கொழும்பில் உள்ள பல முக்கிய இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி அண்மையில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (01) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
1955 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க அரச இரகசியச் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ், கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி வெளியிட்ட அதி உயர் பாதுகாப்பு வலயங்களின் பிரகடன வர்த்தமானியே இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
முன் வைத்த காலை பின்வைத்து வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்த ஜனாதிபதி..
Reviewed by Madawala News
on
October 01, 2022
Rating: