மே 9 ஆம் திகதி கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவிற்கு ஒரு கோடி ரூபா நட்டஈடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்.
படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவிற்கு
10 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
மே மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் நிட்டம்புவில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பாதுகாப்பு அதிகாரிக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் கூறினார்.
மே 9 ஆம் திகதி கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவிற்கு ஒரு கோடி ரூபா நட்டஈடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்.
Reviewed by Madawala News
on
October 21, 2022
Rating: