கபூரிய்யா அரபுக் கல்லூரியை பாதுகாக்க முஸ்லிம் தலைமைகளுக்கு அழைப்பு!
இன்னும் எட்டு வருடங்களில் நூற்றாண்டு காணவிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் முத்தான சொத்து, இஸ்லாமிய ஷரீஆ கற்கைகளின் கலங்கரை விளக்கு கபூரிய்யா அரபுக் கல்லூரி வளாகமும் அதற்காக ஸ்தாபகர் அல்ஹாஜ் அப்துல் கபூர் (ரஹ்) அவர்களால் வக்பு செய்யப்பட்ட சொத்துக்களும் இன்றைய வாரிசுகளால் முறைகேடாக கையாடப் படுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குப் பின்னர் உலமாக்களும் பொதுமக்களும் அமைதியான முறையில் நாடாளாவிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துதல் சிறந்தது!
ஸ்தாபகரின் இன்றைய வாரிசுகள் வக்பு சட்டங்களை, நம்பிக்கைப் பொறுப்பு அறக்கட்டளை விதிகளை மதித்து விவகாரத்தை சுமுகமாக தீர்விற்கு கொண்டுவர முன்வர வேண்டும், முஸ்லிம் சன்மார்க்க சிவில் அரசியல் தலைமைகளும் புத்திஜீவிகளும் குறிப்பாக சட்டத்தரணிகளும் உரிய தலையீடுகளை மேற்கொள்ள முன்வரல் வேண்டும்!
*மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 16.03.2023 SHARE
கபூரிய்யா அரபுக் கல்லூரியை பாதுகாக்க முஸ்லிம் தலைமைகளுக்கு அழைப்பு.
Reviewed by Madawala News
on
March 16, 2023
Rating: