலும், அந்தக் கோழிகள் டிசம்பர் மாதத்திற்குள் முட்டையிடும் பருவத்திற்கு வளர்ந்துவிடும். எனவே எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குப் பின்னர், இந்த நாட்டில் முட்டை உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என குறித்த தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோழிப் பண்ணைகளுக்குத் தேவையான தீவன உற்பத்திக்காக சோளத்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை இந்தத் தொழில்துறையினருக்கு வழங்கியுள்ளோம். எதிர்காலத்தில் எமது மக்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.
இடைக் கால, கால்நடை அபிவிருத்தித் திட்டத்தின் படி, வட மாகாணத்தில் கால்நடை வளத்தை மேம்படுத்தும் பணிகளை வலுவூட்டுவதற்கான திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக செலவிடப்பட்ட தொகை 37 மில்லியன் ரூபாவாகும்.

சிறிய மற்றும் நடுத்தரக் கோழிப் பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு நாள் வயதுடைய நாட்டுக் கோழிக் குஞ்சுகளை வழங்குதல், கிராமப்புறங்களில் முட்டை உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் போசாக்கை அதிகரிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக 48 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் தொற்று காரணமாக, உள்நாட்டுக் கோழி இறைச்சி உற்பத்தி 30% சதவீதத்தினால் குறைந்துள்ளது.

ஆனால், தற்போது பிராய்லர் கோழிக் குஞ்சுகள் அதிக அளவில் பண்ணைகளுக்கு சேர்க்கப்படுவதால், இந்த ஆண்டு இறுதிக்குள், நம் நாட்டின் கோழி இறைச்சி உற்பத்தி, முந்தைய நிலைக்கு திரும்பலாம் என, குறித்த தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதிக்குள் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்டுகின்றது.
அடுத்த வருடம் நாட்டில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறையும் - மீண்டும் விலை அதிகரிப்பு ஏற்படாது ; விவசாய அமைச்சர் அடுத்த வருடம் நாட்டில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறையும் - மீண்டும் விலை அதிகரிப்பு ஏற்படாது ; விவசாய அமைச்சர் Reviewed by Madawala News on September 15, 2023 Rating: 5

கஞ்சா எமது கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்தது..



கஞ்சா எமது கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்தது ஒன்று என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் டயனா கமகே குறிப்பிட்டார்.


இலங்கையில் மருத்துவ தேவைக்காக கஞ்சா பயிரிடுவதை சட்டமாக்க தானே முன்னின்று செயற்பட்டதாக கூறிய அவர் அதற்காக தான் பெருமை அடைவதாகவும் கூறினார்.இன்று பலரும் தாங்கள் தான் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தை செய்ததாக கூற முற்படுவதாகவும் அவர் கூறினார்.


எனது  குழந்தைக்கு பல தந்தைகள் உள்ளனர் ஆனால் குழந்தையின் தாய் நான் மாத்திரமே என அவர் குறிப்பிட்டார்.


எதிர்வரும் வாரம் மருத்துவத்த தேவைக்காக ஏற்றுமதி செய்வதற்கு கஞ்சா பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்படும் என கூறிய அவர் அது இலங்கை வரலாற்றில் முக்கியமான நாள் என அவர் கூறினார்.

கஞ்சா எமது கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்தது.. கஞ்சா எமது கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்தது.. Reviewed by Madawala News on September 15, 2023 Rating: 5

அலி சப்ரி ரஹீம் அரசாங்கத்திற்கு சொந்தமான 214 ஏக்கர் காணியை பல வருடங்களாக சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்துள்ளமை அம்பலம் - அரசுக்கு 20 கோடி ரூபா நட்டம்.



புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அரசாங்கத்திற்கு சொந்தமான 214 ஏக்கர் காணியை பல வருடங்களாக சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.



புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இது குறித்து வௌிப்படுத்தப்பட்டுள்ளது.



மேலும் அந்த நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்று உப்பு உற்பத்திக்காக பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



எவ்வாறாயினும், சுமார் 14 வருடங்களாக இந்தக் காணியிலிருந்து அரசாங்கத்திற்கு வரி செலுத்தப்படாமையால் சுமார் 20 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தெரியவந்துள்ளது.



இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படும் என புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிந்தக மாயதுன்ன தெரிவித்துள்ளார்
அலி சப்ரி ரஹீம் அரசாங்கத்திற்கு சொந்தமான 214 ஏக்கர் காணியை பல வருடங்களாக சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்துள்ளமை அம்பலம் - அரசுக்கு 20 கோடி ரூபா நட்டம். அலி சப்ரி ரஹீம் அரசாங்கத்திற்கு சொந்தமான 214 ஏக்கர் காணியை பல வருடங்களாக சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்துள்ளமை அம்பலம் - அரசுக்கு 20 கோடி ரூபா நட்டம். Reviewed by Madawala News on September 14, 2023 Rating: 5

காணாமல் போன மாணவன் முஹம்மத் அனூஸை கண்டுபுடிக்க உதவுவோம்.



காணாமல் போன மாணவனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை கோரல்

குருநாகல், கல்கமுவ தம்புத்த சேர்ந்த முஹம்மத் அனூஸ் என்ற பதினாறு வயதுச் சிறுவனைக் காணவில்லை என, கடந்த 11ம் திகதி தவுலகல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கண்டி, தஸ்கர பிரதேசத்தில் இயங்கி வரும் அரபு கல்லூரியான அல்-ஹக்கானியாவில் இருந்து கடந்த ஒன்பதாம் திகதி மாலை 4 மணியளவில் வீடு செல்வதாக வெளியேறியுள்ளதாக கல்லூரி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் குறித்த மாணவன் இதுவரைக்கும் வீடு வந்து சேரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கடைசியாக கெலிஓயா பகுதியில் மாலை 05.15 மணியளவில் சிசிடிவி கமராவில் குறித்த மாணவன் அங்கிருப்பது பதிவாகியுள்ளது.

குறித்த மாணவனை கண்டுபிடிக்க பொலிசார் மற்றும் ஊர் மக்கள் தேடுதலினை ஆரம்பித்துள்ளனர். குறித்த மாணவனை அடையாளம் காண முடிந்தால் தந்தை முஹம்மத் நிஸ்தார் 0774917915 அல்லது 0774956581 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காணாமல் போன மாணவன் முஹம்மத் அனூஸை கண்டுபுடிக்க உதவுவோம். காணாமல் போன மாணவன் முஹம்மத் அனூஸை கண்டுபுடிக்க உதவுவோம். Reviewed by Madawala News on September 14, 2023 Rating: 5

NOLIMIT ONLINE Casual Wear Week !



NOLIMIT ONLINE Casual Wear Week!!!
சமுகத்தில் எடுப்பான தோற்றத்தினை தந்திடும் ஆண்கள் மற்றும் பெண்கள் Casual Wear ஆடைகளை ரூபாய் 5,000 இற்கு மேல் NOLIMIT ONLINEஇல்
( www.nolimit.lk ) கொள்வனவு செய்து 15% விலைக்கழிவினை பெறுங்கள்.

செப்டம்பர் 14ம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 

நோலிமிட் காட்சியறைகளில் exchange பண்ண கூடிய வசதி | நாடளாவிய டிலிவரி வசதி | koko மற்றும் mintpay தவணை கொடுப்பனவு வசதி. 

*நிபந்தனைக்களுக்குட்பட்டது.



NOLIMIT ONLINE Casual Wear Week ! NOLIMIT ONLINE Casual Wear Week ! Reviewed by Madawala News on September 14, 2023 Rating: 5

பதினொரு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஆங்கில ஆசிரியர் ஒருவர் குருநாகல் பிரதேசத்தில் கைது.



குருநாகல் நகரிலுள்ள பிரதான கலப்புப் பாடசாலையொன்றில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் பதினொரு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் ஆங்கில ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பொத்துஹெர பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஐம்பத்தைந்து வயதுடைய குறித்த ஆசிரியர் தொடர்பில் பெற்றோர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபர் தனது பாடத்தை கற்பிக்கும் போது வகுப்பில் உள்ள மாணவிகளுக்கு விஷேட கவனம் செலுத்தி மாணவிகளின் உடலை தொட்டு, அழுத்தி, அந்தரங்க பகுதிகளை தொட்டு துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.


இந்த தினசரி துஷ்பிரயோகம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் இது தொடர்பாக குருநாகல் பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினொரு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஆங்கில ஆசிரியர் ஒருவர் குருநாகல் பிரதேசத்தில் கைது. பதினொரு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஆங்கில ஆசிரியர் ஒருவர் குருநாகல் பிரதேசத்தில் கைது. Reviewed by Madawala News on September 14, 2023 Rating: 5

1982 இல் கொழும்பு நகரில் சிங்கள மக்கள் தொகை 51%, 2012 இல் இது 28% ஆகிவிட்டது ; கம்மன்பில தெரிவிப்பு



1982 இல் கொழும்பு நகரில் சிங்கள மக்கள் தொகை 51% ஆக இருந்தது. 2012 இல் இது 28% ஆகி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


இந்நிலையில்
"இந்த கருத்து பொய்யானது " என Fact Check தெரிவித்துள்ளது.

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி 1981 இல் கொழும்பு நகரில் 51% ஆக இருந்த சிங்கள மக்கள் தொகை 2012 இல் 28% ஆகக் குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் .உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் இருந்து வந்த தமிழ், முஸ்லிம் மக்களே இந்த வேறுபாட்டை உருவாக்கியுள்ளனர் என்றும் இவர் மேலும் கூறுகிறார்.


இது தொடர்பில் உண்மைச் சரிபார்ப்பு நிறுவனம் Fact check மேற்கொண்ட விசாரணையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் கம்மன்பில முன்வைத்த புள்ளிவிபரங்கள் சரியானவை அல்ல என தெரியவந்துள்ளது.


சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கொழும்பு நகரை இலக்கு வைத்து மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவில்லை என்பது முதலாவது விடயம்.


சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் முழு கொழும்பு மாவட்டம் மற்றும் கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பு தொடர்பான புள்ளிவிபரத் தரவுகளையே கொண்டுள்ளது.

அதன்படி, 1982 ஆம் ஆண்டளவில், கொழும்பு மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,698,322 ஆக இருந்தது.


இவர்களில் 1,322,658 பேர் சிங்களவர்கள். அதன்படி, 1981 ஆம் ஆண்டு நிலவரப்படி, கொழும்பு மாவட்டத்தில் வசித்த சனத்தொகையில் 71.89% சிங்களவர்கள்.


2012 இன் படி, கொழும்பு மாவட்டத்தில் வாழும் மொத்த மக்கள் தொகை
23, 24349 ஆகும். இவர்களில் 1,778,971 பேர் சிங்களவர்கள். அதன்படி, 2012 ஆம் ஆண்டு வரை கொழும்பு மாவட்டத்தில் வாழும் சிங்கள மக்களின் வீதம் 76.54% ஆகும்.


அத்துடன் கொழும்பு மாநகர சபையின் அதிகார எல்லையை எடுத்துக் கொண்டால், 1981 இல் மொத்த மக்கள் தொகை 585,776 ஆக இருந்தது. இவர்களில் 293,600 அல்லது 50.12% சிங்களவர்கள்.


2012 இல், கொழும்பு மாநகரசபையின் அதிகார வரம்பிற்குள் வாழ்ந்த மொத்த மக்கள் தொகை 561,314 ஆகும். இவர்களில் 206,282 அல்லது 36.79% சிங்களவர்கள்.
1982 இல் கொழும்பு நகரில் சிங்கள மக்கள் தொகை 51%, 2012 இல் இது 28% ஆகிவிட்டது ; கம்மன்பில தெரிவிப்பு 1982 இல் கொழும்பு நகரில் சிங்கள மக்கள் தொகை 51%,  2012 இல் இது 28% ஆகிவிட்டது ; கம்மன்பில தெரிவிப்பு Reviewed by Madawala News on September 14, 2023 Rating: 5

நான் தெரிவித்த விடயங்களை சனல் – 04 திரிபுபடுத்தியுள்ளது



சனல் – 04 தொலைக்காட்சி தனது கருத்துக்களை திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாக சுவிட்சர்லாந்துக்கான முன்னாள் இலங்கை தூதுவர் சரத்கோன்கஹகே தெரிவித்துள்ளார்.



உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஆவணப்படம் தொடர்பில், தான் தெரிவித்த கருத்துக்களையே சனல் -04 திரிபுபடுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில், கடந்த வருடம் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளை, 


இலங்கையின் ஊடகவியாலாளரும் பிரிட்டிஸ் பிரஜையுமான பராஸ் சவுகெட்டாலி தன்னிடம் பேட்டி வழங்குமாறு கேட்டிருந்தார்.


பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் ஐ,டி,என், தொலைக்காட்சிக்கு பேட்டி வழங்குமாறு அவர் கோரியிருந்தார்.


எனினும், தான் வழங்கிய பேட்டியின் குரல் பதிவு முற்றிலும் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த தாக்குதல் முற்றுமுழுதாக ஐ,எஸ்,ஐ,எஸ், தீவிரவாதிகளின் நடவடிக்கையென்றே தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


2005 மற்றும் 2010 காலத்தில் மஹிந்த ராஜபக்க்ஷ எப்படி தேர்தலில் வெற்றிபெற்றாரென அவர்கள் என்னை கேட்டனர். அவர் அந்த தருணத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தலைவராக காணப்பட்டாரென நான் தெரிவித்திருந்தேன்.


அவர்கள் இந்த இரண்டு பகுதிகளை மாத்திரம் பேட்டிக்கு பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் தூதுவர், இலங்கை ஊடகங்களின் கோப்பு படங்களிலிருந்து சில படங்களை சனல் 04 பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


அவர்கள் இங்கு வந்து அந்த படம் பிடிக்கவில்லை உள்ளுர் ஊடகமொன்றே அதனை வழங்கியதாகவும் சரத்கோன்கஹகே தெரிவித்துள்ளார்.


2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல்களை மையமாக கொண்டு இலங்கையின் அரசியல் நிலை குறித்து உரையாடும் விதத்தில் பிரிட்டனின் ஐ,டி,என், என்னை ஏமாற்றியுள்ளது. 


2022,12, 22 ஆம் திகதி மாதிவெலயிலுள்ள எனது வீட்டில் வைத்து, நான் தெரிவித்த விடயங்கள் சனல் 4 இல் வெளியாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


பிரிட்டனை தளமாக கொண்ட ஐடிஎன் ஊடக நிறுவனமே அந்த பேட்டியை எடுத்துள்ளதாக நான் நினைத்தேன். சனல் 04 அதனை ஒளிப்பரப்பும் வரை அவர்கள்தான், அந்த பேட்டியை எடுத்துள்ளனர் என்பது எனக்கு தெரியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் தெரிவித்த விடயங்களை சனல் – 04 திரிபுபடுத்தியுள்ளது நான் தெரிவித்த விடயங்களை சனல் – 04 திரிபுபடுத்தியுள்ளது Reviewed by Madawala News on September 14, 2023 Rating: 5

இனிமேல் ராக்கிங் செய்தால் 076 545 3454 என்ற இலக்கத்திற்கு அறிவியுங்கள் - சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிவிப்பு.



 இலங்கையில் பல்கலைக்கழகங்களில், உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடி வதை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு பொலிஸ் விஷேட தொலைபேசி இலக்கத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.


இது தொடர்பான தகவல்களை 076 545 3454 என்ற கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.    

இனிமேல் ராக்கிங் செய்தால் 076 545 3454 என்ற இலக்கத்திற்கு அறிவியுங்கள் - சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிவிப்பு. இனிமேல் ராக்கிங் செய்தால் 076 545 3454 என்ற இலக்கத்திற்கு அறிவியுங்கள் -  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிவிப்பு. Reviewed by Madawala News on September 14, 2023 Rating: 5

கொழும்பு உட்பட பிரதேசங்களில் மழையுடனானா காலநிலை.


1:45 Pm ( 14th Sep )

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் புத்தளம், கண்டி, நுவரேலியா,காலி மற்றும்

மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.


காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஹமபாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.


ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.


மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் ஹமபாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 - 45 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


கடல் பிராந்தியங்களில்

****************************

புத்தளம் தொடக்கம் கொழும்பு,காலி, மாத்தறை ஊடாக ஹமபாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.


