பணம் அச்சிடுவதில் பாரிய வீழ்ச்சி... கடந்த ஆண்டில் 341 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டது. இந்த வருடம் 47 பில்லியன் மட்டுமே அச்சிடப்பட்டது.
இலங்கை மத்திய வங்கி கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பணம் அச்சிடுவதை பெருமளவில் குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் 341 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்ட போதிலும் இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 47 பில்லியன் ரூபாய்கள் மாத்திரமே அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாணயச் சபையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்தார்.
பணம் அச்சிடுவதில் பாரிய வீழ்ச்சி... கடந்த ஆண்டில் 341 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டது. இந்த வருடம் 47 பில்லியன் மட்டுமே அச்சிடப்பட்டது.
Reviewed by Madawala News
on
November 24, 2022
Rating:
No comments: