ஒலுவிலின் முதலாவது பெண் சட்டத்தரணியாக எம்.எம். பாத்திமா ஹுஸ்னா தேர்வானார்.




(ரமீஸ் எம். லெவ்வை)
இலங்கை சட்டக்கல்லூரி நேற்று வெளியிட்ட இறுதிப்
பரீட்சையில் சித்தியடைந்து மீரா முகையதீன் பாத்திமா ஹுஸ்னா ஒலுவில் வரலாற்றில் முதலாவது பெண் சட்டத்தரணியாக வெளியாகியுள்ளார்.


இவர் தனது ஆரம்பக் கல்வி தொடர்க்கம் உயர்தரம் வரை, ஒலுவில் கமு/அக்/அல்- ஹம்றா தேசிய பாடசாலையில் கல்வி பயின்றதுடன், 2015 ம் ஆண்டு நடைபெற்ற, க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் 03 A சித்தியுடன் பேராதனைப் பல்கலைக்கழக சட்ட பீடத்திற்கு தெரிவானார். LLB பட்டத்தினை 2021ம் ஆண்டு பூர்த்தி செய்ததுடன், கடந்த வருடம் 2022 இல் Attorney at Law பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்து சட்டத்தரணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இவருக்காண சத்தியப்பிரமாண நிகழ்வு இவ்வருட இறுதியில் கொழும்பு உச்ச நீதிமன்றில் இடம் பெறவுள்ளது.

மீராமுகையதீன் வட்டானை மற்றும் கதிஜா உம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், மீராலெவ்வை றினாஸ் (SEUSL MA)அவர்களின் மனைவியும், முகம்மட் மதனி (SEUSL HW), முகம்மட் மஹீஸ் (Water Board ) ஆகியோரின் தங்கையும் ஆவார்.

ஒலுவில் கிராமத்தின் முதல் பெண் சட்டத்தரணிக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.
ஒலுவிலின் முதலாவது பெண் சட்டத்தரணியாக எம்.எம். பாத்திமா ஹுஸ்னா தேர்வானார்.  ஒலுவிலின் முதலாவது பெண் சட்டத்தரணியாக எம்.எம். பாத்திமா ஹுஸ்னா தேர்வானார். Reviewed by Madawala News on March 17, 2023 Rating: 5

மடவளையில் இடம்பெறும் வரிகள் தொடர்பான தெளிவூட்டல் - இலவச செயலமர்வு

மடவளையில் இடம்பெறும் வரிகள் தொடர்பான தெளிவூட்டல் - இலவச செயலமர்வு.

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இரவு 8 மணிக்கு அஷ்ரப் கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது.


மடவளையில் இடம்பெறும் வரிகள் தொடர்பான தெளிவூட்டல் - இலவச செயலமர்வு மடவளையில் இடம்பெறும் வரிகள் தொடர்பான தெளிவூட்டல் - இலவச செயலமர்வு Reviewed by Madawala News on March 17, 2023 Rating: 5

பைத்தியக்காரன் கத்துகின்றான் என்பதற்காக, அதற்கு சிகிச்சை செய்கின்ற வைத்தியரும் கத்த முடியாது.



துரதிர்ஷ்டவசமாக, இலங்கையில் தேர்தல் மைய அரசியலைச் செய்து வருவதால், நாடு குட்டிச்சுவராக மாறி இருக்கின்றது. இதிலிருந்து மீள வேண்டுமாக இருந்தால், தேசத்தை மையமாக வைத்து, தேச மைய அரசியலை செய்து, அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என்று அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான எஸ்.எம். எம் முஷரப் தெரிவித்தார் .


காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், ஐந்து வருடங்களுக்கு பிற்பாடு புதன்கிழமை (15) காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் வழிகாட்டலில் முஷரப் எம்.பி தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .


இந்தக் கூட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்

பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் பி. இராஜதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் மேலும் பேசுகையில் கூறியதாவது:


அபிவிருத்திக்கு முன்னர், இனங்களிடையே பரஸ்பரம் ஒற்றுமை நிலவ வேண்டும். பிரச்சினைகள்

விடுத்து, தீர்வை வழங்கக்கூடிய எதையும் செய்ய வேண்டும்.

சகல இனங்களும் தேச அபிமானத்துடன் வாழ்ந்தால், இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீளலாம்.

தேச மைய அரசியல் வேண்டும்.

தேர்தலுக்காக இனவாதத்தை பேசி, அரசியல் செய்வதால் நீண்ட காலமாக பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.

பிரச்சினைகளைப் பேசிப் பேசி காலம்கடத்தாமல் தீர்வை நோக்கி நகர வேண்டும்.


பைத்தியக்காரன் கத்துகின்றான் என்பதற்காக, அதற்கு சிகிச்சை செய்கின்ற வைத்தியரும் கத்த முடியாது. ஆனால், சில இடங்களில் பைத்தியக்காரனும் கத்துகிறான்; வைத்தியரும் கத்துகிறார். எனவே, நாங்கள் பிரச்சினையை பேசிப் பேசி காலத்தை கடத்தாமல், தீர்வை நோக்கி கூட்டங்களை நடத்த வேண்டும் என்றார்.
பைத்தியக்காரன் கத்துகின்றான் என்பதற்காக, அதற்கு சிகிச்சை செய்கின்ற வைத்தியரும் கத்த முடியாது. பைத்தியக்காரன் கத்துகின்றான் என்பதற்காக, அதற்கு சிகிச்சை செய்கின்ற வைத்தியரும் கத்த முடியாது. Reviewed by Madawala News on March 17, 2023 Rating: 5

பூனை கடிக்கு இலக்கான பெண் உயிரிழந்த சம்பவம் பதிவு.



பூனை கடிக்கு இலக்கான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தல்பே கிழக்கு பிரதேசத்தில் பூனை கடித்ததன் காரணமாக இடது காலில் ஏற்பட்ட காயத்தினால் கிருமி தொற்றுக்கு உள்ளான மூன்று பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வீட்டின் மாடியிலிருந்து கீழே இறங்கியபோது வீட்டுப் பூனை இடது காலில் கடித்துள்ளது.


இதனை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் அது ஆபத்தாக மாறியுள்ளது. ஹபராது களுகல வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 28 ஆம் திகதி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 13 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.

பூனை கடித்ததால் ஏற்பட்ட காயத்தில் இருந்து கிருமிதொற்று ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
பூனை கடிக்கு இலக்கான பெண் உயிரிழந்த சம்பவம் பதிவு. பூனை கடிக்கு இலக்கான பெண் உயிரிழந்த சம்பவம் பதிவு. Reviewed by Madawala News on March 16, 2023 Rating: 5

சவூதி அரேபியா, இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியது.



சவூதி அரேபியாவின் கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியது.

இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள் இந்த பேரிச்சம்பழங்களை உத்தியோகபூர்வமாக கொழும்பில் உள்ள சவூதி அரேபியாவின் தூதரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வைபவம் ஒன்றில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சவூதி அரேபியாவின் கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசிற்கு 50 தொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியது.

இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர் மேதகு காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள் இந்த பேரிச்சம்பழங்களை உத்தியோகபூர்வமாக கௌரவ. கொழும்பில் உள்ள சவூதி அரேபியாவின் தூதரகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வைபவம் ஒன்றில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையிலான நிகழ்வில் இடம் பெற்றது.


உலகெங்கிலும் உள்ள கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் சிறந்த மனிதாபிமான முயற்சிகளை அவரது தூதர் பாராட்டினார்,


சவூதி அரேபியா, இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியது. சவூதி அரேபியா,  இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியது. Reviewed by Madawala News on March 16, 2023 Rating: 5

இன்று பகல் புகையிரதத்துடன் கார் மோதி இருவர் உயிரிழந்த சம்பவத்தின் மேலதிக தகவல்கள்.



இன்று (16) பிற்பகல் புகையிரதத்துடன் கார் மோதியதில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.



ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகல்தொட்ட புகையிரத கடவைக்கு அருகில் கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் கார் மோதியுள்ளது.



விபத்தில் ஒரு ஆணும் பெண்ணும் பலியாகினர்.



காரில் 35 வயதுடைய ஆணும் 80 வயதுடைய பெண்ணொருவரும் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



காரில் 35 வயதுடைய பேரனும் 80 வயதுடைய பாட்டியும் பயணித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



குறித்த இருவரும் அஹங்கம பிரதேசத்தில் வசித்து வந்தவர்கள் என தெரியவருகிறது.



சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் கராபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று பகல் புகையிரதத்துடன் கார் மோதி இருவர் உயிரிழந்த சம்பவத்தின் மேலதிக தகவல்கள். இன்று பகல் புகையிரதத்துடன் கார் மோதி இருவர் உயிரிழந்த சம்பவத்தின் மேலதிக தகவல்கள். Reviewed by Madawala News on March 16, 2023 Rating: 5

நரேந்திர மோடி அமைதிக்கான நோபல் பரிசை பெற தகுதியான நபர் ; இந்தியா வந்துள்ள நோபல் பரிசு கமிட்டி உறுப்பினர் தெரிவிப்பு



 இந்திய பிரதமர் மோடி, அமைதிக்கான நோபல் பரிசை பெற தகுதியான நபர் என்று நோபல் பரிசின் கமிட்டி உறுப்பினர் அஸ்லே டோஜே தெரிவித்துள்ளார்.


நோபல் பரிசு கமிட்டியின் உறுப்பினரான அஸ்லே டோஜே, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று  தனியார் செய்தி தொலைகாட்சி ஒன்றில் அவர் பேசும்போது, “அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகப்பெரிய போட்டியாளராக இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. அமைதியை நிலைநாட்டக்கூடிய நம்பிக்கைக்குரிய தலைவராக மோடி உள்ளார். இன்று உலகில் உள்ள அமைதியின் மிகவும் நம்பகமான முகமாக பிரதமர் மோடி இருக்கிறார். போரிடும் நாடுகளுக்கு இடையே போரைத் தடுத்து அமைதியை நிலைநாட்டும் திறன் கொண்டவர் மோடி. நம்பகமான தலைவர்.


பிரதமர் மோடி செயல்படுத்திய கொள்கைகளால் இந்தியா பணக்கார நாடாகவும், சக்திவாய்ந்த நாடாகவும் வளர்ந்து வருகிறது . பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றால், அது தகுதியான தலைவருக்கு ஒரு வரலாற்று தருணமாக இருக்கும்” என்று கூறினார்.

நரேந்திர மோடி அமைதிக்கான நோபல் பரிசை பெற தகுதியான நபர் ; இந்தியா வந்துள்ள நோபல் பரிசு கமிட்டி உறுப்பினர் தெரிவிப்பு நரேந்திர மோடி  அமைதிக்கான நோபல் பரிசை பெற தகுதியான நபர் ; இந்தியா வந்துள்ள நோபல் பரிசு கமிட்டி உறுப்பினர் தெரிவிப்பு Reviewed by Madawala News on March 16, 2023 Rating: 5

மாகந்துரே மதுஷ் இற்கு நடந்தது போல் என் மகனுக்கும் நடந்து விடாமல் இருக்க பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஹரக் கட்டாவின் தந்தை மனு .



 மடகஸ்காரில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நந்துன் சிந்தக விக்ரமரத்ன என்ற ஹரக் கட்டாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப் பேராணை மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


கடந்த காலங்களில் காவல்துறை காவலில் இருந்த மாகந்துரே மதுஷ் போன்ற சந்தேகநபர்கள் விசாரணைக்காக வெளியே அழைத்துச் செல்லப்பட்ட போது உயிரிழந்த விடயத்தை சுட்டிக்காட்டி சந்தேகநபரின் தந்தை இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.


இதன்படி, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமது மகனின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய சிக்கல் எழுந்துள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், காவல்துறைமா அதிபர், மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.


இதேவேளை, ஹரக் கட்டாவுடன் மடகஸ்காரில் கைதுசெய்யப்பட்ட மற்றொரு சந்தேகநபரான 'குடு சலிந்து' என்றழைக்கப்படும் சலிந்து மல்ஷிக குணரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணையின்றி நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் நேற்று கோரியிருந்தார்.


குடு சாலிந்துவின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்து இந்த நீதிப்பேராணை மனுவை அவரின் தாயார் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.


மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய இருவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் ஷனில் குலரத்ன, அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்தார்.


இந்த நிலையில், மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டி, மகனின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தமது கட்சிக்காரர் தனக்கு அறிவித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


இரு தரப்பு சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், மனுவை எதிர்வரும் 20 ஆம் திகதி அழைப்பதற்கு தீர்மானித்ததுடன், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் குறித்த நிலைப்பாட்டை அன்றைய தினம் தெரிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டார்.


கடந்த முதலாம் திகதி மடகஸ்காரில் 8 பேருடன் கைது செய்யப்பட்ட பிரபல குற்றக் கும்பலின் உறுப்பினர் நதுன் சிந்தக எனப்படும் ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து நேற்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

மாகந்துரே மதுஷ் இற்கு நடந்தது போல் என் மகனுக்கும் நடந்து விடாமல் இருக்க பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஹரக் கட்டாவின் தந்தை மனு .  மாகந்துரே மதுஷ்  இற்கு நடந்தது போல் என் மகனுக்கும் நடந்து விடாமல் இருக்க  பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஹரக் கட்டாவின் தந்தை மனு . Reviewed by Madawala News on March 16, 2023 Rating: 5

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாக குறைந்தது.



உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று (16) கணிசமானளவு குறைந்துள்ளது.


அதன்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 67.90 அமெரிக்க டொலர்களாக உள்ளது.


பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.5 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.


ரஷ்ய - யுக்ரைன் மோதலால் உயர்ந்து வந்த மசகு எண்ணெய் விலை, 2021 ஆம் ஆண்டுக்கு பின், இத்தகைய அளவுக்கு சரிந்துள்ளது.


மோதலின் ஆரம்ப காலத்தில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கு மேல் உயர்ந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாக குறைந்தது.  உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாக குறைந்தது. Reviewed by Madawala News on March 16, 2023 Rating: 5

தரமான கடல் மணலை மக்களுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக இரண்டு மில்லியன் கனமீற்றர் கடல் மணல் அள்ளப் போகிறோம்.


