பொருளாதார நெருக்கடி நிலையால் கொழும்பு மத்தி வீதியோர வியாபாரிகளின் அவல நிலை

-ஹஸ்பர் ஏ ஹலீம்-

கொழும்பில் மிகவும் வண்ணமயமான துடிப்பான காட்சிகளில் ஒன்று பெட்டா சந்தைப் பகுதியின் நிரம்பிய தெருக்கள்

பொருளாதார நெருக்கடி நிலையால் கொழும்பு மத்தி வீதியோர வியாபாரிகளின் அவல நிலை பொருளாதார நெருக்கடி நிலையால் கொழும்பு மத்தி வீதியோர வியாபாரிகளின்  அவல நிலை Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5

பாஸ்டர் ஜெரோமின் “மிரகள் டோம்” கட்டுமான பணிகளுக்கு 330 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது



பௌத்தம் மற்றும் ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக

பாஸ்டர் ஜெரோமின் “மிரகள் டோம்” கட்டுமான பணிகளுக்கு 330 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது பாஸ்டர் ஜெரோமின் “மிரகள் டோம்” கட்டுமான பணிகளுக்கு 330 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் மின் கம்பத்தில் மோதி உயிரிழப்பு.



மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் மின் கம்பத்தில் மோதி உயிரிழப்பு.

யாழ். வரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் மின் கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.


முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று பின்னர் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் இன்று (06) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


குடத்தனை பகுதியைச் சேர்ந்த நிறோஜன் என்ற 31 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.


சடலம் பிரதே பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் மின் கம்பத்தில் மோதி உயிரிழப்பு. மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் மின் கம்பத்தில் மோதி உயிரிழப்பு. Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5

தீர்ப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி அறிவிக்கப்படும்.



இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யும் ரிட் உத்தரவினை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பின் அறிவிப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (06) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்படவிருந்தது.

எனினும் குறித்த தீர்ப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன் முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகிய நீதிபதிகள் குழாமினால் அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளரான ஒசத ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானி குடியுரிமையை கொண்டுள்ளதால் அவருக்கு இந்நாட்டின் பாராளுமன்றத்தில் அமர்வதற்கு தகுதி இல்லை என்ற தீர்ப்பினை வழங்குமாறு கோரி அவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தீர்ப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி அறிவிக்கப்படும். தீர்ப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி அறிவிக்கப்படும். Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5

60 வகை மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை குறைக்க நடவடிக்கை



60 வகை மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை 16 சதவீதத்தால் குறைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


இது தொடர்பான வர்த்தமானி 15 ம் திகதி வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

60 வகை மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை குறைக்க நடவடிக்கை 60 வகை மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை குறைக்க நடவடிக்கை Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5

VIDEO : களுத்துறை மாவட்டத்தில் பல வீதிகள் நீரில் மூழ்கியதால் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு அசெளகரியம்.



களுத்துறை மாவட்டத்தில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்கள் மற்றும் கடமைகளில் ஈடுபட்டுள்ள பணிக்குழாமினருக்கும் தேவையான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.



களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட மற்றும் புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பரீட்சை நிலைகளுக்கு செல்லும் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



அந்த நிலையங்களுக்கான வினாத்தாள்கள், மாற்று வீதிகள் ஊடாக கொண்டு செல்ல அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



போக்குவரத்து சிக்கல்களை சீர் செய்வதற்காக கடற்படையுடன் இணைந்து படகு சேவை மற்றும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



அனர்த்த நிலைமைகளால் பரீட்சைக்கு தோற்ற இடையூறுகள் ஏற்பட்டால் அது குறித்து அறிவிக்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு மாணவர்களிடம் கோரப்பட்டுள்ளது.
VIDEO : களுத்துறை மாவட்டத்தில் பல வீதிகள் நீரில் மூழ்கியதால் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு அசெளகரியம். VIDEO : களுத்துறை மாவட்டத்தில் பல வீதிகள் நீரில் மூழ்கியதால் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு அசெளகரியம். Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5

கம்பளை பகுதியில் சிறிய அளவான நிலநடுக்கம் பதிவு.



கம்பளை பகுதியில் 2 ரிச்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் நேற்றிரவு பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

A minor tremor with a magnitude of 2.0 on the Richter scale is reported in Gampola, the Geological Survey & Mines Bureau (GSMB) says.

According to the bureau, the minor tremor has taken place at around 10.49 p.m. on Monday (June 05), with its epicenter in Pupuressa.

Seismic meters installed in Mahakanadarawa, Hakmana, Pallekelle and Buddhangala have recorded the quake
கம்பளை பகுதியில் சிறிய அளவான நிலநடுக்கம் பதிவு.  கம்பளை பகுதியில்  சிறிய அளவான நிலநடுக்கம் பதிவு. Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5

நள்ளிரவு டொலரின் பொறுமதி குறைந்தால் அதிகாலையில் பொருட்களின் விலைகள் குறையாது.



நள்ளிரவில் டொலரின் பொறுமதி குறைந்தால் அதிகாலையில் பொருட்களின் விலைகள் குறையாது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.


டொலருக்கு நிகரான இலங்கை நாணய பெறுமதி வலுப்பெற்ற போதும் பொருட்களின் விலைகள் குறையவில்லை ஏன் என கேட்கப்பட்ட போது பதில் அளித்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.


மேலும் கருத்து வெளியிட்ட அவர்,



“நள்ளிரவில் டொலரின் பொறுமதி குறைந்தால் அதிகாலையில் பொருட்களின் விலைகள் குறையும் என நாம் எதிர்பார்க்க முடியாது.அதிக விலைகொடுத்து நாட்டிற்கு இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பொருட்களின் விலைகளை வர்த்தகர்களுக்கு குறைக்க செல்ல முடியாது.அவர்களும் சந்தையில் நீடிக்க வேண்டும்.இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் ரூபா வலுப்பெற்றமையின் நன்மை மக்களுக்கு கிடைக்கும் “ என அவர் கூறினார்.

நள்ளிரவு டொலரின் பொறுமதி குறைந்தால் அதிகாலையில் பொருட்களின் விலைகள் குறையாது. நள்ளிரவு டொலரின் பொறுமதி குறைந்தால் அதிகாலையில் பொருட்களின் விலைகள் குறையாது. Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5

அரசியல் தலையீடுகள் காரணமாக பணியாற்ற முடியவில்லை ; பணியை விட்டு சென்ற பிரதேச செயலாளர்..



அரசியல் தலையீடுக பணியை  விட்டு சென்ற பிரதேச  செயலாளர் ஒருவர்  தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

திஸ்ஸமஹாராம பிரதேச செயலாளராக கடந்த ஆண்டு பணியில் இணைந்த சந்திமா மனம்பேரி என்ற அதிகாரியே அரசியல் தலையீடுகள் காரணமாக  பணியாற்ற முடியவில்லை எனக்கூறி தனது பணியை  விட்டு சென்றதாக  தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் தலையீடுகள் காரணமாக பணியாற்ற முடியவில்லை ; பணியை விட்டு சென்ற பிரதேச செயலாளர்.. அரசியல் தலையீடுகள் காரணமாக  பணியாற்ற முடியவில்லை ; பணியை விட்டு சென்ற பிரதேச செயலாளர்.. Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5

Sad News 😪 கிண்ணியா ( பூவரசந்தீவு) வேன் ஒன்று ஹபரனையில் விபத்துக்குள்ளாகியதில் இருவர் வபாத்.



இன்னாலில்லாஹி_வயின்னா இலைஹி ராஜிஊன்....

கிண்ணியா ( பூவரசந்தீவு) Van ஒன்று ஹபரனையில் விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதில் இருவர் வபாத்தாகியுள்ளார்கள்.

ஒருவர் அதீ திவிர சிகிச்சை பிரிவு ICU அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிமந்து தயாரிக்க பொருள் கொண்டுவந்த கொள்களன் லொரியுடன் கிண்ணியா பூவர்சந்திவு அலாப்தீன் என்பவரின் வேன் மோதுன்டதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது

ஜனாஸா கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிந்திக் கிடைத்த தகவல்

இன்று அதிகாலை 5. மணியலவில் கிண்ணியா சேர்நத முஸ்தபா அலாப்தீன் என்பவருக்கு சொந்தமான வேனில் விமான நிலையத்தில் இருந்து கிண்ணியா நோக்கி வந்துகொண்டிருந்த போது கணரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகி சம்மவாச்சதீவை சேர்ந்த கனவன் மனைவி இருவரும் அவ்விடத்திலேயே வபாத்தாகியுள்ளார்கள்.


சாரதி(அலாப்தீன்)கந்தலாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தொடர்புகளுக்கு கந்தளாய் வைத்தியசாலையில் ஊழியர்கள்
நஸீர் 0757166381
றிசான் 0754158090
சபியுள்ளா 0776487845 /0755311191


Sad News 😪 கிண்ணியா ( பூவரசந்தீவு) வேன் ஒன்று ஹபரனையில் விபத்துக்குள்ளாகியதில் இருவர் வபாத். Sad News 😪  கிண்ணியா ( பூவரசந்தீவு) வேன் ஒன்று ஹபரனையில் விபத்துக்குள்ளாகியதில் இருவர் வபாத். Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5

போதைப்பொருள் குற்றத்தில் கைதான நபர் கண்டி நீதிமன்ற கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்து பலத்த காயம்.



போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றின் மாடிக்கட்டடத்தில் இருந்து கீழே குதித்ததில் பலத்த காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபரை கண்டி நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்ற போது, ​​சந்தேக நபர் நீதிமன்ற கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த அவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2150 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கண்டி தலைமையக காவல்நிலையத்தின் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அவர் நேற்று மாலை நீதிமன்றத்துகு அழைத்துச் செல்லப்பட்ட போது காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பி, இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்
போதைப்பொருள் குற்றத்தில் கைதான நபர் கண்டி நீதிமன்ற கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்து பலத்த காயம். போதைப்பொருள் குற்றத்தில் கைதான நபர் கண்டி நீதிமன்ற கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்து பலத்த காயம். Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5

டயனாவின் பதவி பறிபோகுமா? நீதிமன்றம் இன்று தீர்ப்பு



பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்றுள்ளதாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிப்பேராணை மனு மீதான தீர்ப்பு, மேல்முறையீட்டு நீதிமன்றினால் இன்று (6) அறிவிக்கப்படவுள்ளது.

இந்த மனு, நீதியரசர்களான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் எம். ஏ. ஆர். மரிக்கார் ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், தீர்ப்புக்காக இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த மனுவில் குடிவரவு கட்டுப்பாட்டாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பிரித்தானியப் பிரஜை எனக் கூறப்படும் டயனா கமகே இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெறாத காரணத்தினால் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கத் தகுதியற்றவர் என உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
டயனாவின் பதவி பறிபோகுமா? நீதிமன்றம் இன்று தீர்ப்பு டயனாவின் பதவி பறிபோகுமா? நீதிமன்றம் இன்று தீர்ப்பு Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5

தங்க கடத்தல்.... அலி சப்ரி ரஹீமுக்கு 10 சதவீத அபராதம் விதித்த சுங்கத் திணைக்களம், பிரான்ஸ் பிரஜைக்கு 100 சதவீத அபராதம் விதித்ததால் சர்ச்சை.



புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு 10 சதவீத அபராதம் விதித்த சுங்கத் திணைக்களம், பிரான்ஸ் பிரஜைக்கு 100 சதவீத அபராதம் விதித்தமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.


8.5 கோடி ரூபாய் பெறுமதியான தங்கக் கட்டிகள் மற்றும் நகைகளுடன் பிரான்ஸ் பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


4 கிலோ கிராம் 611 கிராம் தங்கத்துடன், பாரிஸில் இருந்து வருகை தந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார். 35 வயதுடைய இந்த பிரான்ஸ் பிரஜை இதற்கு முன்னரும் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நிலையில், இம்முறை 24 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் இலங்கைக்கு வருவதைக் கருத்தில் கொண்டு அவரது பயணப் பொதிகளை பரிசோதித்த போதே தங்கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


பிரான்சின் பாரிஸில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL- 501 மூலம் சனிக்கிழமையன்று கட்டுநாயக்க விமான
நிலையத்தை வந்தடைந்த
போதே அவரின் உடமைகள்
பரிசோதிக்கப்பட்டன.


இந்தப் பிரான்ஸ் நாட்டவர்
தண்டப்பணத்தை செலுத்த
தவறிய நிலையில், சுங்க
அதிகாரிகளால் நீர்கொழும்பு
பதில் நீதவான் இந்திக டி
சில்வா முன்னிலையில்
ஆஜர்படுத்தப்பட்டதைத்
தொடர்ந்து, அவரை
8ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிடப்பட்டுள்ளது.



புத்தளம் மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், 8 கோடி ரூபாய் பெறுமதியான பெறுமதியான
தங்கத்தை சட்டவிரோதமான
முறையில் கொண்டு வந்த
போது, அதில் 10 சதவீதத்தை
அதாவது 75 இலட்சம் ரூபாயை
அபராதமாக செலுத்துமாறு
சுங்க அதிகாரிகள்
உத்தரவிட்டிருந்தனர்.


இந்நிலையில், பிரான்ஸ்
பிரஜைக்கு 7 கோடி ரூபாய்
அபராதம் விதித்தமை குறித்து சமூக வலை தளங்கள் மன்றும் ஊடக செய்திகள் மூலம் 
சர்ச்சைகள் எழுந்துள்ளதாக
தெரியவருகிறது.
தங்க கடத்தல்.... அலி சப்ரி ரஹீமுக்கு 10 சதவீத அபராதம் விதித்த சுங்கத் திணைக்களம், பிரான்ஸ் பிரஜைக்கு 100 சதவீத அபராதம் விதித்ததால் சர்ச்சை. தங்க கடத்தல்....  அலி சப்ரி ரஹீமுக்கு 10 சதவீத அபராதம் விதித்த சுங்கத் திணைக்களம், பிரான்ஸ் பிரஜைக்கு 100 சதவீத அபராதம் விதித்ததால் சர்ச்சை. Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5

கட்டார் ஹயா Card மல்டிபிள் என்ட்றி விசா



கட்டார் ஒரு பக்கம் வேலை தேடுறுவங்களாலயும் மறுபக்கம் டுவரிஸ்டாலயும் நிரம்பி வளிகின்றது. பீபா நடைபெற்ற போது ஹயா கார்ட் என்ற ஒன்றை கட்டார் அறிமுகம் செய்திருந்தது. அது யாருக்கு எண்டா பீபா பார்ப்பதற்காக கட்டாருக்கு வந்த வெளிநாட்டு ரசிகர்களுக்குதான் கொடுத்தாங்க.

அந்த நேரம் ஹயா கார்ட் வைத்திருப்பவர்கள் அத வெச்சி தனது நெருங்கிய உறவினரை கட்டாருக்கு டுவரிஸ்டாக எடுக்க முடியும் என்ற ஒரு சலுகையையும் வழங்கியிருந்தது. சஊதி கூட ஹயா கார்ட் உள்ளவர்கள் வீசா இல்லாம சஊதிக்க வரமுடியும் என்றும் சொல்லியிருந்தது.

அப்போ இந்த சலுகை கடந்த 2023 ஜனவரி 31 உடன் முடிவடைவதாகவே கட்டார் அறிவித்திருந்தாலும் இப்போ அதனை அடுத்த வருடம் ஜனவரி 24 ஆம் திகதி வரை நீடித்திருக்கின்றது.

இது மட்டுமில்லாம இப்போ ஹயா கார்ட்டுக்கு விரும்பின யாரையும் எடுக்கலாம். ஒருத்தர் இல்ல ஐந்து பேர் வரைக்கும் எடுக்கலாமாம்.

ஹயா கார்ட் வெச்சிரிக்கிரவங்களுக்கு ஐந்து வவுச்சர் கொடுப்பாங்க அத பயன்படுத்தி நம்ம விரும்பின யாரையும் எடுக்கலாம். இதனால ஹயா வவுச்சர்ட மவுசும் அதிகமாகி பெரிய பிஸ்னஸ்சே நடந்தது. சும்மா கிடைத்த ஒரு வவுச்சர் இரண்டு, மூன்றாயிரம் றியாலுக்கு மேலும் விற்பனை செய்யப்பட்டது.

புதுசா ஒரு சிஸ்டமும் இருப்பதாக சொல்லப்படுகுது. ஹயா வவுச்சர் இல்லாமல் கட்டார் ஐடி உள்ளவங்களும் ஹயா வெப்சைட்ல போய் அப்ளை பண்ணி யாரையும் எடுக்க ஏலுமாம். அதுக்கு சின்ன தொகை ஒண்டும் கட்டோணும் போல. (இது சம்பந்தமாக இன்னம் கொஞ்சம் தேட வேண்டியுள்ளது)

சுருக்கமா சொல்ல போனால் ஒன் எரைவல் வீசாவ ஹயா என்ற பெயரில் ஒரு சிஸ்டத்துக்கு கொண்டு வந்திருக்காங்க அவ்வளவுதான். ஹயா எண்டு சொல்லிட்டு... யாரு வாறாங்க, போறாங்க, எங்க தங்குறாங்க, யார் எடுக்காங்க எங்குற டீடைல்ச எடுத்திட்டு ஒண் எரைவல் வீசா குடுக்காங்க அவ்வளவுதான் விஷயம்.

அது மட்டுமில்ல இது மல்டிபிள் என்ட்றி வீசா எங்குறதால இது இருந்தா 2024 ஜனவரி 24 க்குள் எத்தினை முறையும் கட்டாருக்கு வந்து போக முடியும்.

பொதுவா சொல்ல போனா கட்டாருக்கு விசிட் வாறது முந்தி போல கஷ்டம் இல்ல வெரி ஈசி... பாஸ்போர்ட், எங்க தங்கபோறம் எங்குற டீடெய்ல்ஸ், தங்க போற காலத்துக்கான ஹெல்த் இன்ஷுரன்ஸ் (மாசத்துக்கு 50 றியால் வருடத்துக்கு 250 றியால்), டிக்கெட்டும் இருந்தா போதும் டெக்னிகலா சில விஷயங்கள் இருக்கு அத தெரிஞ்சவங்க ஊடாக செய்திட்டு கட்டாருக்கு வந்து சுத்தி பாத்திட்டு போகலாம்.

