திருடச்சென்ற வீட்டில் சமைத்து சாப்பிட்டு மது அருந்திவிட்டு உறங்கிய திருடர்கள்..



வீடொன்றில் திருடச் சென்ற இருவர் வீட்டில் சமைத்து சாப்பிட்டு, அங்கிருந்த மதுபானத்தை அருந்தி, மறுநாள் காலை வரை படுத்து உறங்கிய சம்பவமொன்று யாழ்ப்பாணம் மூளாய் பகுதியில் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இவர்களில் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். மற்றையவர் தப்பியோடியுள்ளார்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


யாழ்ப்பாணம் மூளாய் பகுதியிலுள்ள வீடொன்றில் வசிப்பவர்கள், கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டைவிட்டு வெளியே சென்றிருந்த போது, இரவு வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் வீட்டினுள் மதுபான போத்தல்களை கண்டதும் அதனை அருந்திவிட்டு, சமைத்து உணவருந்திய பின்னர் போதையில் நன்றாக நித்திரைகொண்டுள்ளனர்.


திருடச் சென்ற வீட்டிலேயே ஆழ்ந்த உறக்கம் கொண்ட இவர்களை காலையில் வீட்டார் வந்து பார்த்த போது, வீட்டினுள் இருவர் உறக்கத்தில் இருப்பதை கண்டுள்ளனர். உடனடியாக அயலவர்களின் உதவியுடன் அவர்களை பிடிக்க முற்பட்டபோது அவர்கள் தப்பியோடியுள்ளனர்.


அயலவர்கள் துரத்தி சென்ற போது ஒருவர் மாத்திரமே சிக்கியுள்ளார்.மற்றையவர் தப்பி சென்றுள்ளார். மடக்கி பிடிக்கப்பட்டவர் வட்டுக்கோட்டை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைகளின் போது அந்த நபர் சுன்னாகம் பகுதியை சேர்ந்தவரெனவும், அவருடன் கூட வந்தவர் மூளாய் பகுதியை சேர்ந்தவரெனவும், அவருக்கு ஏற்கனவே நீதிமன்ற பிடியாணை உள்ளதாகவும் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தப்பியோடிய நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


யாழ்.விசேட நிருபர்

திருடச்சென்ற வீட்டில் சமைத்து சாப்பிட்டு மது அருந்திவிட்டு உறங்கிய திருடர்கள்.. திருடச்சென்ற வீட்டில் சமைத்து சாப்பிட்டு மது அருந்திவிட்டு உறங்கிய திருடர்கள்.. Reviewed by Madawala News on October 28, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.