இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யுமாறு ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ICC க்கு அனுப்பிய கடிதங்கள்.

இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யுமாறு ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம், சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் கோரிக்கை விடுத்து அனுப்பியுள்ள கடிதங்களின் பிரதிகளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ளார்.


6,7 மற்றும் 9 ஆம் திகதிகளில் அனுப்பப்பட்டதாக கூறப்படும் குறித்த கடிதங்களின் பிரதிகளே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.


அதே நேரம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கடிதத்தை மேற்கோள்காட்டி விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவும் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்


இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், இது நாட்டை காட்டிக்கொடுக்கும் முயற்சி எனவும் குறிப்பிட்டார்.






இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யுமாறு ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ICC க்கு அனுப்பிய கடிதங்கள். இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யுமாறு ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ICC க்கு அனுப்பிய கடிதங்கள். Reviewed by Madawala News on November 19, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.