யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீட்டில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று சனிக்கிழமை அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்தனர்.
வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது 30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது 26) என்ற இருவருமே சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தம்பதி உறங்கிய அறையில் தீ பற்றி எரிவதைக் கண்ட வீட்டிலிருந்தவர்கள் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அறையில் உறங்கிக் கொண்டிருந்த தாம்பதியினர் தீக்காயங்களுடன் சடலமாக மீட்பு. #இலங்கை
Reviewed by Madawala News
on
October 01, 2022
Rating: