வீதியில் கண்டெடுத்த நான்கு இலட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு.



வீதியில் கண்டெடுத்த நான்கு இலட்சம் ரூபாய் பணத்தை, பொலிஸார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று (22) மதியம் காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது.


காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதான வீதி, இரும்புத் தைக்கா பள்ளிவாயலுக்கு முன்னால், கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பணத்தை, காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எம் மொய்னுல்ஹக் மற்றும் கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த தெய்வதீபன் என்ற ஓட்டோ சாரதியும் கண்டெடுத்து இருந்தனர்.


குறித்த பணத்தை

காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம் சியாமிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து, குற்றத்தடுப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தார்.

கடைக்காரர் ஒருவர் சீனி கொள்வனவுக்காகக் கொடுத்த மேற்படி பணத்தை, லொறிச்
சாரதியான நபர் கொண்டு
வரும்போதே காணாமல்
போயுள்ளது.

பணத்தைத்
தொலைத்த நபர், மிகுந்த
நன்றி உணர்வுடன்
பணத்தைப் பெற்றுக்
கொண்டார்.


பொலிஸ்
நிலைய குற்றத்தடுப்பு
பொறுப்பதிகாரி எம்.
எஸ்.ஏ.எம் றஹீம் உட்பட
பொலிஸ் அதிகாரிகளும்
இந்த நிகழ்வில் கலந்து
கொண்டனர
வீதியில் கண்டெடுத்த நான்கு இலட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு. வீதியில் கண்டெடுத்த நான்கு இலட்சம்  உரியவர்களிடம் ஒப்படைப்பு. Reviewed by Madawala News on May 23, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.