யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பூனேறின் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முக்கம்பன் பகுதியில் நேற்று (23) நோயாளர் காவு வண்டியில் ( ஆம்புலன்ஸ்) மோதியதில் 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
வீதியில் நடந்து சென்ற போது மோதப்பட்ட சிறுவன் தூக்கி வீசப்பட்டு, யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பூனேறின் செம்மன்குட்டு பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளான் .
அம்புலன்ஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
ஆம்புலன்ஸ் மோதியதில் 9 வயது சிறுவன் உயிரிழப்பு.. அம்புலன்ஸ் சாரதி கைது.
Reviewed by Madawala News
on
January 24, 2023
Rating: