VIDEO : இனவாதத்தை தூண்டும் அம்பிட்டிய சுமணரத்ன தேரரையும் கைது செய்யவேண்டும் ; வியாழேந்திரன் கோரிக்கை
மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யவேண்டும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலத்தில் வியாழேந்திரன் உண்ணாவிரதம் இருந்தபோது , மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வியாழேந்திரனுடன் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவருடன் உண்ணாவிரதம் இருந்த நிலையில் அம்பிட்டிய தேரருக்கு ஆதரவாக வியாழேந்திரனும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்,
தமிழர்கள் தொடர்பாகவும் தமிழர்களது சமயம், கலாசாரம் தொடர்பாகவும் மிக மோசமான கருத்துக்களை வெளியிட்டு வந்த ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள 04 வருட கடூழிய சிறைத்தண்டனை வரவேற்கக்கூடிய ஒன்று என்றும் வியாழேந்திரன் கூறினார் .
இவ்வாறான நிலையில் , மட்டக்களப்பிலும் இனவாத போக்குடைய அம்பிட்டிய தேரர் இருக்கின்றார் என்றும், அவர்களுக்கும் இது போன்று தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என தனக்கு ஆதரவு வழங்கிய தேரரை கைது செய்ய வேண்டுமென இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிததுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவர், மகள் மற்றும் மகன் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டில் இருந்த பெண் தாக்கப்பட்டு கொலை .
கடுவெல (Kaduwela), கொத்தலாவல, பட்டியாவத்த வீதியிலுள்ள வீட்டில் இரத்தக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அஜந்தா என்ற 51 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது கணவர், மகள் மற்றும் மகன் ஆகியோர் காலையில் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் பெண் தனியாக இருந்துள்ளார். இவரும் கடுவெல நகரில் பணிபுரிந்து வருகின்றார்.
வழமையாக காலை 11.00 மணியளவில் வேலைக்கு செல்வதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பெண்ணின் தலையின் பின்புறத்தில் ஒரு பெரிய காயம் மற்றும் அவரது முகத்தில் கீறல்கள் இருந்தன. அவர் அணிந்திருந்த தங்க ஆபரணமும் காணாமல் போனதையும், வீட்டில் எதையோ தேடியதற்கான தடயங்களும் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், வீட்டில் திருடுவதற்காக புகுந்த யாரேனும் ஒருவர் தாக்கியதமையால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சனத் நிஷாந்தவின் மனைவிக்கு பொதுஜன பெரமுனவில் பதவி.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் மறைந்த சனத் நிஷாந்தவின் மனைவி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
சனத் நிஷாந்தவின் மனைவியான திருமதி சாமரி பெரேராவும் சட்டத்தரணியாக கடமையாற்றுகின்றார்.
பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபையின் தலைவர்களாக ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் இருவர் நியமிக்கப்படவுள்ளனர்.
தற்போது ஒழுக்காற்று சபைக்கு ஏழு உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
உடலால் இணைந்த இரட்டைச் சகோதரிகள் அபி மற்றும் பிரிட்னி தாயாக போவதாக தெரிவிப்பு
உடலால் இணைந்த இரட்டையர்கள் ஆன அபி மற்றும் பிரிட்னி என்ற அமெரிக்க இரட்டைச் சகோதரிகள் இருவரும் தாயாக மாறத் தயாராக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு சகோதரிகளுக்கும் இரண்டு தலைகள் மற்றும் இரண்டு இதயங்கள் உள்ளன, ஆனால் ஒரே ஒரு உடல் மட்டுமே.
34 வயதான அபி மற்றும் பிரிட்னி ஆகியோர் தொழில் ரீதியாக ஆசிரியர்கள்.
Tv ரியாலிட்டி ஷோ மூலம் அபி மற்றும் பிரிட்னி அமெரிக்கர்கள் மற்றும் உலகம் முழுவதும் பிரபலமடைந்தனர்.
அப்பியும் பிரிட்னியும் திருமணம் செய்து கொண்ட செய்தியும் தற்போது பகிரங்கமாகியுள்ளது,
ஆனால் அவர்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக டெய்லிமெயில் இணையதளம் தெரிவித்துள்ளது.
அப்பி மற்றும் பிரிட்னியை திருமணம் முடித்தவர் 33 வயதான ஜோஷ் பவுலிங் எனும் அமெரிக்க இராணுவ அதிகாரி ஆவார் .
தெற்கில் பாதாள உலக சந்தேக நபர்களின் 10 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன.
காலி, அம்பலாங்கொட மற்றும் அஹுங்கல்ல பிரதேசங்களில் பாதாள உலக சந்தேக நபர்களின் 10 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றில் 2 மீன்பிடி படகுகள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நிலம் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விசாரணைகள் ஆபரேஷன் யுக்திய கீழ் நடத்தப்படுகின்றன.
மூச்சகரவண்டி சாரதி ஒருவரிடம் 500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் விளையாடும் பார்லிமெண்ட் பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டி இன்று நடைபெறுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன், பார்லிமெண்ட் பிரீமியர் லீக் தொடர் பெலவத்த புத்ததாஸ விளையாட்டரங்கில் இன்று இடம்பெறவுள்ளது.
இந்த தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக நாடாளுமன்ற பணிக்குழாமினரும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதியும், இரண்டாம் திகதியும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் முதலாம் திகதி ஆயுர்வேத சட்டத்தின் கீழான கட்டளைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதேநேரம், இரண்டாம் திகதி பரேட் திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதமும், கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு சட்டம் தொடர்பான விவாதமும் இடம்பெறவுள்ளன
நாட்டில் கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டது.
கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபடுபவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று அவர் கூறினார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட டொக்டர் ஜானகி விதானபத்திரன இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் ..
பரந்த கூட்டணியின் முன்மொழிவின் பேரில் ஜனாதிபதி வேட்புமனுவை ஏற்றுக்கொள்வதற்கான
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்; உதவிக்கு அழைப்பு விடுப்பு
காசாவில் பஞ்சம் ஒன்று ஏற்படும் அச்சுறுத்தல் அதிகரித்து போர் நிறுத்தம் ஒன்றுக்கான சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.
முற்றுகையில் உள்ள காசாவுக்கு உதவிகள் தேவைப்படுவதோடு அந்தப் பகுதியில் வானில் இருந்து தொடர்ந்து உதவிகளை போடுவதாக அமெரிக்கா கூறியுள்ளது. எனினும் அவ்வாறு விழும் உதவிகளை பெறும் முயற்சியில் 18 பேர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், வானில் இருந்து உதவிகளை போடுவதை நிறுத்தும்படி ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்னும் இஸ்ரேலிய தரைப்படை நுழையாத பகுதியாக இருக்கும் தெற்கு காசாவின் ரபாவில் இஸ்ரேலின் வான் தாக்குதலை அடுத்து இரவு வானில் பாரிய தீப்பிழப்பு வெளியானது. இங்கு 1.5 மில்லியன் மக்கள் நிரம்பி வழிவதோடு, பெரும்பாலானவர்கள் காசாவின் தெற்கு விளிம்பு வரை இடம்பெயர்ந்து எகிப்துடனான எல்லையில் இருக்கும் இந்தப் பகுதியை அடைந்துள்ளனர்.
வடக்கு காசாவில் உள்ள காசா நகரிலும் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களால் நேற்று கறும்புகை வெளியான வண்ணம் இருந்தது. இங்குள்ள காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபாவில் இஸ்ரேலியப் படை ஒரு வாரத்துக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த புதன்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 66 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் ரபா மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட மூவரும் உள்ளடங்குகின்றனர்.
அதேபோன்று காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 76 பேர் கொல்லப்பட்டு மேலும் 102 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்படி ஆறு மாதங்களாக நீடிக்கும் போரில் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 32,490 ஆக அதிகரித்துள்ளது.
காசாவில் அவசர போர் நிறுத்தம் ஒன்றை வலியுறுத்தி பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு நாட்கள் கடந்திருந்தபோதும் மோதல்களில் எந்தத் தணிவும் ஏற்படவில்லை.
கான் யூனிஸ் நகரில் இருக்கும் மேலும் இரு மருத்துவமனைகளை இஸ்ரேலியப் படை சுற்றிவளைத்திருப்பதோடு இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் தற்காலிக முகாம் ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி இருக்கும் நிலையில் அவர்கள் உயிர் ஆபத்தை சந்தித்து வருவதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் எச்சரித்துள்ளது.
