- கந்தளாய் யூசுப் -
அனுராதபுரம் மாவட்டத்தில் ஹொரவப்பொத்தானை பிரதேச சபைக்குட்பட்ட முக்குர குளம் கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றார்கள் .
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் தென்னை வாழை சோளம் பயிரிடப்பட்டுள்ளது .
இக் கிராமத்தில் யானை வேலி இல்லாத காரணத்தினால் யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது .
இன்று (22) அதிகாலை தோட்டத்தித்திற்குள் புகுந்த யானைக்கூட்டம் அங்கிருந்த தென்னை மரங்களை சேதப்படுத்தியும் வேறோடு சாய்த்தும், காய்த்திருந்த மா மரத்தின் கிளைகளை ஒடித்து முற்றாக சேதப்படுத்தியதோடு அங்கிருந்த வாழை மரங்களையும் பிடிங்கியுள்ளது.
சுமார் 4 யானைகளுக்கு மேல் வந்து இவ்அட்டகாசத்தினை மேற்கொண்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
,ஒவ்வொரு நாளும் காட்டு யானைகள் தோட்டப்பகுதிக்கு வரும் யானை கூட்டத்தால் மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து சமந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவெரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்கள்.