மலசலகூட உபகரணங்களை திருடிய சம்பவத்தில் நான்கு பேர் பொலிஸாரால் கைது .



 ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலங்கண்டி பிரதேசத்திலுள்ள மண்டபம் ஒன்றில்   பொருத்தப்பட்டிருந்த

மலசலகூட உபகரணங்களை திருடிய சம்பவம் தொடர்பில் நால்வர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த 1,25,000 ரூபாய் பெறுமதியான  மலசலகூட உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர

மலசலகூட உபகரணங்களை திருடிய சம்பவத்தில் நான்கு பேர் பொலிஸாரால் கைது . மலசலகூட உபகரணங்களை திருடிய சம்பவத்தில் நான்கு பேர் பொலிஸாரால் கைது . Reviewed by Madawala News on October 07, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.