(எஸ்.அஷ்ரப்கான்)
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக அதிகாலை முதல் பனிமூட்டம் நிலவி வருகிறது.
இதனால் மாவட்டத்தில் பிரதான வீதியால் செல்லும் வாகன சாரதிகள், பொதுமக்கள், போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இந்த பனி மூட்டம் அதிகாலையில் இருந்து சுமார் 7 தொடக்கம் 8 மணி வரை நீடிக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது, சம்மாந்துறை, காரைதீவு ,
நிந்தவூர்,ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் போன்ற பல பிரதேசங்களிலும் அதிகமாக காணப்படுகிறது.
எஸ்.அஷ்ரப்கான்
அதிகாலையில் மலையக பிரதேசம் போல் காட்சி தரும் அம்பாறை மாவட்டம்.
Reviewed by Madawala News
on
November 24, 2022
Rating: