மாவனெல்ல பொலிஸ் நிலைய பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை, பாலியல் வன்கொடுமை செய்ததாக முறைப்பாடு.



மாவனெல்ல பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் 27 வயதுடைய இராணுவ வீரர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்திற்கு வந்த இருவர் தன்னிடம் பல ஆபாச வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் முறைப்பாடு அளித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது ஒருவர் தன்னைப் பற்றி மற்றவரிடம் மிகவும் கேவலமான முறையில் பேசிக் கொண்டிருந்ததாக பெண் கான்ஸ்டபிள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் இராணுவ வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மாவனெல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளார்.
மாவனெல்ல பொலிஸ் நிலைய பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை, பாலியல் வன்கொடுமை செய்ததாக முறைப்பாடு. மாவனெல்ல பொலிஸ் நிலைய பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை,  பாலியல் வன்கொடுமை செய்ததாக முறைப்பாடு. Reviewed by Madawala News on December 02, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.