ஒழுக்கத்துடன் ( தலை முடி வெட்டி) பாடசாலைக்கு வருமாறு மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து ஆத்திரமடைந்த மாணவர்கள் சிலர் , ஆசிரியரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம், புத்தளத்தில் இடம்பெற்றது அறிந்ததே..
புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்விப்பொதுத் தராதர சாதாரண தரத்தில் கல்விப்பயிலும் மாணவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தினர்.
புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஒழுக்கத்துக்குப் பொறுப்பான ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்தே ஆசிரியரை மாணவர்கள் தாக்கினர்.
இந்நிலையில் குறிப்பிட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆசிரியருக்கு ஆதரவாகவும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராகவும் அப்பாடசாலை சக ஆசிரியர்கள், அதிபர், நலன் விரும்பிகள் மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன் அமைதி ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் ஆசிரியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யபட வேண்டும் ' ஒழுக்கமற்ற மாணவ சமூகம் எமக்கு வேண்டாம் உட்பட பல கோரிக்கைகள் விடுக்கப்ட்டன.