தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஒரே நாளில் அதிகூடிய வசூல் சாதனை படைத்தது.


இந்த வருடம் நாள் ஒன்றில் அதிகூடிய வருமானத்தை ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்பட்ட

உலக சிறுவர் தினத்தில் தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஈட்டியுள்ளது.


இதன்படி, 50 லட்சத்து 80 ஆயிரத்து 377 ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.


இதற்கு இணையாக ஏனைய சகல மிருகக்காட்சிசாலைகளிலும் நாள் ஒன்றில் அதிகூடிய வருமானம் ஈட்ட முடிந்ததாக விவசாய, வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


இதற்கமைய, பின்னவல யானைகள் சரணாலயத்தில் 9 லட்சத்து 47 ஆயிரம் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.


பின்னவல மிருகக்காட்சிசாலையில் ஒன்பது இலட்சத்து 49 ஆயிரத்து 200 ரூபாவும், ரிதியகம சஃபாரி பூங்காவில் எட்டு இலட்சத்து 56 ஆயிரம் ரூபாவும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளன.

தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஒரே நாளில் அதிகூடிய வசூல் சாதனை படைத்தது. தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஒரே நாளில் அதிகூடிய வசூல் சாதனை படைத்தது. Reviewed by Madawala News on October 05, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.