ஹயாவுல வாறவங்க வேலை செய்ய ஏலா எண்டிருந்தாலும் பலர் தெரியாம வேலையும் செய்ராங்கதான்.

இங்க இருந்து உம்ராக்கு போறதும் கடும் ஈசி. அதே நேரம் நாட்டுல இருந்து போறத விட இங்க வந்து போறதும் கொஞ்சம் செலவும் கொறவு எண்டும் சொல்லுறாங்க. இப்ப ஹயாவுல வாறவங்களுக்கு உம்ராக்கு போக ஏலா எங்குற செய்தியும் சொல்லப்படுகுது. சில நேரம் ஹஜ் சீசன் என்பதால் கூட இப்புடி இருக்கலாம் (இது சம்பந்தமாக பொறகு தனியா எழுதலாம் எண்டு இருக்கன்)

கட்டார்ல இரிக்கிர நிறைய பேர் இப்ப பெமிலி, றிலேசன் எண்டு பலரையும் விசிட்ல கட்டாருக்கு எடுக்குறாங்க... கட்டார சுத்தி பாக்காங்க... உம்ராக்கு போறாங்க வாறாங்க... எனவே உங்கள் குளிர்கால சுற்றுலாவை கட்டார் பக்கம் வெச்சிக்கலாம்.

இந்த வாய்ப்பு தொடர்ந்து இருக்குமா இல்ல எதிர்வரும் ஜனவரியோட முடிஞ்சிருமா எங்குற சந்தேகம் இருக்கின்றது. பெரும்பாலும் நீடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் எண்டே சொல்லுறாங்க.

நமக்கு தெரிந்தது இவ்வளவுதான்... இதற்கு மேலயும் விஷயம் இருக்கலாம்...

Sajeer Muhaideen
05/06/2023
கட்டார் ஹயா Card மல்டிபிள் என்ட்றி விசா கட்டார் ஹயா Card மல்டிபிள் என்ட்றி விசா Reviewed by Madawala News on June 05, 2023 Rating: 5

தனது சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கேடுகெட்ட தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது #இலங்கை



தனது பதினொரு வயது சொந்த மகளுக்கு கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியான மகளின் தந்தைக்கு 110 வருட கடூழிய கடூழிய சிறைத் தண்டனையும் ஆறு இலட்சம் நட்டஈடு வழங்கவும் பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி திரு.ரங்க திஸாநாயக்க இன்று (5) உத்தரவிட்டுள்ளார்.

ஊரகஸ்மன்ஹந்திய - கோரக்கீனையைச் சேர்ந்த சித்த மரக்கல பாலித டி சில்வா என்ற கேவலமான தந்தைக்கே இந்த சிறைத்தண்டனையும் , நட்டஈடு மற்றும் அபராதம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.


2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த சந்தேகநபரான தந்தை தனது மகளை பல சந்தர்ப்பங்களில் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என உரகஸ்மஹந்திய பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் நீதிமன்றில் உண்மைகளை தெரிவித்தது.


அந்த வழக்குகள் ஒவ்வொன்றிலும், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டது.

தண்டனை வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி, அவர் தனது மகளை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் எனவும் அத் தந்தைக்கு சிறைத்தண்டனை, இழப்பீடு மற்றும் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.


இது தொடர்பில் ஊரகஹா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், தாய் வெளிநாட்டில் இருக்கும் போது, ​​தந்தை தினமும் குடித்துவிட்டு வருவதாக அயல் வீட்டு வயோதிப பெண்ணுக்கு அறிவித்ததன் பேரில், ஊர்கஸ்மன்ஹந்திய காவற்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் சந்தேகநபரான தந்தையை விசாரணைக்காக கைது செய்துள்ளது.


பலப்பிட்டிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
தனது சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கேடுகெட்ட தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது #இலங்கை தனது சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கேடுகெட்ட தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது #இலங்கை Reviewed by Madawala News on June 05, 2023 Rating: 5

சுவீடன் இல் செக்ஸ் சாம்பியன் போட்டி நடைபெறும் என வைரலாக பரவிய செய்திகள் போலியானது.



Sweden இல் Sex Championship? வைரல் செய்திகளின் உண்மை?

தமிழில்:  ziyadaia

June மாதம் Sweden Sex Championship ஐ நடத்தும் என்று இந்த வார தொடக்கத்தில் அறிக்கைகள் வெளிவந்தன.


இருப்பினும், ஆந்நாட்டிலிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வரவில்லை.