 

  இந்த வருடம் முத்துராஜவெல கடற்கரையிலிருந்து நீர்கொழும்பு கடற்கரை  வரையிலான இரண்டு மில்லியன் கனமீற்றர் கடல் மணல் அள்ளப்படும்


Ø  பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.200 மில்லியன் இழப்பீடு...


Ø  தரமான கடல் மணலை மக்களுக்கு மானிய விலையில் வழங்க திட்டம்...


                                                     - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க


இவ்வருடம் இரண்டு மில்லியன் கனமீற்றர் கடல் மணலை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.


கழுவி தேவையான தரத்தில் தயாரிக்கப்பட்ட கடல் மணலின் கனசதுரத்தை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யுமாறு இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.


முத்துராஜவெல கடற்கரையிலிருந்து நீர்கொழும்பு வரை 10-15 கிலோமீற்றர் தூரத்தில் கடலில் இருந்து நிலத்திற்கு கடல் மணல் அள்ளப்படும்.


இந்த கடல் மணல் அகழ்வுத் திட்டத்தினால் கொழும்பிலிருந்து நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் வாழும் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அந்த மீனவ பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்யுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அதற்கு முன்னதாக, இது தொடர்பில் அரசியல் அதிகாரிகள், பிரதேசத்தின் மதத் தலைவர்கள் மற்றும் மீனவ சங்கங்களுக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


மீனவ சமூகத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 200 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை அத்தியாவசியத் தேவையுடைய மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அமைச்சர் கடுமையாக வலியுறுத்தினார்.


கடலில் இருந்து குழாய்கள் மூலம் ஏற்றப்படும் மணலை சம்பந்தப்பட்ட இடத்துக்கு கொண்டு வந்து, திறந்த வெளியில் மணல் திட்டுகளாக சேமித்து, மணலை இயந்திரத்தில் செலுத்தி, கழுவி, சுத்தம் செய்து, தேர்வு செய்து உலர்த்துதல் ஆகிய பிரிவுகளாக நடைபெறும்.


கழுவி சுத்தம் செய்து உலர்த்தப்படும் உப்பு இல்லாத கடல் மணலை பொறியாளர்களின் மேற்பார்வையில் தேவையான தரத்தில் தயாரிக்கின்றனர். அதன் பின்னர் கெரவலப்பிட்டிய - முத்துராஜவெல மணல் விற்பனை நிலையத்தில் கடல் மணல் விற்பனை செய்யப்படும்.


கடல் மணலைப் பெறுவதற்கு முன்னர் கரையோரப் பாதுகாப்பு அதிகாரசபை, நாரா நிறுவனம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை போன்ற நிறுவனங்களிடமிருந்து சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.

தரமான கடல் மணலை மக்களுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக இரண்டு மில்லியன் கனமீற்றர் கடல் மணல் அள்ளப் போகிறோம். தரமான கடல் மணலை மக்களுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக  இரண்டு மில்லியன் கனமீற்றர் கடல் மணல் அள்ளப் போகிறோம். Reviewed by Madawala News on March 16, 2023 Rating: 5

மகளிர் விவகார அமைச்சால் ”புதுமைப் பெண்” விருது.



(அஷ்ரப் ஏ சமத்)

புதுமைப் பெண் , திட்டத்தின் கீழ் இதுவரை 15,000 பெண்கள் தாம் செய்யும் சுயதொழில் முயற்சியில் டிஜிட்டல் முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு இலங்கையின் பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல நமது குடும்பத்தின் வருமானத்திற்கும் சொந்தக் காலில் நின்று வருமானம் பெருகின்றனர் என இராஜாங்க அமைச்சர் கனக்க கேரத் தெரிவித்தார்.

.

மேற்கண்டவாறு புதன்கிழமை (15) பி.எம்.ஜ.சி.எச்சில் இலங்கையில் உள்ள 24 மாவட்டங்களிலும் மகளிர் விவகார அமைச்சின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் கைத்தொழில் முயற்சியாளர்கள் திட்டத்தின் கீழ் ”புதுமைப் பெண்” விருது வழங்கும வைபவம் நடைபெற்றது..


இந் நிகழ்வுக்கு தொழில்நுட்ப தகவல் துறை இராஜாங்க அமைச்சர் கனக கேரத், மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இ்ராஜாங்க அமைச்சர் கீத்தா குமாரசிங்கவின் அதிதிகளாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தனா் அத்துடன் அமைச்சின் அதிகாரிகளும் இத்திட்டத்தினை இரண்டு அமைச்சுக்களுடன் இணைந்து செயற்படுத்து நிறுவனங்கள் அதிகாரிகளும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


தொடா்ந்து அங்கு உரையாற்றிய இராஜாங்க அமை்சசர் கனக்க கேரத்


 இலங்கையின் பொருளாதாரத்திற்கு   பெண்கள்  உதவி வருகிறார்கள். இப் பெண்களது உற்பத்திகள் வெளிநாட்டவர்களும் கொள்முதல் செய்வதற்கு டிஜிட்டல் முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது.


இப் பெண்கள் தமது உற்பத்திகளை சமூக வலைத்தளங்கள் ஊடாக சந்தைப்படுத்தல் முறையைில் நமது வீடுகளில் இருந்தவாரே இத் தொழில்களை செய்துவருகின்றனா்.     இப் பெண்களுக்கு கனனி முறையில் பெற்ற பயிற்சியின் ஊடகாவே உள்ளுரிலும்  சர்வதேச மட்டத்திலும் தமது உற்பத்திகளை  பொதி செய்து ஒன்லைன் ஊடகா தபால் மூலம் பொதிகளை அனுப்புகின்றனர்.  இத்துறையில் இவா்கள்  கைத்தொழில்  கொண்ட வல்லுணர்களாகவும் விளங்கி வருகின்றனதையிட்டு பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன். என தொழில்நுட்ப தகவல் சம்பந்தமான இராஜாங்க அமைச்சர்  கனக கேரத் தெரிவித்தார்


வுவனியாவினைச் சேர்ந்த  நிசாந்தன் சோபனா இங்கு கருத்து தெரிவிக்கையில்  நான் இத்துறையில் வவுனியாவில் உள்ள  பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உதவுியுடன் டிஜிட்டல் முறைமை மற்றும் சமுகவலைத்தளங்கள் ஊடாக பயிற்சியைப் பெற்றேன். எனது உற்பத்தியானது வாழை மரத்தின் நார்களை வாங்கி அதனை பதனிட்டு மேசையின் மேல்போடும் துண்டு, நாரினால் இறைக்கப்பட்ட செருப்பு , பாய், தட்டு போன்ற பல் உற்பத்திகளை செய்து அதனை விற்பனை செய்து வருகின்றேன். என்னிடம்  10 விதவைப் பெண்கள்  அவர்களது உற்பத்திகளை வாங்கி  உள்ளுாரிலும் வெளி ஊர்களிலும் விற்பனை செய்து வருகின்றேன். வீட்டில் இருந்தவாரே எனக்கு 30 ஆயிரம் மாதாந்தம் உழைக்க முடியும். எனக் கூறினார் எனது முகநுால் ஊடாக தொடா்பு கொண்டு பரர்சல்பன்றி விமானதபால் மூலம் இப்பொருட்களை அனுப்பி வைப்பேன் எனவும் சோபனா தெரிவித்தார்



மகளிர் சிறுவர் விவகார அமைச்சும் தொழில்நுட்பம் தகவல் சம்பந்தான அமைச்சும் இணைந்து ஜக்கியநாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்ள மெட்டா, ஜசீரீ(இக்டா) ஆகிய நிறுவனங்களின் உதபியுடக் இலங்கையின் 24 மாவட்டங்களிலும் பெண் தொழில் முயற்சி திட்டத்தின் கீழ் புதுமைப் பெண் (சுகுரலிய) எனும் திட்டத்தினை 2017ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்தது.  

மகளிர் விவகார அமைச்சால் ”புதுமைப் பெண்” விருது. மகளிர் விவகார அமைச்சால்   ”புதுமைப் பெண்” விருது. Reviewed by Madawala News on March 16, 2023 Rating: 5

கபூரிய்யா அரபுக் கல்லூரியை பாதுகாக்க முஸ்லிம் தலைமைகளுக்கு அழைப்பு.



கபூரிய்யா அரபுக் கல்லூரியை பாதுகாக்க முஸ்லிம் தலைமைகளுக்கு அழைப்பு!

இன்னும் எட்டு வருடங்களில் நூற்றாண்டு காணவிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் முத்தான சொத்து, இஸ்லாமிய ஷரீஆ கற்கைகளின் கலங்கரை விளக்கு கபூரிய்யா அரபுக் கல்லூரி வளாகமும் அதற்காக ஸ்தாபகர் அல்ஹாஜ் அப்துல் கபூர் (ரஹ்) அவர்களால் வக்பு செய்யப்பட்ட சொத்துக்களும் இன்றைய வாரிசுகளால் முறைகேடாக கையாடப் படுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குப் பின்னர் உலமாக்களும் பொதுமக்களும் அமைதியான முறையில் நாடாளாவிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துதல் சிறந்தது!

ஸ்தாபகரின் இன்றைய வாரிசுகள் வக்பு சட்டங்களை, நம்பிக்கைப் பொறுப்பு அறக்கட்டளை விதிகளை மதித்து விவகாரத்தை சுமுகமாக தீர்விற்கு கொண்டுவர முன்வர வேண்டும், முஸ்லிம் சன்மார்க்க சிவில் அரசியல் தலைமைகளும் புத்திஜீவிகளும் குறிப்பாக சட்டத்தரணிகளும் உரிய தலையீடுகளை மேற்கொள்ள முன்வரல் வேண்டும்!

*மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 16.03.2023 SHARE
கபூரிய்யா அரபுக் கல்லூரியை பாதுகாக்க முஸ்லிம் தலைமைகளுக்கு அழைப்பு. கபூரிய்யா அரபுக் கல்லூரியை பாதுகாக்க முஸ்லிம் தலைமைகளுக்கு அழைப்பு. Reviewed by Madawala News on March 16, 2023 Rating: 5

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் தற்போது கடும் மழையும் வெள்ளமும் - பலர் பலி , ஏராளமான சேதங்கள் .



 பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி, 14 பேர் உயிரிழந்தனர்.


சான்லியுர்ஃபா மற்றும் அதியமான் மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால், வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அப்போது, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, ஒன்றோடொன்று மோதி உருக்குலைந்தன.


பூகம்பத்தால்  வீடுகளை இழந்த மக்கள் கொள்கலன்களிலும், கூடாரங்களிலும் வசித்துவரும் நிலையில், திடீர் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் தற்போது கடும் மழையும் வெள்ளமும் - பலர் பலி , ஏராளமான சேதங்கள் . பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில்  தற்போது கடும் மழையும் வெள்ளமும் - பலர் பலி , ஏராளமான சேதங்கள் . Reviewed by Madawala News on March 16, 2023 Rating: 5

“எனது மனைவி வெள்ளையாக இருப்பதால் நானும் வெள்ளையாக இருக்க வேண்டும்” என்றே கடன் அட்டை ஒன்றை திருடி வெண்மையாக்கும் கிரீமை வாங்கினேன் ; கைதான நபர் குருந்துவத்தை பொலிஸாிடம் தெரிவிப்பு.



விளையாட்டுக் கழகத்திற்கு வந்த ஒருவரின் கடன் அட்டையைப் பயன்படுத்தி 20,000 ரூபா பெறுமதியான முகத்தை வெண்மையாக்கும் கிரீம் ஒன்றை கொள்வனவு செய்த சந்தேகநபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (15) உத்தரவிட்டுள்ளது.


சிங்கள விளையாட்டுக் கழகத்தின் மதுபானக் கடையில் பணியாளராகப் பணியாற்றிய ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் உதயகுமார என்ற சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார்.


“எனது மனைவி வெள்ளையாக இருப்பதால் நானும் வெள்ளையாக இருக்க வேண்டும்” எனக் கூறி குறித்த கிரீமை கொள்வனவு செய்துள்ளதாக கைது செய்யப்பட்ட நபர் குருந்துவத்தை பொலிஸாிடம் தெரிவித்துள்ளார்.


முறைப்பாட்டாளர் கிளப்பிற்கு வந்து பரிவர்த்தனை செய்து விட்டு வெளியேறிய போது, ​​அவரது கிரெடிட் கார்ட் தொலைந்து போனதாகவும், சந்தேகநபர் அதனை பயன்படுத்தி குறித்த கிரீமை பெற்றுக் கொண்டதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்

“எனது மனைவி வெள்ளையாக இருப்பதால் நானும் வெள்ளையாக இருக்க வேண்டும்” என்றே கடன் அட்டை ஒன்றை திருடி வெண்மையாக்கும் கிரீமை வாங்கினேன் ; கைதான நபர் குருந்துவத்தை பொலிஸாிடம் தெரிவிப்பு. “எனது மனைவி வெள்ளையாக இருப்பதால் நானும் வெள்ளையாக இருக்க வேண்டும்”  என்றே கடன் அட்டை ஒன்றை திருடி வெண்மையாக்கும் கிரீமை வாங்கினேன் ; கைதான நபர் குருந்துவத்தை பொலிஸாிடம் தெரிவிப்பு. Reviewed by Madawala News on March 16, 2023 Rating: 5

கல்முனை மாநகர ஊழலுடன் தன்னை தொடர்புபடுத்தி பேஸ்புக்கில் எழுதியவர்களுக்கு 300 மில்லியன்கள் நஷ்ட இழப்பீட்டு கடிதம் அனுப்பிய கல்முனை முதல்வர்.

 ஊழல்கள் பற்றி பொதுவெளியில் எழுதிய சமூக ஆர்வலர்களுக்கு கல்முனை

கல்முனை மாநகர ஊழலுடன் தன்னை தொடர்புபடுத்தி பேஸ்புக்கில் எழுதியவர்களுக்கு 300 மில்லியன்கள் நஷ்ட இழப்பீட்டு கடிதம் அனுப்பிய கல்முனை முதல்வர். கல்முனை மாநகர  ஊழலுடன் தன்னை  தொடர்புபடுத்தி பேஸ்புக்கில் எழுதியவர்களுக்கு  300 மில்லியன்கள்  நஷ்ட இழப்பீட்டு  கடிதம் அனுப்பிய கல்முனை முதல்வர். Reviewed by Madawala News on March 16, 2023 Rating: 5

அல் மக்கியா மாணவி அம்ராவின் புதிய கண்டுபிடிப்பு .



 Solar Power Bekcup நவீன கண்டுபிடிப்பு.

(அல் மக்கியா மாணவி அம்ராவின் புதிய கண்டுபிடிப்பு)

இரத்தினபுரி அல் மக்கியா தேசிய பாடசாலையில் உயர்தரம் கற்கும் மாணவி M.A.F அம்ரா செயலிழந்த பெட்டரிகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், தொலைபேசியை மின் வெட்டு காலங்களில் சார்ஜ் செய்து கொள்ளவும் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்து சாதணைப்படைத்துள்ளார்.


பலங்கொடை ஜெய்லானி தேசிய பாடசாலையில் வருடாந்த வர்த்தக தினத்தை முன்னிட்டு இரத்தினபுரி பிரதேசத்தில் வர்த்தக பிரிவில் கல்வியை தொடரும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வண்ணம் புதிய நவீன பிரச்சினைகளுக்கு தீர்வாக உற்பத்தி ஒன்றை அறிமுகம் செய்யுமாறு மாணவர்களை கேட்டுகொண்டனர்.


இதன் போது அல் மக்கியா தேசிய பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம் மில்ஹான் , வர்த்தக பிரிவுக்கு பொருப்பான ஆசிரியர் எம்.எம்.எம் நுஸ்ஸாக் அவர்களும் மாணவர்களுக்கு இந்த வர்த்தக நிகழ்வு தொடர்பாக விழிப்பூட்டப்பட்டதுடன் , புதிய நவீன உற்பத்தி தொடர்பாக ஆலோசனை மற்றும் வழிகாட்டல் முன்வைக்கப்பட்டது.


இதன் போது M.A.F அம்ரா என்ற மாணவி  என்னும் பெயரில் புதிய ஒரு உற்பத்தியை அறிமுகம் செய்தார். இதன் போது  பலங்கொட ஜெய்லானி தேசிய பாடசாலையின் வர்த்தக நிகழ்வில் கலந்து கொண்ட பலங்கொட வலயகல்விப்பணிப்பாளர் G.G Abeywikrama அவர்களும், ஜெய்லானி தேசிய பாடசாலை பிரதி அதிபர், வர்த்தக பிரிவில் கற்பிக்கும் அனைத்து பாடசாலை ஆசிரியர்களும் பாராட்டினர்.


அதேபோன்று இந்நிகழ்ச்சியில் அம்ரா என்ற மாணவி முதலிடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.


இந்த கண்டுபிடிப்பை அகில இலங்கைரீதியில் அறிமுகம் மற்றும் விநியோகம் செய்ய தனது சொந்த செலவில் நிதி உதவியையும் அனுசரணையும் வழங்குவதாக பலங்கொடை வலயகல்விப்பணிப்பாளர் G.G Abeywikrama குறிப்பிட்டார்.


இந்த உற்பத்தியை கண்டுபிடிக்க M.A அப்துல்லாஹ் என்ற மாணவன் யோசனை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.


இந்த உற்பத்தியானது solar power bekcup என்று அறிமுகப்படுத்தப்படுவதோடு


⭕இவ்வுற்பத்தி மூலம் எமக்கு நாம் பயன்படுத்தி பாவனை குன்றிக் காணப்படும் பற்றரிகளை  மீள் பாவனைக்கு உட்படுத்த முடியும். மேலும் மின்குமிழ், தொலைபேசி என்பவற்றை மின்னேற்றம் ( charge) செய்யவும் முடியும்.


⭕இவ்வுற்பத்தியானது சூரிய கதிர்களை பயன்படுத்தி இடம்பெறும் ஒரு சூழல்நேயமான உற்பத்தியாகும்.


⭕இக்காலத்தின் பொருளாதார நிலைமைக்கு பொருத்தமான வகையில் மின்சார பாவனையை குறைப்பதற்கும், அதனை சேமிப்பதற்கும் உகந்த முறையில் இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


🛑 _எமது இவ்வுற்பத்தியானது குறைந்த விலையில் அதிகளவு பலனை தரக்கூடிய ஒரு முயற்சியாகும்._


*Cost For The Product*

Solar power backuper உற்பத்தியினை உற்பத்தி செய்தல், அதனை விநியோகம் செய்தல் மற்றும் ஊழியம் செய்யும் வேலையாற்கள் என அனைத்து விடயங்களுக்கும் இனங்க நாம் இவ்வுற்பத்தியினை *ரூபா 500* இற்கு விநியோகம் செய்யவுள்ளோம்.


☑️ ஒ௫ உற்பத்திக்கு பயன்படும் பொருட்களின் செலவு :- 300/=

☑️போக்குவரத்து மற்றும் ஊழியர் சம்பளத்திற்கு ஒதுக்கும்

தொகை(by one product) :- 100/=

☑️Profit :- 100/=


இவ்வுற்பத்தி மூலம் நாம் கவனம் செலுத்தும்  பிரிவினர்கள்


0️⃣1️⃣ வாலிபர்கள்


0️⃣2️⃣குடும்பத் தலைவர்கள்


முதலில் நாம் 1000 solar power backupers ஐ உற்பத்தி செய்யவுள்ளோம். அவற்றை இரத்தினபுரி மாவட்டம் முழுவதும் உள்ள வாலிபர்களையும் குடும்பத் தலைவர்களையும் கவ௫ம் விதத்தில் விநியோகிக்கவுள்ளோம்.


இவ்வுற்பத்தியினை சந்தைபடுத்தும் முறைகள்....

❎விற்பனையாளர்கள் (By Sales Man)


❎சமூக ஊடகம்(By Using Social medias)


ஏன் Solar Power Backuper ஏனைய உற்பத்திகளை விட சிறந்தது ❔

    உதாரணமாக பற்றரிகளை எடுப்போமயானால் ஒனறு ரூபா 100 இற்கு விற்கப்படும். அதனை சுமார் 02 மாதத்திற்கு பயன்படுத்தலாம். சாதாரணமாக ஒரு வீட்டில் 10 பயன்படுத்துவார்கள் எனின் ஒ௫ வ௫டத்திற்கு ஏற்படும் மொத்த செலவு ரூபா 6000 ஆகும்.


வெறும் ரூபா500 ஆன இவ்வுற்பத்தியினை நாம் பெற்றால் ஒரு வ௫டத்திற்கு சுமார் 5500/= சேமிக்கலாம்.


இவ்வுற்பத்தி சாதகமான விளைவை த௫மாயின் நாம் Solar Pole இனையும் தயாரிக்கவுள்ளோம்...

   

இந்த உற்பத்தி தொடர்பான விளம்பரம் மக்கியா தேசிய பாடசாலையில் Commerce unit யூடீப் தளத்தில் பார்வையிடலாம்.


ஆசிரியர் எம் எம் எம் நுஸ்ஸாக்

இர/அல் மக்கியா தேசிய பாடசாலை



அல் மக்கியா மாணவி அம்ராவின் புதிய கண்டுபிடிப்பு . அல் மக்கியா மாணவி அம்ராவின் புதிய கண்டுபிடிப்பு . Reviewed by Madawala News on March 16, 2023 Rating: 5

மட்டக்களப்பு கடலில் இருந்து படகு மூலம் அவுஸ்ரோலியாவுக்கு செல்ல முயற்சி... கர்ப்பினி பெண்கள், சிறுவர்கள் உட்பட 17 பேர் கைது.



சட்டவிரோதமான முறையில், படகொன்றின் மூலமாக வெளிநாட்டுக்குச் செல்லமுயன்றனர் மற்றும் அவர்களுக்கு உதவிகளை புரிந்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் கடலின் ஊடாக செல்வதற்கு வீடு ஒன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் 5 பெண்கள் 8ஆண்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்துவந்த ஒருவர் உட்பட 17 பேரை நேற்று புதன்கிழமை (15) இரவு மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ்கிராமத்திலுள்ள வீடு ஒன்றை சம்பவதினமான நேற்று இரவு 7 மணியளவில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலாக பொலிஸ் குழுவினர் சுற்றிவளைத்தனர்.


இதன் போது சட்டவிரோத ஆள்கடத்தல் மாபியாவைச் சேர்ந்த ஒருவர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 16 பேரிடம் பணத்தை வாங்கி கொண்டு மட்டக்களப்பு கடலில் இருந்து படகு மூலம் அவுஸ்ரோலியாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து அவர்களை அழைத்துவந்து மட்டக்களப்பு சுவிஸ்கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று அங்கு கடந்த ஒரு மாதகாலமாக தங்கவைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.


இதில் 3 சிறுவர்கள்
3 கர்ப்பிணி பெண்கள் உட்பட 5 பெண்கள் 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு வீடு வாடகைக்கு பெற்றுக் கொடுத்து உதவிபுரிந்துவந்த ஒருவர் உட்பட 15 பேரை கைது செய்ததுடன் படகு மூலம் செல்வதற்காக கொள்வனவு செய்யப்பட்டு வைத்திருந்த சமபோஷா, பிஸ்கற் பக்கற்கள் சீனி போன்ற பொருடக்கள் மற்றும் ஆடைகளையும் மீட்டு ஒப்படைத்துள்ளதாகவும். இவர்களை இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குறற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.
மட்டக்களப்பு கடலில் இருந்து படகு மூலம் அவுஸ்ரோலியாவுக்கு செல்ல முயற்சி... கர்ப்பினி பெண்கள், சிறுவர்கள் உட்பட 17 பேர் கைது. மட்டக்களப்பு கடலில் இருந்து படகு மூலம்  அவுஸ்ரோலியாவுக்கு செல்ல முயற்சி... கர்ப்பினி பெண்கள், சிறுவர்கள் உட்பட 17 பேர் கைது. Reviewed by Madawala News on March 16, 2023 Rating: 5

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளைகளில்இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.



நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளைகளில்இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மேல், வடமேல்,வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி, நுவரேலியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் காலி, களுத்துறை மற்றும் நுவரேலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு கரையோரப் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
****************************

புத்தளம் தொடக்கம் கொழும்பு,காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து தென் கிழக்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளைகளில்இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளைகளில்இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. Reviewed by Madawala News on March 16, 2023 Rating: 5

பாடசாலை மாணவர்களை அச்சுறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வரும் கும்பலை கைது செய்ய பொலீசார் நடவடிக்கை.



பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த கும்பல் ஒன்றினை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.


யாழ்.நகர் புற பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கும்பல் ஒன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு மாணவர்களை உள்ளாக்கி வருவது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் கும்பலை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.


குறித்த நபர்கள் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் , அவற்றினை காணொளி பதிவாக கையடக்க தொலைபேசிகளில் பதிவு செய்து , அதனை காண்பித்து தொடர்ந்து தமது இச்சைகளுக்கு மாணவர்களை பயன்படுத்தி வந்ததுடன் , மாணவர்களிடம் இருந்து பணமும் பெற்று வந்துள்ளனர்.


இவை குறித்த தகவல்கள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அக்கும்பலை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்தவற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

பாடசாலை மாணவர்களை அச்சுறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வரும் கும்பலை கைது செய்ய பொலீசார் நடவடிக்கை.  பாடசாலை மாணவர்களை அச்சுறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வரும்  கும்பலை கைது செய்ய  பொலீசார் நடவடிக்கை. Reviewed by Madawala News on March 15, 2023 Rating: 5

4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரானின் மனைவி, பிணையில் விடுதலை.



ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை

பாறுக் ஷிஹான்

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதாகி கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிக்க கல்முனை மேல் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக வழக்கு விசாரணைகள் கடந்த 4 ஆண்டுகளாக இடம்பெற்று வந்துள்ளதுடன் குற்ற ஒப்புதல் வாதப்பிரதிவாதங்கள் பிணை விண்ணப்பம் என தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன.

இதன்படி வழக்கானது இன்று விசாரணைக்காக எடுக்கப்பட்ட வேளை பிரதிவாதி ஸஹ்ரானின் மனைவி சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ரூஸ்தி ஹபீப் தலைமையில் சட்டத்தரணிகளான றிஸ்வான் உவைஸ் அர்சாத் குழுவினர் ஆஜராகி இருந்தனர்.இன்றைய விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் வழக்கினை நெறிப்படுத்திய அரச சட்டவாதி லாபீர் நெறிப்படுத்தலுடன் ஸஹ்ரானின் மனைவியினால் ஏற்கனவே வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல்வாக்குமூலம் தொடர்பில் ஆட்சேபனை எழுப்பப்பட்டு பிரதிவாதியின் சட்டத்தரணிகளினால் நீண்ட நேர சமர்ப்பணங்கள் விண்ணப்பங்கள் முன்வைக்கப்பட்டன.மேலும் ஸஹ்ரானின் மனைவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அது தொடர்பில் எடுக்கப்பட்ட வாக்குமூலங்களும் எவ்வாறு எடுக்கப்பட்டது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டதுடன் வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன.

தொடர்ந்து பிணைக்கோரிக்கை மற்றும் ஏன் பிணை வழங்கப்பட வேண்டும் என பிரதிவாதி சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பங்களை சுட்டி காட்டி சமர்ப்பித்தனர்.இதன்போது சுமார் 4 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட விடயத்தை விசேட காரணியாக ஏற்றுக்கொண்டும் இதர காரணங்களை முன்வைத்தும் பிணை வழங்கப்பட வேண்டும் என விசேட கோரிக்கையை பிரதிவாதியின் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியதை அடுத்து பிணை கோரிக்கை மன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.

இதன் போது 25 000 ருபாய் பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 25 இலட்சம் ருபாய் பெறுமதியான இரு சரீர பிணைகளில் செல்ல அனுமதித்த நீதிபதி பிரதிவாதி வெளிநாடு செல்லவும் பிணையாளர்கள் வெளிநாடு செல்லவும் தடை உத்தரவு பிறப்பித்தார்.மேலும் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி ஆஜராகி கையொப்பமிடல் வேண்டும் என உத்தரவிட்டார்.

சுமார் 4 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட விடயத்தை விசேட காரணியாக ஏற்றுக்கொண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நீல் இத்தவல சட்டத்தரணி ஹிஜாப் இஸ்புல்லா விவகாரத்தில் வழங்கிய தீர்ப்பை மையப்படுத்தி கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி பிணை தொடர்பான அறிவிப்பை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

காலை முதல் மாலை வரை இராணுவ மேஜர் ( ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி மற்றும் பிள்ளையை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தவர் ) ஒருவரிடம் சாட்சியங்கள் குறுக்கு விசாரணைகள் வாக்குமூலங்கள் பெறப்பட்டதை தொடர்ந்து மீண்டும் நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸினால் எதிர்வரும் மே மாதம் 17, 18 திகதிக்கு குறித்த வழக்கு மறுதவணை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரானின் மனைவி, பிணையில் விடுதலை. 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரானின் மனைவி, பிணையில் விடுதலை. Reviewed by Madawala News on March 15, 2023 Rating: 5

குளிரூட்டும் லொரியில் (Freezer Truck) ஆயிரம் கிலோ பீடி இலை.



இலங்கை கடற்படையினரால் நேற்று முந்தினம் 13 ஆம் திகதி இரவு புத்தளம், முக்குதொடுவாவ கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 1128 கிலோவுக்கும் அதிக பீடி இலைகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


குறித்த சந்தேகநபர், பீடி இலைகள் மற்றும் லொறி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.


கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில், கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற் பகுதியை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.


கடற்படைக்கு கிடைத்த தகவலின்படி, நேற்றுமுந்தினம் 13 ஆம் திகதி இரவு புத்தளம், முக்குதொடுவாவ கடற்பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனத்திற்கு சொந்தமான உடப்புவ கடற்படை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றை (Freezer Truck) சோதனை செய்தனர்.


அந்த லொறியில் சட்டவிரோதமாக கொண்டு செல்வதற்காக முப்பத்தாறு (36) பைகளில் பொதி செய்யப்பட்ட 1128 கிலோ 300 கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்ட நிலையில், சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருபது (20) பைகளில் பொதி செய்யப்பட்ட 503 கிலோ கொத்தமல்லியும், நான்கு (04) பைகளில் பொதி செய்யப்பட்ட 99 கிலோ 100 கிராம் காய்ந்த மிளகாய்களும் கடற்படையினரால் கைபற்றப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர், லொறி, பீடி இலைகள், காய்ந்த மிளகாய் மற்றும் கொத்தமல்லி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குளிரூட்டும் லொரியில் (Freezer Truck) ஆயிரம் கிலோ பீடி இலை. குளிரூட்டும் லொரியில் (Freezer Truck) ஆயிரம் கிலோ பீடி இலை. Reviewed by Madawala News on March 15, 2023 Rating: 5

காத்தான்குடி பற்றி ஊடகங்கள் காட்டியதும்.. பயணத்தில் நாம் அனுபவித்த அழகிய தருணங்களும்.



ஒரு பெளத்த மத சகோதரரின் காத்தான்குடியைப் பற்றிய வர்ணனை

மட்டக்களப்பு பயணம் முடிந்து ஒருவாரம் கடந்தும் காத்தான்குடியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் FB யில் பதியப்படாத நிலையில் இந்த பதிவை எழுதுகிறேன்.

ஒரு வார்த்தை எழுதாமல் காத்தான்குடியில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்களை வைத்து ஒரு பதிவு போட்டால் அது பெரிய தவறு. அதற்குக் காரணம் காத்தான்குடியைப் பற்றி அங்கு செல்வதற்கு முன் வைத்திருந்த படம் அங்கு சென்ற பிறகு முற்றிலும் மாறியது.

காத்தான்குடி என்பது இலங்கையில் அண்மைக்காலமாக மதப் பிரச்சாரத்துடன் அடிக்கடி வாசிக்கப்படும் இடம். சரியாகச் சொல்வதென்றால் தெற்கில் காத்தான்குடியை ஒரு குட்டி அரபு என்றே அழைத்தோம். அதற்குக் காரணம் காத்தான்குடி நகரம் இலங்கையில் வேறு எங்கும் இல்லாத இடமாகவும், சாலையின் நடுவில் பேரீச்ச மரங்கள் நடப்பட்டு, அரேபிய கட்டிடக்கலை அம்சங்கள் நிறைந்த இடமாகவும் இருந்தது.

நான் இந்தப் ஊரைப் பார்க்கச் செல்ல விரும்பினேன், ஆனால் நான் அதை பல முறை யோசித்தேன், நாம் உடுத்தும் உடைக்கு ஊரில் பிரச்சனை வருமா, அந்த மக்கள் நம்மை என்ன சொல்வார்கள், மொழிப்பிரச்சனை வருமா என பல பிரச்சனைகளால் அது நடந்தது.

எது எப்படி இருந்தாலும் மட்டக்களப்பு விஜயத்தின் போது கண்டிப்பாக காத்தான்குடியை பார்க்கலாம் என்று இருவரும் முன்கூட்டியே திட்டமிட்டு நீண்ட காற்சட்டையும் தலையை மறைக்கும் ஷோலும் அணிந்து காத்தான்குடி நகருக்கு வந்தோம்.
பாலஸ்தீன பாணியில் கட்டப்பட்ட காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு முதலில் சென்றோம் எப்படியிருந்தாலும் நாங்கள் முஸ்லிம்கள் இல்லை என்பதால் வெளியில் இருந்து மசூதிக்குச் செல்லும் திட்டம். இல்லை மசூதியின் முகப்பில் இருந்து அதைப் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, ​​மசூதியின் பக்கவாட்டில் இருந்து அரபு உடை அணிந்த முஸ்லிம் பெரியவர் ஒருவர் எங்கள் இடத்திற்கு வந்தார். திட்டுவார்கள் என்ற எண்ணம் இருந்தது, ஆனால் அந்த நபரின் முகத்தில் புன்னகையைக் கண்டதும் அந்த பயம் மறைந்தது. வெளியில் இருந்து பார்க்காமல் பள்ளிவாசலுக்கு உள்ளே வரச் சொன்னார். நாங்கள் புறப்படும்போது, நீங்கள் முஸ்லீம் இல்லை என்பதால் உங்கள் தலையை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்று எங்களிடம் கூறினார். இதற்கிடையில் பள்ளிவாசலின் பாதுகாப்பு அதிகாரியும் வந்து எங்களுடன் கைகுலுக்கினார். அவர் எங்களை பள்ளிவாசலுக்குள் அழைத்துச் சென்று அது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் வழிபாட்டுத் தலங்களை எங்களுக்குக் காட்டினார், எங்களுக்காக புகைப்படம் கூட எடுத்தார். இஸ்லாமிய மசூதிக்குள் நாங்கள் சென்றது அதுவே முதல் முறை. சொல்லப்போனால், மற்ற மத வழிபாட்டுத் தலங்களில் இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.

அதன் பின்னர் காத்தான்குடி மரபுரிமை அருங்காட்சியகத்திற்கு சென்றோம். ஹிஸ்புல்லாஹ் என்ற நாடாளுமன்ற உறுப்பினரால் இது உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சியகத்தில் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு நான்கு மாடிகளுக்கு மேல் காட்டப்பட்டுள்ளது. பல்வேறு சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் கொண்ட அருங்காட்சியகத்தைப் பார்ப்பது ஒரு சிறந்த அனுபவம் மற்றும் நிறைய அறிவு.

அங்கிருந்து காத்தான்குடி கடற்கரைக்குச் சென்றோம். சவூதி அரேபியாவில் கடற்கரைக்குச் செல்வது போல. முஸ்லீம் குடும்பங்கள் கடற்கரையைச் சுற்றி அமர்ந்து வெவ்வேறு உணவுகளை உண்ணும் போது சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கிறார்கள். இது ஒரு வித்தியாசமான அனுபவம்.

அங்கிருந்து காத்தான்குடி நகரின் தொடக்கப் பகுதிக்குத் திரும்பி, காத்தான்குடி நுழைவாயிலுக்கு முன்னால் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு, முஸ்லிம்களின் வழக்கமான ஸ்ட்ரீட் ஃபுட்ஸ் சாப்பிட்டுவிட்டு, காத்தான்குடி கைத்தறிப் புடவைகளை எடுத்துக் கொண்டு மீண்டும் ஹோட்டலுக்கு வரப் புறப்பட்டோம்.

கிழக்கில் உள்ள முஸ்லிம்களைப் பற்றி ஊடகங்கள் மற்றும் சமூக வலைப்பின்னல்கள் நம் மனதில் உருவாக்கிய கதைக்கும் உண்மையான கதைக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உண்மையில் அனுபவிக்க வேண்டும் என்பதால் இந்த பயணத்தைப் பற்றி பேசுவது முக்கியம் என்று நினைத்தேன். உண்மையில் கிழக்கு மாகாணத்தில் எம்மைப் போன்ற இலங்கையர்களின் ஒரு குழுவே இருக்கின்றது, ஆனால் சிலர் மேடையில் பேசுவது போல் பயமுறுத்தும் தீவிரவாதிகளின் குழு அல்ல. அப்படிப்பட்டவர்கள் இருக்க வேண்டும். அநேகமாக இன்றும் அங்கே இருக்கலாம். முன்னால் உட்காருவார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்களை இந்தப் பயணத்தில் சந்திக்கவில்லை. காத்தான்குடியில், புர்கா மற்றும் ஹிஜாப்களால் சூழப்பட்ட வாழ்க்கையைத் தாண்டி உண்மையில் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழும் முஸ்லிம் ஆண்களும் பெண்களும் ஒரு குழுவைக் கண்டோம். முஸ்லிம் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை அனுபவிக்கும் வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்தது. அதில் பெரும் மகிழ்ச்சி இருக்கிறது.

உண்மையில் சிங்களம், தமிழ், முஸ்லிம், மலாய், பர்கர் ஆகிய தேசங்கள் அடங்கிய இலங்கைத் தேசம் எவ்வளவு அழகானது என்பதை இது போன்ற இடங்களில்தான் உணரமுடிகிறது.

(Author unknown)

Al Aqsa Grand Jumma Masjith Kattankudy Official
காத்தான்குடி பற்றி ஊடகங்கள் காட்டியதும்.. பயணத்தில் நாம் அனுபவித்த அழகிய தருணங்களும். காத்தான்குடி பற்றி ஊடகங்கள் காட்டியதும்.. பயணத்தில் நாம் அனுபவித்த அழகிய தருணங்களும். Reviewed by Madawala News on March 15, 2023 Rating: 5

ரஷ்ய மற்றும் சீன சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்தாலும் மிகக் குறைந்த பணத்தையே செலவிடுகின்றனர். ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளை அதிகம் வரவழைக்குமாறு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள்.



இந்த நாட்டிற்கு ரஷ்ய மற்றும் சீன சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்தாலும், அவர்கள் மிகக் குறைந்த பணத்தையே செலவிடுவதாக சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதனால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க அரசாங்கம் தலையிட வேண்டும் என சங்கத்தின் செயலாளர் திரு.சுமித் உபேசிறி தெரிவித்துள்ளார்.


ஹோட்டல்கள் தற்போது ரஷ்ய மற்றும் சீன சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியுள்ளன, ஆனால் அவர்கள் மிகக் குறைந்த பணத்தை செலவிடுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.


ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வரமாட்டார்கள் என்றும் ரஷ்ய சுற்றுலா பயணிகள் கடற்கரையில் இருந்தால் ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு கூட வரமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.


அதன் காரணமாக மேற்கத்திய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ரஷ்ய மற்றும் சீன சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்தாலும் மிகக் குறைந்த பணத்தையே செலவிடுகின்றனர். ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளை அதிகம் வரவழைக்குமாறு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள். ரஷ்ய மற்றும் சீன சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்தாலும் மிகக் குறைந்த பணத்தையே செலவிடுகின்றனர். ஐரோப்பிய  சுற்றுலாப் பயணிகளை அதிகம் வரவழைக்குமாறு  ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள். Reviewed by Madawala News on March 15, 2023 Rating: 5

இரகசியமாக பாடசாலையின் பெண்கள் விடுதிக்குள் நுழைந்த குற்றத்தில் மாணவர்கள் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட சம்பவம். கண்டி பகுதி தனியார் பாடசாலையில் சம்பவம்



கண்டி பொக்கவெல பகுதியில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் உட்பட ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனியார் பாடசாலையில் கல்வி கற்கும் 15 இலிருந்து 17 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் பாடசாலை விடுதிக்குள் வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபரால் ஒழுக்கக் கேடு காரணமாக இரக்கமின்றி தாக்கப்பட்டதையடுத்து கண்டிப் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணை ஒன்றை துவக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஞாயிற்றுக்கிழமை இரவு ஐந்து மாணவர்கள் இரகசியமாக பாடசாலையின் பெண்கள் விடுதிக்குள் நுழைந்ததனால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் பட்டதாக விசாரணைகளில் தெரிய வருகிறது. ஐந்து மாணவிகளை சந்திக்க அவர்களின் சம்மதத்துடன் குறித்த மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் கடுமையான தாக்குதலுக்கும் கொடுமைக்கும் ஆளாகியிருப்பதுடன் அவர்களின் தலைமுடியும் வெட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்டவர்களுள் விடுதி காப்பாளர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப் பட்ட பின்னர் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரையில் பொலிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக கண்டி சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
இரகசியமாக பாடசாலையின் பெண்கள் விடுதிக்குள் நுழைந்த குற்றத்தில் மாணவர்கள் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட சம்பவம். கண்டி பகுதி தனியார் பாடசாலையில் சம்பவம் இரகசியமாக பாடசாலையின் பெண்கள் விடுதிக்குள் நுழைந்த குற்றத்தில் மாணவர்கள் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட சம்பவம். கண்டி பகுதி  தனியார் பாடசாலையில் சம்பவம் Reviewed by Madawala News on March 15, 2023 Rating: 5

இன்றைய வானிலை அறிக்கை...



 ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு  மற்றும் ஹம்பாந்தோட்டை  மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.


சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும்  நுவரேலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய  வாய்ப்புக் காணப்படுகின்றது.  


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 


கடல் பிராந்தியங்களில் 

****************************


புத்தளம் தொடக்கம் கொழும்பு,காலி, பொத்துவில்  ஊடாக மட்டக்களப்பு  வரையான கடல் பிராந்தியங்களின் பல  இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.  


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து தென் கிழக்குத் திசையை நோக்கி காற்று வீசும். 


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 


கலாநிதி மொஹமட் சாலிஹீன்,

சிரேஸ்ட வானிலை அதிகாரி. 

இன்றைய வானிலை அறிக்கை... இன்றைய வானிலை அறிக்கை... Reviewed by Madawala News on March 15, 2023 Rating: 5
Powered by Blogger.