பாடசாலை மாணவர்களுக்கு 500 மடிக்கணினிகளை இலவசமாக வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை ரஞ்சன் ராமநாயக்க ஆரம்பித்தார்.
பிரபல நடிகரும்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க பாடசாலை மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமெரிக்காவில் தங்கியிருந்த போது கிட்டத்தட்ட 500 மடிக்கணினிகள் நன்கொடையாக வழங்கப்பட்டதாக சமூக ஊடக நேரடி வீடியோவில், ranjan ராமநாயக்க கூறினார்.
இந்த மடிக்கணினிகள் அமெரிக்காவில் வசிக்கும் வர்த்தகர்கள் மற்றும் சாதாரண பிரஜைகள் உட்பட இலங்கையர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மடிக்கணினி விநியோகம் தொடர்பில் பொய்யான விளம்பரங்களை பரப்பி பொதுமக்களை ஏமாற்றுவதற்கு பலர் முயற்சிப்பதாக தமக்கு தெரியவந்துள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டினார்.
மடிக்கணினிகள் விற்பனைக்கு இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் போலியான விளம்பரங்களை மறுத்தார்.
எதிர்காலத்தில் ஜப்பான், நியூசிலாந்து, தென் கொரியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்று நிகழ்ச்சி நடத்த விரும்புவதாகவும், விநியோகத்திற்காக அதிக மடிக்கணினிகளைப் பெற எதிர்பார்ப்பதாகவும் ராமநாயக்க தெரிவித்தார்.
மடிக்கணினிகள் தேவைப்படும் பிள்ளைகள் பாடசாலை அதிபரிடம் உத்தியோகபூர்வ கோரிக்கையை எழுத்துமூலமாக முன்வைத்து தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக தம்மைத் தொடர்புகொண்டு மடிக்கணினிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கியுள்ளதால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்போது தீவிர அரசியலில் ஈடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்களுக்கு 500 மடிக்கணினிகளை இலவசமாக வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை ரஞ்சன் ராமநாயக்க ஆரம்பித்தார்.
Reviewed by Madawala News
on
January 24, 2023
Rating:

No comments: