நாங்கள் எப்போதும் உங்களோடு நிற்கிறோம் ; தோல்வியடைந்த இந்திய அணிக்கு நரேந்திர மோடி ஆறுதல்.



இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 வெற்றி பெற்று, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால் இந்திய அணி வீரர்கள் மிகவும் கவலை அடைந்தனர். சிராஜ் உள்ளிட்ட சில வீரர்கள் கண்ணீர் விட்டனர்.

இந்திய பிரதமர் மோடி வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு உலகக் கோப்பையை வழங்கினார். பின்னர், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "உலகக் கோப்பை முழுவதும் உங்களுடைய திறமை மற்றும் உறுதி குறிப்பிடத்தகுந்தது. நீங்கள் சிறந்த ஸ்பிரிட் உடன் விளையாடி நாட்டிற்கு மகத்தான பெருமை சேர்த்தீர்கள். நாங்கள் எப்போதும் உங்களோடு நிற்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் எப்போதும் உங்களோடு நிற்கிறோம் ; தோல்வியடைந்த இந்திய அணிக்கு நரேந்திர மோடி ஆறுதல். நாங்கள் எப்போதும் உங்களோடு நிற்கிறோம் ; தோல்வியடைந்த இந்திய அணிக்கு நரேந்திர மோடி ஆறுதல். Reviewed by Madawala News on November 20, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.