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் இந்த வாரம் ஒரு வினோதமான செய்தியுடன் பரபரப்பாக இருந்தது - ஜூன் மாதம் ஸ்வீடன் செக்ஸ் சாம்பியன்ஷிப்பை நடத்தப் போகிறது.


முதன் முதலில் ட்விட்டரில் வெளிவந்த செய்தியின் விவரங்கள் பல செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டன.

இந்த நிகழ்வு ஜூன் 8 ஆம் தேதி தொடங்கி பல வாரங்களுக்கு நீடிக்கும், பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு நாளும் ஆறு மணிநேரம் போட்டியிடுவார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

ஸ்வீடிஷ் செய்தி நிறுவனமான Goterborgs-Posten படி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே இந்த திட்டம் நிராகரிக்கப்பட்டது. இந்த செய்தி போலியானது.


Swedish outletன் படி, ஸ்வீடிஷ் நாட்டில் செக்ஸ் கூட்டமைப்பு (Federation of Sex) உள்ளது. அதன் தலைவர் Dragan Bractic ஒரு சாம்பியன்ஷிப்பை ஏற்பாடு செய்ய அழைப்பு விடுத்தார். இது மனிதர்களுக்கு உடலுறவின் உடல் மற்றும் மனநல பாதிப்பை பற்றி எடுத்துக்காட்டும் என தெரிவித்தார்.

இருப்பினும், தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பில் (National Sports Confederation) உறுப்பினராவதற்கான கூட்டமைப்பின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

Goterborgs-Posten தனது ஏப்ரல் 26 அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திரு பிராக்டிக் இந்த ஆண்டு ஜனவரியில் விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தார்.


"இது எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை, இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க முடியும். எங்களுக்கு வேறு விஷயங்கள் உள்ளன," என்று விளையாட்டுக் கூட்டமைப்பின் தலைவர் பிஜோர்ன் எரிக்சன் உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.


திரு ப்ராக்டிக் ஸ்வீடனில் பல Strip கிளப்புகளை நடத்துகிறார் மற்றும் பாலியலை விளையாட்டாக வகைப்படுத்த நினைக்கிறார்.

உத்தியோகபூர்வமற்ற Tweetகளின் அடிப்படையில்
செய்தி அறிக்கைகள் கூறியது:

பாலியல் செயல்பாடுகள் அல்லது 'போட்டிகள்' 45 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரையிலான கால அளவைக் கொண்டதாக இருக்கும்.. ஒவ்வொரு பங்கேற்பாளரும் 5 முதல் 10 புள்ளிகள் வரை பெறும்படி 16 துறைகள் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தன.

20 பேர் சாம்பியன்ஷிப்பிற்காக பதிவு செய்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து ஸ்வீடன் அதிகாரிகள் எந்த பதிலையோ அறிக்கையோ தெரிவிக்கவில்லை.

நன்றி: NDTV News

தமிழில்: #ziyadaia
சுவீடன் இல் செக்ஸ் சாம்பியன் போட்டி நடைபெறும் என வைரலாக பரவிய செய்திகள் போலியானது. சுவீடன் இல் செக்ஸ் சாம்பியன் போட்டி நடைபெறும் என வைரலாக பரவிய செய்திகள் போலியானது. Reviewed by Madawala News on June 05, 2023 Rating: 5

JOBS இலங்கை மற்றும் டுபாயின் முன்னணி Travel Agency - Goldfinchs Travel & Tourism நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.



 இலங்கை மற்றும் டுபாயின் முன்னணி Travel Agency யான Goldfinchs Travel & Tourism நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. 


டுபாயில், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இயங்கிவரும் முன்னணி Travels நிறுவனமான GOLDFINCHS TRAVELS & TOURISM  டுபாய் கிளைக்கு SALES AND MARKETING Staff தேவை 

மேற்குறிப்பிட்ட வேலைவாய்ப்புக்கான தகைமைகள். 

1. SALES AND MARKETING யில் 2 வருட கால அனுபவம். 


2. TRAVELS & TOURISM அனுபவம் தேவை. 


3. ஆங்கிலத்தில் தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும் 


* சிறந்த சம்பளத்துடன்   இலங்கை அலுவலகத்தில் 3 கிழமை Training வழங்கபடும்


உங்கள் CV களை +94324351234 என்ற WHATSAPP யிற்கோ அல்லது jobs@goldfinchs.com என்ற Email யிற்கு share செய்யவும்.

JOBS இலங்கை மற்றும் டுபாயின் முன்னணி Travel Agency - Goldfinchs Travel & Tourism நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. JOBS இலங்கை மற்றும் டுபாயின் முன்னணி Travel Agency -  Goldfinchs Travel & Tourism நிறுவனத்தில்  வேலைவாய்ப்பு. Reviewed by Madawala News on June 05, 2023 Rating: 5

வீதியில் செல்லும் பெண்களை டார்கட் செய்து, முகத்திற்கு மிளகாய் தூள் வீசி அணிந்திருக்கும் தங்க நகைகளை கொள்ளையிட்டு வந்த கும்பல் சிக்கியது.



 முகத்திற்கு மிளகாய் தூள் வீசி தங்க ஆபரணங்களை கொள்ளையிடும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு உறுப்பினர்கள் ஐவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


களுத்துறை - பன்விலஹேன பகுதியைச் சேர்ந்த 30 வயதுக்கும் குறைந்த ஐவரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.


சந்தேகநபர்கள் இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளில்  சென்று, வீதியில் செல்லும் பெண்களின் முகத்திற்கு மிளகாய் தூள் வீசி அவர்கள் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு செல்வதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


கைதானவர்களிடம் இருந்து தங்க ஆபரணங்கள், தொலைபேசிகள், சிம் அட்டைகள், கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் , கைக்குண்டு என்பன மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.


சந்தேகநபர்களை களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வீதியில் செல்லும் பெண்களை டார்கட் செய்து, முகத்திற்கு மிளகாய் தூள் வீசி அணிந்திருக்கும் தங்க நகைகளை கொள்ளையிட்டு வந்த கும்பல் சிக்கியது. வீதியில் செல்லும் பெண்களை டார்கட் செய்து,  முகத்திற்கு மிளகாய் தூள் வீசி  அணிந்திருக்கும் தங்க நகைகளை  கொள்ளையிட்டு வந்த கும்பல் சிக்கியது. Reviewed by Madawala News on June 05, 2023 Rating: 5

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது ; பேக்கரி சங்கம்



சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.



நாடளாவிய ரீதியில் உள்ள பேக்கரிகளில் 25 சதவீதமானோரே சமையல் எரிவாயு மூலம் பேக்கரி உற்பத்திகளை மேற்கொள்கின்றனர்.


இதன்காரணமாக, பேக்கரி உணவு உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க எடுக்கமுடியாது. அதேநேரம், சமையல் எரிவாயு விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்களில் விலைத்திருத்தங்களை தமது சங்கம் மேற்கொள்விலை என அகில இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது ; பேக்கரி சங்கம் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது  ; பேக்கரி சங்கம் Reviewed by Madawala News on June 05, 2023 Rating: 5

சில வாரங்களுக்கு முன் யானை தாக்கி யுவதி உயிரிழந்த சம்பவத்தில் திருப்பம் - காதலன் கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.



சில வாரங்களுக்கு முன்  உட தியலும பிரதேசத்தில் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரின் காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


சந்தேகநபர் இன்று (05) பண்டாவரளை நீதவான் நீதிமன்றில் முன்னலைப்படுத்திய வேளை, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


கடந்த மே மாதம் 11 ஆம் திகதி மாலை கொஸ்லாந்த, தியலும நீர்வீழ்ச்சியின் உடதியலும பகுதிக்கு பிரவேசத்த குறித்த இளம் ஜோடி இரவில் தங்க முற்பட்டுள்ளனர்.


இதன்போது இளம் யுவதி காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

 

சம்பத்தில் காயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

பின்னர் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான காதலன் வழங்கிய வாக்குமூலம் முரண்பாடாக காணப்பட்டதால் பொலிஸாரால் அவர் கைது செய்யபடப்பட்டிருந்தார்.

 

சம்பவம் தொடர்பில் கொஸ்லாந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சில வாரங்களுக்கு முன் யானை தாக்கி யுவதி உயிரிழந்த சம்பவத்தில் திருப்பம் - காதலன் கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். சில வாரங்களுக்கு முன் யானை தாக்கி யுவதி உயிரிழந்த சம்பவத்தில் திருப்பம் - காதலன் கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். Reviewed by Madawala News on June 05, 2023 Rating: 5

திருமண முதல்நாள் இரவில் சடலமாக மீட்கப்பட்ட புதுமண தம்பதி.




திருமண முதல்நாள் இரவில் சடலமாக மீட்கப்பட்ட புதுமண தம்பதி.

திருமண முதல்நாள் இரவில் சடலமாக மீட்கப்பட்ட புதுமண தம்பதி. திருமண முதல்நாள் இரவில் சடலமாக மீட்கப்பட்ட புதுமண தம்பதி. Reviewed by Madawala News on June 05, 2023 Rating: 5

திலினி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி - இன்றைய வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது .




 வாகனம் வழங்குவதாக உறுதியளித்து மாத்தறை பிரதேசத்தில் நபர் ஒருவரிடமிருந்து 80 இலட்சம் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி திரு. ஆதித்ய பட்டபெத்திகே  முன்னிலையில் இன்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


அப்போது, ​​குற்றம்சாட்டப்பட்ட திலினி பிரியமாலி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.


அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி,  திலினி சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.


அதன்படி, வழக்கை ஆகஸ்ட் 11ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ அறிக்கையுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.


2010 ஆம் ஆண்டு மாத்தறை பிரதேசத்தில் நபர் ஒருவருக்கு வாகனம் தருவதாக கூறி அந்த நபரிடம் இருந்து 80 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு அதனை முறைகேடாக பயன்படுத்தியதாக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

திலினி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி - இன்றைய வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது . திலினி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி -  இன்றைய  வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது . Reviewed by Madawala News on June 05, 2023 Rating: 5

காரில் சென்ற நபர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பியோட்டம்.



பாதுக்க, வல்பிட்ட, திசர தோட்டம் பகுதியில் இன்று (05) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கை கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் தலைவர் பதவியை பொறுப்பேற்கச் சென்ற நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.


படுகாயமடைந்த நபர் திசர உயன, படகொட பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர்.


சம்பவம் தொடர்பில் மீகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

காரில் சென்ற நபர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பியோட்டம். காரில் சென்ற நபர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பியோட்டம். Reviewed by Madawala News on June 05, 2023 Rating: 5

10 வயதுச் சிறுவன் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான சோகம் - தன்னைப் போலவே மேலும் சில சிறுவர்களும் இருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரிவிப்பு.



உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்  ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் – கரவெட்டி, துன்னாலையைச்  சேர்ந்த 10 வயதுச் சிறுவன் ஒருவன் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.


கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த பாடசாலையை விட்டு இடைவிலகிய குறித்த  சிறுவன், உயிர் கொல்லி ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ளான். 


இந்தச் சிறுவன் தொடர்பில் கிடைத்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அந்தச் சிறுவன் ஊசி மூலம் ஹெரோயினை உடலில் ஏற்றிக் கொள்ளும் வேளையில்  பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளான்.


தன்னைப் போலவே வேறு பல சிறுவர்களும் இவ்வாறு ஹெரோயின் நுகர்வில் ஈடுபட்டுள்ளதாக  பொலிஸ் விசாரணைகளின் போது அந்தச் சிறுவன் தெரிவித்துள்ளான்.

10 வயதுச் சிறுவன் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான சோகம் - தன்னைப் போலவே மேலும் சில சிறுவர்களும் இருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரிவிப்பு.  10 வயதுச் சிறுவன் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான சோகம் - தன்னைப் போலவே மேலும் சில சிறுவர்களும் இருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரிவிப்பு. Reviewed by Madawala News on June 05, 2023 Rating: 5

அவதானம் ⚠️ டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று தம்மை அறிமுகப்படுத்திய மூவர் வீடொன்றுக்குள் புகுந்து பெண்னை கட்டிப்போட்டு இலட்சக்கணக்கில் கொள்ளை!



டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு செய்த மூவர் கெஸ்பேவ, படுவந்தர பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து, அங்கிருந்த 73 வயதுடைய வயோதிப பெண்ணின் கை, கால்களைக் கட்டிய பின்னர், தங்க நகைகளை கொள்ளையிட்டு, தப்பிச் சென்றுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சுமார் 13 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசி என்பனவே கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.


குறித்த வீட்டுக்குச் சென்ற கொள்ளையர்கள், வயோதிப பெண்ணிடம் அருந்துவதற்கு தண்ணீர் கேட்டதாகவும், அதனை கொடுப்பதற்காக சமையல் அறைக்குள் நுழைந்தபோது, அவரின் பின்னால் சென்று அவரது கை, கால்களைக் கட்டிவைத்து, பின்னர், அவர் அணிந்திருந்த மற்றும் வீட்டிலிருந்த தங்க நகைகள், கைத்தொலைபேசியை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவதானம் ⚠️ டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று தம்மை அறிமுகப்படுத்திய மூவர் வீடொன்றுக்குள் புகுந்து பெண்னை கட்டிப்போட்டு இலட்சக்கணக்கில் கொள்ளை! அவதானம் ⚠️  டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று தம்மை அறிமுகப்படுத்திய  மூவர் வீடொன்றுக்குள் புகுந்து பெண்னை கட்டிப்போட்டு இலட்சக்கணக்கில்   கொள்ளை! Reviewed by Madawala News on June 05, 2023 Rating: 5
Powered by Blogger.