பொலீஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்.... பின் தொடர்ந்து சிறை அறை வரைக்கும் வந்து விடுவிக்கப்படும் வரை தங்கிய வளர்ப்பு நாய்.



ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வளர்ப்பு நாய் தனது எஜமானரைப் பின்தொடர்ந்து அவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று அவர் விடுவிக்கப்படும் வரை அங்கேயே தங்கியிருந்த சம்பவம் புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.


குடும்பத் தகராறு தொடர்பாக 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்குக் கிடைத்த அழைப்பின் பேரில் பொலிஸ் நடமாடும் ரோந்துப் பிரிவினர் புலத்சிங்கள, மொல்காவ வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஒருவரைக் கைது செய்துள்ளனர்.


அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர். சில நிமிடங்களுக்குப் பின்னர் , பொலிஸ் அதிகாரிகள் அறைக்கு அருகில் ஒரு நாய் படுத்திருப்பதைக் கண்டனர். நாயை பலமுறை விரட்டியடித்தாலும் அது மீண்டும் வந்து கொண்டே இருந்தது. பின்னர், குறித்த நாய் சிறை கூண்டில் அடைக்கப்பட்ட நபரின் செல்ல நாய் என்பதை பொலிஸார் கண்டறிந்தனர்.


பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வந்ததையடுத்து, சந்தேக நபரை வெளியே அழைத்துச் செல்வதற்காக பொலிசார் சிறை கூண்டை திறந்தனர், நாய் உடனடியாக அதன் எஜமானரிடம் விரைந்தது.


பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கடுமையான எச்சரிக்கையின் பின்னர் சந்தேக நபரை விடுவித்துள்ளதுடன், அதன் போது நாய் தனது மகிழ்ச்சியைக் காட்டி குரைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

பொலீஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்.... பின் தொடர்ந்து சிறை அறை வரைக்கும் வந்து விடுவிக்கப்படும் வரை தங்கிய வளர்ப்பு நாய்.  பொலீஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்....  பின் தொடர்ந்து சிறை அறை வரைக்கும் வந்து விடுவிக்கப்படும் வரை தங்கிய வளர்ப்பு நாய். Reviewed by Madawala News on November 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.