கிரிக்கட் விளையாட்டில் பிரகாசித்த சாய்ந்தமருதைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை ஓமான் நாட்டு விளையாட்டு கழகம் தெரிவு செய்து அழைத்தது.
அஸ்ஹர் இப்றாஹிம்
சாய்ந்தமருதைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஓமான் நாட்டிலுள்ள விளையாட்டுக் கழகமொன்றுக்காக ஒப்பந்த அடிப்படையில் கிரிக்கட் விளையாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டு ஓமான் பயணமானார்கள்.
சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த பல முன்னணி விளையாட்டுக்கழகங்களிலும் , கல்வி கற்ற காலத்தில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி கிரிக்கட் அணியிலும் பங்கேற்று பல வெற்றிகளுக்கு காரணமாக அமைந்த இவர்கள் பிரதேசமட்டம் , மாவட்ட மட்டம் , மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்டத்திலும் கடின பந்து கிறிக்கட் துறையில் பிரகாசித்தவர்களாகும்.
ஜே.எச்.அப்லால் காரியப்பர் , எம்.சஜாத் , எம்.ஏ.எம்.றஸ்பாஸ் ஆகிய மூன்று இளைஞர்களும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்
கிரிக்கட் விளையாட்டில் பிரகாசித்த சாய்ந்தமருதைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை ஓமான் நாட்டு விளையாட்டு கழகம் தெரிவு செய்து அழைத்தது.
Reviewed by Madawala News
on
October 03, 2022
Rating: