துப்பாக்கியுடன் வந்த கொள்ளையர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற சம்பவம்.



மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் ஏந்திய கும்பலொன்று பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர்.

களுத்துறை வடக்கு, பல்வேறு முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பதிகாரி நிஷான் குமார வசிக்கும் பொந்துபிட்டிய, வெலிபன்ன குருந்த வீதியில் அமைந்துள்ள வீட்டிலேயே குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் இன்று (03) வீட்டுக்குள் புகுந்த ஆயுதம் தாங்கிய கும்பல், வீட்டில் இருந்த 2 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தங்க ஆபரணங்களைத் திருடிச் சென்றுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளை கும்பலின் போது பொலிஸ் பொறுப்பதிகாரி வீட்டில் இல்லை, வீட்டில் இருந்த பொலிஸ் பொறுப்பதிகாரியின் மனைவி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு காயம் அடைந்தார்.

சந்தேகநபர்கள் T56 துப்பாக்கியை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
துப்பாக்கியுடன் வந்த கொள்ளையர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற சம்பவம். துப்பாக்கியுடன்  வந்த கொள்ளையர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற சம்பவம். Reviewed by Madawala News on December 03, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.