சிலாபம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் ஹமபாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.


புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹமபாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.0 ‐ 2.5 m உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


மொஹமட் சாலிஹீன்,

சிரேஸ்ட வானிலை அதிகாரி.


கொழும்பு உட்பட பிரதேசங்களில் மழையுடனானா காலநிலை. கொழும்பு உட்பட பிரதேசங்களில் மழையுடனானா காலநிலை. Reviewed by Madawala News on September 14, 2023 Rating: 5

சட்டத்தரணியாவது உங்கள் கனவா? இதோ அரிய வாய்ப்பு!



 சட்டத்தரணியாவது உங்கள் கனவா?

இதோ அரிய வாய்ப்பு!
சர்வதேச அங்கீகாரம் பெற்ற Buckinghamshire New University UK பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை இளமானி கற்கை நெறியை பூர்த்தி செய்து சட்டத்துறைக்கு நுழையும் உங்கள் கனவை நினைவாக்குங்கள்.
LLB(Hons) UK September Intake
𝗥𝗲𝗴𝗶𝘀𝘁𝗿𝗮𝘁𝗶𝗼𝗻𝘀 𝗮𝗿𝗲 𝗡𝗼𝘄 𝗢𝗽𝗲𝗻..!
👇👇👇
🎓⚖Obtain a Prestigious British Law Degree LLB (Hons) Awarded by Buckinghamshire New University which is approved and recognized
by THE INCORPORATED COUNCIL OF LEGAL EDUCATION and UNIVERSITY GRANTS COMMISSION is Now a demanding and trending law qualification in the market which leads to a successful pathway towards Master of Laws (LLM).
✅ *WES Recognized.*
✅ 𝗨𝗚𝗖 𝗔𝗽𝗽𝗿𝗼𝘃𝗲𝗱.
✅ 𝗨𝗽𝗼𝗻 𝗖𝗼𝗺𝗽𝗹𝗲𝘁𝗶𝗼𝗻 𝗖𝗮𝗻 𝗦𝗶𝘁 𝗳𝗼𝗿 𝗔𝘁𝘁𝗼𝗿𝗻𝗲𝘆 𝗘𝘅𝗮𝗺𝗶𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝘀.
✅ 𝗘𝘅𝗲𝗺𝗽𝘁𝗶𝗼𝗻𝘀
𝗙𝗼𝗿 𝗚𝗿𝗮𝗱𝘂𝗮𝘁𝗲 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁.
✅ 𝗕𝗿𝗶𝘁𝗶𝘀𝗵 𝗟𝗲𝘃𝗲𝗹 6 𝗤𝘂𝗮𝗹𝗶𝗳𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻.
✅ 𝗙𝗹𝗲𝘅𝗶𝗯𝗹𝗲 𝗣𝗮𝘆𝗺𝗲𝗻𝘁 𝗣𝗹𝗮𝗻.
👉𝗥𝗲𝗴𝗶𝘀𝘁𝗿𝗮𝘁𝗶𝗼𝗻𝘀 𝗮𝗿𝗲 𝗡𝗼𝘄 𝗢𝗽𝗲𝗻 𝗖𝗼𝗻𝘁𝗮𝗰𝘁/𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽
0778 677 777
*Whatsapp link:*↙️
சட்டத்தரணியாவது உங்கள் கனவா? இதோ அரிய வாய்ப்பு!  சட்டத்தரணியாவது உங்கள் கனவா?   இதோ அரிய வாய்ப்பு! Reviewed by Madawala News on September 14, 2023 Rating: 5

பிரியாணி ‘ருசி’ இல்லை எனக்கூறியவர் அடித்துக்கொ* லை.


பிரியாணி ‘ருசி’ இல்லை எனக்கூறியவர் அடித்துக்கொ* லை.
பிரியாணி ‘ருசி’ இல்லை எனக்கூறியவர் அடித்துக்கொ* லை. பிரியாணி ‘ருசி’ இல்லை எனக்கூறியவர் அடித்துக்கொ* லை. Reviewed by Madawala News on September 14, 2023 Rating: 5

சிறுமியின் கை அகற்றப்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் மொபைல் தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடு.



யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கையடக்க தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.



இதனை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,



வைத்தியசாலைக்குள் அத்தியாவசிய தேவையின்றி, கையடக்க தொலைபேசியை பயன்படுத்த படம் மற்றும் காணொளி பதிவு செய்வதற்கும் சமுக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.



நோயாளர்களின் நலன் கருதி, இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், நோயாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு தவறான முறையில் 'கெணுலா' பொருத்தப்பட்டமையால் குறித்த சிறுமியின் இடது கை மணிக்கட்டுக்கு கீழ் பகுதி அகற்றப்பட்டுள்ளது.



இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தாதியர்களின் கவன குறைவினாலையே சிறுமியின் கை அகற்றப்பட்டதாக பல தரப்பினராலும், குற்றச்சாட்டப்படுகின்றது.



இந்த சம்பவம் தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் கையடக்க தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
சிறுமியின் கை அகற்றப்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் மொபைல் தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடு. சிறுமியின் கை அகற்றப்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் மொபைல் தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடு. Reviewed by Madawala News on September 14, 2023 Rating: 5

சர்வதேச விசாரணை கோருவோர் தீவிரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் ..



ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணை கோருவோர் தீவிரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் என பிவிதுரு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.


மேலும் கருத்து வெளியிட்ட அவர் ..


ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணை கோருகிறார்கள்.இது மிகவும் ஆபத்தான் விடயம்.ஈஸடர் தாக்குதலுடன் தொடர்புடைய  தற்போது 45 பேர் சிறையில் உள்ளனர்.சர்வதேச விசாரணைக்கு சென்றால் உள்நாட்டு விசாரணைகளில் நம்பகம் இல்லை என கூறி தற்போது சிறையில் உள்ளவர்கள் பிணையில் வெளியே வர வாய்ப்புள்ளது என அவர் குறிப்பிட்டார்.


சர்வதேச விசாரணை கோருவோர் தீவிரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் .. சர்வதேச விசாரணை கோருவோர் தீவிரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் .. Reviewed by Madawala News on September 14, 2023 Rating: 5

ரஷ்யா நடத்திவரும் புனித போருக்கு எந்த விதமான ஆதரவை வழங்கவும் நாம் தயார் ; வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் அறிவிப்பு .



அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன், ரஷ்ய ஜனாதிபதி நடத்திய தனிப்பட்ட சந்திப்பு நிறைவடைந்தது.



ரஷ்யாவின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சென்றுள்ளார் .



பரஸ்பர நல்லுறவிற்காக சுமார் 4-லிருந்து 5 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை, நிறைவடைந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



இதற்கு முன்னர், ரஷ்யாவின் தென் கிழக்கில் உள்ள ரஷ்யாவின் முக்கிய விண்வெளி மையமான வோஸ்டோச்னி காஸ்மோடிரோம் தளத்தில் வட கொரிய ஜனாதிபதியை வரவேற்ற ரஷ்ய ஜனாதிபதி, அங்குள்ள பல முக்கிய அம்சங்களை வட கொரிய ஜனாதிபதிக்கு சுற்றி காண்பித்தார்.



இதற்கு பிறகு தூதர்கள் அளவிலான சந்திப்புகள் இடம்பெற்றன.



இருவரின் இந்த தனிப்பட்ட சந்திப்பிற்கு முன்னதாக ரஷ்ய-உக்ரைன் போரை மறைமுகமாக குறிப்பிடும் விதமாக, "ரஷ்யா தனது பாதுகாப்பிற்காக மேற்கொண்டு வரும் புனித போரில், அந்நாட்டிற்கு தேவைப்படும் முழுமையான, நிபந்தனையற்ற ஆதரவை வட கொரியா வழங்கும்" என கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்
ரஷ்யா நடத்திவரும் புனித போருக்கு எந்த விதமான ஆதரவை வழங்கவும் நாம் தயார் ; வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் அறிவிப்பு . ரஷ்யா நடத்திவரும் புனித போருக்கு எந்த விதமான ஆதரவை வழங்கவும் நாம் தயார் ; வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் அறிவிப்பு . Reviewed by Madawala News on September 13, 2023 Rating: 5
Powered by Blogger.