சுற்றுலாத்துறையில் இருந்து அதிகபட்ச வருவாயைப் பெறுவதற்காக இலங்கையில் பார்கள், ஹோட்டல்கள் மற்றும் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டும் என்று சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“இலங்கை 24 மணி நேரமும் திறந்திருக்கும்” நாடாக மாற்றப்பட வேண்டும்” என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.
“கடைகள், உணவகங்கள் மற்றும் பார்கள் இரவு 10.30 மணிக்குள் மூடப்பட்டால் சுற்றுலாத் துறையை மேம்படுத்த முடியாது. எங்களிடம் இரவு பொருளாதாரம் இல்லையென்றால், சுற்றுலாப் பயணிகளை எங்களால் பணம் செலவழிக்க முடியாது, ”என்று அவர் கூறினார்.
மதுபானசாலைகளை 24 மணி நேரமும் திறக்க அனுமதிக்க வேண்டும்: டயானா
Reviewed by Madawala News
on
December 02, 2022
Rating: