நாட்டின் பல பகுதிகளிலும் வெயிலுடன் கூடிய வெப்பமான காலநிலை... சில இடங்களில் பிற்பகல் / இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு.



நாட்டின் பல பகுதிகளிலும் வெயிலுடன் கூடிய வெப்பமான காலநிலை காணப்பட்டு வரும் நிலையில்,

 சப்ரகமுவ,மேல்,வடமேல் மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா,  காலி, மாத்தறை மற்றும் மன்னார்  மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 


கடல் பிராந்தியங்களில் 

****************************


மன்னார் தொடக்கம்  புத்தளம், கொழும்பு, காலி  ஊடாக மாத்தறை  வரையான  கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் வடமேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 


கலாநிதி மொஹமட் சாலிஹீன்,

சிரேஸ்ட வானிலை அதிகாரி. 

நாட்டின் பல பகுதிகளிலும் வெயிலுடன் கூடிய வெப்பமான காலநிலை... சில இடங்களில் பிற்பகல் / இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு.   நாட்டின் பல பகுதிகளிலும் வெயிலுடன் கூடிய வெப்பமான காலநிலை...  சில இடங்களில்  பிற்பகல் / இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு. Reviewed by Madawala News on March 28, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.