தனது காற்சட்டைக்குள் கமெராவை சூட்சுமமாக மறைத்து, பெண்களை போட்டோ / வீடியோ எடுத்து வந்த நபர் கைது.



தனது காற்சட்டைக்குள் கமெராவை சூட்சுமமாக மறைத்து வைத்து அதன் மூலம் பெண்களை

படம் பிடித்தார் எனக் கூறப்படும் நபரொருவரை பிடபெத்தர பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் பஸ் நடத்துனராக பணியாற்றியவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


நீளக் காற்சட்டையின் கீழ் பகுதியில் சந்தேக நபர் கமெராவை சூட்சுமமாக பொருத்தி, அதன் மூலம் பெண்களை வீடியோ எடுத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.


கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் பிடபெத்தர பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.


சந்தேக நபரை மொரவக்க நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது காற்சட்டைக்குள் கமெராவை சூட்சுமமாக மறைத்து, பெண்களை போட்டோ / வீடியோ எடுத்து வந்த நபர் கைது. தனது காற்சட்டைக்குள் கமெராவை சூட்சுமமாக மறைத்து,  பெண்களை போட்டோ  / வீடியோ  எடுத்து வந்த நபர் கைது. Reviewed by Madawala News on October 10, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.