போருக்கு மத்தியில் மக்கள் சிக்கியுள்ள சூழலில், வானில் இருந்து உதவிகள் போடுவதை நிறுத்துமாறு நன்கொடை நாடுகளை ஹமாஸ் கேட்டுள்ளது. கடலில் விழுந்த இந்த உதவிப் பொதிகளை பெற முயன்ற 12 பலஸ்தீனர்கள் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து ஹமாஸ் இந்தக் கோரிக்கையை விடுத்தது.
உதவியைக் பெற முயன்ற மேலும் ஆறு பேர் நெரிசலில் சிக்க உயிரிழந்ததாக ஹமாஸ் மற்றும் சுவிஸை தளமாகக் கொண்ட மனித உரிமை கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளன.
‘ஒரு டின் மீன் கலனை பெறுவதற்காக மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்’ என்று காசா குடியிருப்பாளரான முஹமது அல் சபாவி ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். உதவிப் பொதி ஒன்றில் இருந்து இவ்வாறான ஒரு கலனை பெற்று அதனை கையில் வைத்துக் கொண்டே அவர் இதனைத் தெரிவித்தார்.
காசாவுக்குள் மேலும் உதவி வாகனங்களை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஹமாஸ், இது காசாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சத்தை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி வெடித்த காசா போரினால் அந்தப் பகுதியில் கிட்டத்தட்ட அனைத்து உட்கட்டமைப்புகளும் அழிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள 2.4 மில்லியன் மக்கள் தொகையில் அனைவருக்கும் மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐ.நா கூறுகிறது.
விரைவான பஞ்சம் ஒன்றை தடுப்பதற்கு வான் அல்லது கடல் வழிகளை விடவும் வீதிகள் மூலம் காசாவுக்கு உதவிகள் விரைவாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று ஐ.நா சிறுவர் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
அவசியமான உதவிகள் ஒரு கிலோமீற்றர் தூரத்திலேயே தங்கி உள்ளன. உதவிகளை நிரப்பிய லொறிகள் எகிப்துடனான காசாவின் தெற்கு எல்லையில் காத்துக் கிடக்கின்றன என்று யுனிசெப் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் சுட்டிக்காட்டினார்.
உதவிகளை தரை வழியாக எடுத்துச் செல்ல தொடர்ந்து முயற்சிப்பதாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கௌன்சில், தொடர்ந்தும் வானில் இருந்து உதவிகளை போடுவதாக கூறியுள்ளது.
ஜோர்தான், எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஜெர்மனி நாடுகாளில் அனுப்பப்பட்ட விமானங்களில் இருந்து பாராசூட் மூலம் வீசப்பட்ட உதவிப் பொதிகளை நோக்கி மக்கள் குவியும் காட்சியை ஏ.எப்.பி. தொலைகாட்சி வெளியிட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேல் தனது போர் நடவடிக்கையை விட்டுக்கொடுக்காது தொடர்ந்து செயற்பட்டு வருவதோடு கட்டாரில் இடம்பெற்று வரும் போர் நிறுத்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தையும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நீடித்து வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் முன்னெப்போதும் அனுபவிக்காத அரசியல் தனிமைப்படுத்தலை எதிர்கொண்டிருப்பதாகவும் பாதுகாப்புச் சபையில் அமெரிக்காவின் பாதுகாப்பை இழந்திருப்பதாகவும் ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே குறிப்பட்டுள்ளார்.
மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலிய படை நேற்று நடத்திய சுற்றிவளைப்புகளில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. இதன்போது இஸ்ரேலின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக ஜெனின் நகரில் இஸ்ரேலிய படையின் துப்பாக்கிச் சூட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும் பதற்றம் நீடித்து வருகிறது.
மறுபுறம் வடக்கு இஸ்ரேல் மீது லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய சரமாரி ரொக்கெட் தாக்குதல்களில் இஸ்ரேலியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தெற்கு லெபனானில் கடந்த செவ்வாய்க்கிழமை சுகாதார மையம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏழு மருத்துவ உதவியாளர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாகவே ஹிஸ்புல்லா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
அனுர குமார திஸாநாயக்க அவர்களே ஜனாதிபதி பதவிக்கு மிகப்பொருத்தமானவர் ..
அனுர குமார திஸாநாய்க்க அவர்களே ஜனாதிபதி பதவிக்கு மிகப்பொருத்தமானவர் என சங்கைக்குறிய அகுநொச்சியே குமார கஸ்ஸப தேரர் குறிப்பிட்டார்.
அனுராதபுர மாவட்ட பௌத்த பிக்குகள் கூட்டமைப்பு நடத்திய ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
நாட்டின் தேசிய சொத்துகளை விற்பனை செய்து ஆட்சியாளர்கள் மக்களுடன் விளையாடக்கூடாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
THE BATTLE OF BADR - இன்று பத்ரு போர்க்கள நினைவு நாள்.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானம்
இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு விசாரணையின் பின் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள ஞானசார தேரரை பிணையில் எடுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக திங்கட்கிழமை மேன்முறையீடு செய்யப்பட உள்ள நிலையில் அவர்க்கு பிணை கோரப்பட உள்ளதாக மாகல்கந்தே சுதந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
காப்புறுதி இழப்பீடு பெற, தன் விடுதி அறைக்கதவு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் முறைப்பாடு செய்த பிரித்தானிய பிரஜை.
வீடு ஒன்றினுள் தூ*க்கிலிட்ட நிலையில் இளம் யுவதி ஒருவர் சடலமாக மீட்பு
மோதலை தடுக்க சென்றவர்களை சிறையில் அடைக்கும் புதுமையான நாடு இது
மோதலை தடுக்க சென்றவர்களை சிறையில் அடைக்கும் புதுமையான நாடு இது என ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல்
இனிமேல் சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு உடனடியாக பாடசாலைகளில் உயர்தரக் கல்விக்கான வகுப்புகள் ஆரம்பமாகும் ; கல்வி அமைச்சர்
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்தர கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படுவதற்கு முன்னதாக க.பொ.த. உயர்தரக் கல்விக்கான வகுப்புகளை ஆரம்பிப்பதன் மூலம், பாடசாலைகளில் உயர்தரக் கல்விக்காக தோற்றும் 2 மாணவக் குழுக்கள் ஒன்றாக இணைக்கப்படுவர்.
இது எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தாது.
அதற்கான இட முகாமைத்துவமும் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களினால் ஒழுங்கு செய்யப்படும்.
தற்போது கல்வியில், முன்னேற்றம் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
அதற்காக தேவையான மாற்றங்களும் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்
பெண் ஒருவருடன் லாட்ஜ் இல் தங்கி இருந்த தேரர் பொலிஸாரால் கைது.
தியத்தலாவ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் பெண் ஒருவருடன் இருந்த தேரர் ஒருவர் தியத்தலாவ பொலிஸ் குழுவினால் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பொரலந்தவில் உள்ள ஒரு விகாரையில் வசிக்கும் நாற்பத்தாறு வயதான தேரர் ஆவார்.
அந்தப் பெண் அதே பகுதியில் வசிக்கும் நாற்பது வயது திருமணமான பெண்.
நபர் ஒருவர் பெண் ஒருவர் மாற்றுப் பெயருடன் லாட்ஜ் ஒன்றிற்கு வந்துள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைக்கு மாதாந்தம் 17,014 ரூபாய் அவசியம் என தொகைமதிப்பு - புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிப்பு /
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான வறுமைக்கோடு தொடர்பான புதிய அட்டவணையை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மாதாந்தம் 17,014 ரூபாய் அவசியம் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய மட்டத்தில் இந்த தொகை அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாவட்டங்கள் தோறும் இந்த தொகையில் மாற்றம் ஏற்படுகின்றது.
கொழும்பு மாவட்டத்தில் தனிநபரின் மாதாந்த செலவு 18,350 ரூபாவாக காணப்படுகின்றது.
இதற்கமைய, இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களில் அதிக செலவீனத்தைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் அமைந்துள்ளது.
குறைந்த செலவீனத்தைக் கொண்ட மாவட்டமாக மொனராகலை மாவட்டம் பதிவாகியுள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் தமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு, ஒருவருக்கு மாதாந்தம் 16,268 ரூபாய் தேவைப்படுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நான்கு பேர் கொண்ட குடும்பமொன்றுக்கு தங்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மாதாந்தம் 68,560 ரூபாய் தேவைப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மட்டக்களப்பு RDHS வரலாற்றில் முதல்தடவையாக திறந்தவெளியில் இப்தார்.
நாட்டின் சில பிரதேசங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும் அதேவேளை பல பிரதேசங்களில் மழை பெய்ய வாய்ப்பு .
மேல்,வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் காலி மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
மத்திய,சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
****************************
மட்டக்களப்பு தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்குஅப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.
மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.