அலி சப்ரி ரஹீமிடம் இருந்து மூன்றரை கிலோ தங்கத்துடன் 91 ஸ்மார்ட் போன்களும் சிக்கியது ; சுங்க திணைக்களம் தெரிவிப்பு.
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட்போன்களின் பெறுமதி குறித்த அப்டேட் ஒன்றை இலங்கை சுங்க திணைக்களம் வழங்கியுள்ளது.
3 கிலோவுக்கு மேல் எடையுள்ள தங்கத்தின் மதிப்பு ரூ. 74 மில்லியன். மேலும், அவரது பயணப் பையில் இருந்த 91 ஸ்மார்ட் போன்களை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர், அவற்றின் மதிப்பு ரூ. 4.2 மில்லியன்.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், 78 மில்லியன் ரூபா பெறுமதியான அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்களை எடுத்துச் சென்றமை கண்டுபிடிக்கப் பட்டதையடுத்து, இன்று (23) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
அலி சப்ரி ரஹீமிடம் இருந்து மூன்றரை கிலோ தங்கத்துடன் 91 ஸ்மார்ட் போன்களும் சிக்கியது ; சுங்க திணைக்களம் தெரிவிப்பு.
Reviewed by Madawala News
on
May 23, 2023
Rating: