மொறவக்க பிரதேசத்தில் 15 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA) அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாலியல் துஷ்பிரயோகத்தின் போது இளைஞனால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் பாதிக்கப்பட்ட பாடசாலை அதிபர் உட்பட பலருக்கு வட்ஸ்அப்பில் பகிரப்பட்டதையடுத்தே குறித்த இளைஞர“ கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது இல்லத்தில் வைத்து 11 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்ற பின்னர் சந்தேகநபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பான வெளிப்படையான பாலியல் விடயங்களை தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வீடியோ காட்சிகளை அவர் தனது நண்பர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பாடசாலை அதிபர் உட்பட பலருடன் வட்ஸ்அப் மூலம் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சந்தேகநபர் மொரவக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்து வீடியோ பதிவாக்கி வட்ஸ்அப்பில் பகிர்ந்த இளைஞன் கைது.
Reviewed by Madawala News
on
November 25, 2022
Rating: