இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மக்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
இந்திய அரசாங்கத்திற்கும், அந்நாட்டு மக்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் மோர்பி பகுதியில் நேற்று (30) பிற்பகல் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் சுமார் 140 நபர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
குஜராத் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மக்களுக்காக இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
Reviewed by Madawala News
on
October 31, 2022
Rating: