நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி TIN ஒன்றை வழங்க போகிறார்.



அடுத்த வருடம் முதல் அரசாங்கம் மக்களுக்கு விசேட பரிசு ஒன்றை வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஊடாக 'TIN' ஒன்றை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இன்று (17) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

'அடுத்த வருடம் அனைவருக்கும் அரசாங்கம் என்ன கொடுக்க போகிறது. TIN ஒன்றை கொடுக்க போகிறது. Tax Identification Number (TIN). ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி 2024 ஆம் ஆண்டில் அனைவருக்கும் டின் ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த டின் இல்லாவிட்டால் வங்கி கணக்கு ஒன்றை கூட திறக்க முடியாது. காணி ஒன்றை வாங்க கூட முடியாது. இதுதான் இவரின் பங்களிப்பு.
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி TIN ஒன்றை வழங்க போகிறார். நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி TIN ஒன்றை வழங்க போகிறார். Reviewed by Madawala News on November 17, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.